அரவிந்த் என் அறை நண்பன்.சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவனுக்கு, அவன் கம்பெனிகளின் கிளைகள் எங்கெங்கே இருக்கின்றன, எந்த பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதெல்லாம் கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம். ஆனால் அலன் சாலி, லூயி பிலிப், குரொக்கடைல், பேசிக் ஷோ ரூம்கள் எல்லாம் எங்கெங்கு இருக்கின்றன, அங்கே எவ்வளவு ஆபர், செகண்ட் சேல்ஸ் எப்போது என்ற தகவல்கள் எல்லாம்
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.
அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.
ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.
“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”
கூட வாடா
என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.
ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.
”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.
அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.
என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.
இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க
”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.
எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.
ஆனால் அவனோ,
“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.
அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.
ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.
வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.
இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.
துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.
இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.
பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.
நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.
மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.
என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.
இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா என்று.
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.
அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.
ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.
“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”
கூட வாடா
என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.
ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.
”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.
அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.
என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.
இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க
”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.
எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.
ஆனால் அவனோ,
“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.
அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.
ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.
வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.
இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.
துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.
இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.
பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.
நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.
மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.
என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.
இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா என்று.