August 16, 2012

தேவர் மகன் – சில நினைவுகள்



தீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ் பேச/எழுதப் படும் இடங்களிலெல்லாம் அடிபட்டுக்கொண்டே தான் இருந்து வருகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன் வந்த இரண்டு கமலின் படங்களும் (குணா, சிங்காரவேலன்) எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனால் இதே நேரத்தில் ரஜினியின் தளபதி, மன்னன், அண்ணாமலை ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்றிருந்தன. பார்வையாளராக இருந்து ரசிகராக மாறும் வயதில் இருந்த சிறுவர்கள் எல்லாம் ரஜினியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் எஸ் பி முத்துராமன் யூனிட் பெனிபிட் பண்டுக்காக ரஜினி நடித்துக் கொண்டிருந்த படம் பாண்டியன்.
92 தீபாவளிக்கு இந்த இரு படங்களுடன் திருமதி பழனிச்சாமி, ராசுக்குட்டி ஆகிய படங்களும் வெளிவர இருந்தன.

சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடிப்பது, இஞ்சி இடுப்பழகி பாடல் பதிவு பற்றிய குமுதம் அட்டைப்படக் கட்டுரை, பொள்ளாச்சியில் தேர் செட், கண்மாய் செட் என வழக்கமான பில்ட் அப்புகள் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஒரு பட பாடலின் வெற்றியை அப்போது தீர்மானிக்க இருந்த வழி கேசட் விற்பனை. 60 நிமிடம் ஓடும் கேசட்டில் 12/13 பாடல்கள் பதியலாம் என்பதால் இரண்டு படங்களின் பாடல்களைப் பதிந்து தருவார்கள். கிட்டத்தட்ட இது திருட்டு வி சி டி போலத்தான். ஆனால் அதை அப்போது (இப்போதும்) அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே செய்து வருகிறார்கள். (பாழாய்ப் போன காப்பிரைட் லா). ஒரு படத்தின் பாடல் பயங்கர ஹிட் எனில் அதனுடன் காம்பினேஷனாக லொப்பை பாடல்கள் உள்ள படங்களையே பதிந்து விற்பார்கள்.

தேவர்மகன் பாடல்கள் வெளியான போது அது எங்கள் ஏரியாவில் அவ்வளவு ஹிட்டாகவில்லை. (ஆனால் ஒரு பாடல் மட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் தேசிய கீதமாய் ஆனது). எங்கு பார்த்தாலும் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாவும், ஜும்பா ஜெயிப்பது இந்த பாண்டியனேவும் தான். காம்பினேசன் கேசட்டுகளில் எல்லாம் பாண்டியன் ஏ சைடிலும்  மற்ற படங்கள் பி சைடிலும் இருந்தன.

படம் வெளியானது. ஊர்க்காரர்களுடன் சேர்ந்து தீபாவளியன்று அதி காலையில் காக்கிச் சட்டை கமல் மன்ற டிக்கட்டுகளை வினியோகிப்பதற்காக தியேட்டருக்கு போயாகிவிட்டது. உடன் நாலு பைகள். அதில் சீராக கிழிக்கப்பட்ட ராயல் பூடான், சிக்கிம் லாட்டரிச்சீட்டுகள்.

கமலின் ரயில்வே ஸ்டேஷன் எண்டரிக்கு சீட்டுக்களை வீச ஆரம்பித்தோம். சிவாஜியைக் கண்டவுடன் பம்மியது கமல் மட்டுமல்ல நாங்களும்தான். அதன்பின் இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது ஒரு முறை வீசினோம்.

போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.

மதியம் தீபாவளியின் முக்கிய சடங்கான ஜே பி ஹோட்டல் வான் கோழி பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து டேபிளில் ராஜபந்தா ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் உட்கார்ந்திருந்தார். பாண்டியன் எப்படி என்று கேட்டதற்கு “அண்ணாமலை அளவுக்கு இல்லைஎன்றார்.  சிங்காரவேலனை விட தேவர் மகன் நல்லாயிருக்கு என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னோம்.

பின் கல்லூரி நண்பர்களுடன் இரண்டாம் முறை பார்த்தபோதுதான் கவனிக்காமல் விட்ட பல விஷயங்கள் தென்பட்டன.

அதுவரை நகரப் படங்களுக்கே பெரும்பான்மையாக ஒளிப்பதிவு செய்த பி சி ஸ்ரீராம் பணிபுரிந்த கிராமப்படம். சிட்டி பேஸ்டு கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்த நாசர் செய்த கிராமப் படம், வடிவேலு தன் கெப்பாசிட்டியை காட்டிய படம் என்பது போக வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

கண்மாய் உடைந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஆனதால் கவலை அடைந்திருக்கும் மக்களைப் பார்த்து கமலும் சாப்பிடாமல் இருப்பார். அப்போது சிவாஜி சொல்வார்

“இவளைப் பாரு, குழந்தயப் பறி கொடுத்தவ. ஏன் சாப்பிடுறா? நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை சுத்தியுள்ளவங்கள காப்பாத்த முடியும்.

என் தந்தைக்கு சில ஆண்டுகளுக்கு முன் காலை ஏழு மணி அளவில் ஒரு ஆப்பரேசன் நடந்தது. நான் 4 மணிக்கெல்லாம் எழுந்து அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தேன். ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அவர் கூட்டிச் செல்லப்பட்டதும் என் அம்மா, தங்கை எல்லோரும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு பசி. ஆனால் தயக்கம். அப்போது இந்த வசனம்  ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரி கேண்டினுக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தேன். 

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன் என் மகனை ஐ சி யூவில்  அனுமதித்து விட்டு மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சாப்பிடச் சென்றேன்.

ஆனால் இந்தப் படத்தில் கமல் தமிழ்சினிமாவிற்கு செய்த இன்னொரு நல்லதும் உண்டு. அதுதான் காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோருக்கு கொடுத்த வேடம். காகா ராதாகிருஷ்ணன் அதன்பின் பல படங்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு இந்த ஆண்டு மறைந்தார். ரேவதியின் தந்தையாக அந்த படத்தில் வாழ்ந்திருந்த கள்ளபார்ட் நடராஜன் சில ஆண்டுகள் மேலும் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் தந்தையும் கள்ளபார்ட் வேடத்தில் விற்பன்னர்.

கமல் ராஜபார்வைக் காலத்தில் இருந்தே இது போல பல ஆட்களை ஞாபகத்தில் வைத்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பல திறமைகளை இறக்குமதி செய்திருக்கிறார்.

இந்த சமயத்தில் 96 வாக்கில் பெப்ஸி ஸ்டரைக்கைத் தொடர்ந்து நடந்த சில கூட்டங்கள் ஞாபகம் வருகின்றன். அதிலொன்றில் கமல் பேசும் போது சொன்னது இது

பல நடிகர்களை நாம் மறந்து வருகிறோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர்கள் பொருத்தமாய் இருப்பார்கள். ஆனால் நம் நினைவுக்கு அப்போது வராது”. எனவே நடிகர் நடிகைகளைப் பற்றிய ஒரு கம்ப்ளீட் டேட்டா பேஸ் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களது முக்கிய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். அது நடிகர் சங்கத்தில் இருந்தால் நலம். டைரக்டர்கள் அதை புரட்டிப் பார்த்து நல்ல முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.

இப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே?

எனவே தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு டேட்டா பேஸை விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன்  அருமையாக தயார் செய்யலாம். எல்லோரும் பி ஆர் ஓ வைத்துக் கொள்ள முடியாது. படியேறி வாய்ப்புக் கேட்கவும் தன்மானம் தடுக்கும். அதனால் இரு தரப்புக்கும் இழப்பே.

நடிகர் சங்கம் இதை முன்னெடுத்துச் செய்து கொண்டிருப்பதாய் இப்போது செய்திகள் வருகின்றன.

26 comments:

ராஜ் said...

மலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை. நான் எனது பள்ளி பருவத்தில் பார்த்த படம் "தேவர் மகன்", அப்பொழுது பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இபொழுது கே டிவியில் பார்க்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுகிறது. குறுப்பிட்ட சமுகத்தின் கதை என்றாலும், வேறு சமுகத்தை சீண்டாமல் படம் எடுததற்கே கமலை பாராட்டலாம். உங்க அனுபவத்தை ரொம்பவே அழகா தொகுத்து இருக்கேங்க.

முரளிகண்ணன் said...

நன்றி ராஜ்

CS. Mohan Kumar said...

அருமை சயின்டிஸ்ட் சார். எனக்கும் திருச்சியில் இந்த படம் பார்த்த நினைவுகளை மீடேடுத்தது பதிவு

இந்த படம் பற்றி தமிழ் பேப்பரில் மகாதேவன் என்கிற நபர் எழுதிய பதிவுகள் வாசித்தீர்களா?

Cable சங்கர் said...

ம்..

முரளிகண்ணன் said...

நன்றி மோகன்குமார்

நன்றி கேபிள்ஜி

நன்றி நிவேதனம்

ஜோ/Joe said...

இன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருக்கலாம் ..தேவர்மகனை ஏதோ சிங்காரவேலனை விட பரவாயில்லை ரகம் போல (அப்போதைய ரசிக மனநிலை என்றாலும்) சொல்லும் போது என்னத்த சொல்லுறது .. அப்புறம் சிவாஜியும் நடிச்சார்-ங்குற மாதிரி கடந்து போறீங்க ..ஏமாற்றமான பதிவு.

முரளிகண்ணன் said...

ஜோ

இதில் சிவாஜியின் பங்கு பற்றி பலரும் சொல்லி முடித்து விட்டார்கள்.

இப்போது பார்க்கும் போது அந்த துணை கதாபாத்திரங்களின் தேர்வே மனதை தொட்டது.

என்றாலும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

முரளிகண்ணன் said...

ஜோ,

இப்போது மீண்டும் வாசித்துப் பார்க்கும் போது எனக்கு அது புரிகிறது. அடுத்த முறை இம்மாதிரி கிளாசிக்குகளைப் பற்றி எழுதும்போது கவனமாக எழுதுகிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

கோபிநாத் said...

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...அடிக்கடி பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுவும் வசனமும் அந்த காட்சி அமைப்புகளும்..சொல்லிவச்சி அடிச்சது மாதிரி இருக்கும்.

எனக்கு என்னாமே அண்ணாச்சி பதிவுல மாதிரி இல்ல (கூடவே நீங்க கலைஞானி ஆளு) நிறைய எதிர்பார்த்தேன்ண்ணே ;)

குட்டிபிசாசு said...

//போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா என்னும் போது இரண்டு பைகள் மீதம் இருந்தன. அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம்.//

…நச்!

…//இப்போது தில்லு முல்லு பட ரீமேக் என்றதும் தேங்காய் சீனிவாசனுக்கு யார், சௌகார் ஜானகிக்கு யார் என்று விவாதித்தார்கள் இணையத்தில். ஆளா இல்லை. அம்பிகா, நளினி கூட அதைச் செய்யலாமே? //

…சௌக்கார்ஜானகிக்கு அம்பிகாவோ நளினியோ ஓகே. தேங்காய் சீனிவாசனுக்கு இப்ப யார் இருக்காங்கனு தெரியல. தயவு செய்து யாரும் பிரகாஷ்ராஜை சொல்லிடாதிங்க. சிவகுமார் வேண்டுமென்றால் சொல்லலாம், அவர் சீரியஸாக நடிக்க நமக்கு காமெடியாக இருக்கும்.

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

எனக்கு தேவர்மகன் படம் பற்றி எழுத வேண்டும் என்பதைவிட கமலின் காஸ்டிங் சென்ஸ் பற்றி எழுதவே முக்கியமாக நினைத்தேன். இனி உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி எழுதுவேன்.

நன்றி குட்டி பிசாசு.

SathyaPriyan said...

முரளிகண்ணன் கை கொடுங்கள்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது "கமல் - ஒரு சகாப்தம்" பதிவில் நான் எழுதியது.

23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்

தமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.

இப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.

முரளிகண்ணன் said...

நன்றி சத்யபிரியன்

scenecreator said...

பதிவு அருமை. தில்லு முள்ளு ரீமேக் ,தேங்காய் வேடத்தில் பிரகாஷ் ராஜ் ,சௌகார் வேடத்தில் கோவை சரளா நடிப்பதை படித்தேன்.

ஜெ. ராம்கி said...

ஆயிரம் பேர் இரண்டாயிரம் விமர்சனம் எழுதலாம்... ஆனா ஆயிரத்துல ஒருத்தர்தான் ரீலிஸ் சமயத்துல என்ன நடந்ததுன்னு எழுதமுடியும்..வெல்டன்!

கோவி.கண்ணன் said...

முரளி, டேட்டாஸ் பேஸ் பற்றி நீங்கள் சொல்வதை நானும் பலநாள் யோசித்துப் பார்ப்பது உண்டு.

ஏபி நாகராஜன் பற்றிய தகவல் எழுதும் பொழுது ரொம்பவே கடினமாக இருந்தது தகவல் தேடுவது. சினிமா மட்டுமல்ல எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், இசை கலைஞர்கள் அனைவர் குறித்தும் விக்கிகள் போன்று உருவாக்கப்படவேண்டும் என்று அடிக்கடி நினைப்பது உண்டு.

Paleo God said...

வெற்றிவேல் வீரவேல்னு நம்மாளுங்க மெதுவாய்த்தான் வருவாங்கன்னு ஐய்யா சொன்னது எவ்வளவு உண்மை, 20 வருசம் கழிச்சி இதப் பத்தி படிக்கும்போது இதான் தோணிச்சி :))

Paleo God said...

அடுத்த குத்தாலம் ட்ரிப்ல வெறும் சினிமா பத்தி மட்டும் பேசுவோம்ணே :))

கார்க்கிபவா said...

பதிவு எதை பற்றியதென்ற குழப்பம் வந்துவிட்டது.. பாண்டியன் வென்றதா தேவர் மகன் வென்றதா என்பதும் இல்லை.(இதுல டவுட் வேற எனக்கு)

என்ன சயிண்ட்டிஸ்ட்?

முரளிகண்ணன் said...

நன்றி ஜெ ராம்கி

நன்றி கோவியார்

நன்றி ஷங்கர். நிச்சயமாக அதைப் பற்றி மட்டும் பேசுவோம்

கார்க்கி,

இது கமலின் காஸ்டிங் சென்ஸ் பற்றிய பதிவுதான்.

மேல்நாடுகளில் இருப்பது போல் காஸ்டிங் (மட்டும் செய்யும்) டைரக்டர்கள் இங்கு இல்லாததால்

என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பற்றியுமான பதிவு.

Unknown said...

murali,ennoda vayathu 17.naan ennod 15 vayasula thever magan ktv channel parthaen.oru periya inba athirchi mulu padamu romba super.dialogues are wonderfull.kurippa oru dialogue madhababu nassaer parthu solluvaru"neer periya kallan ayya" atharku nassaer sollvar "marrava".ennaku ithu satharana dialogue endruthan pattathu.pala naatkal piragu internetnal browse pannum pothu summa thever endru type panni parthen appothuthan therinthathu kallar enbathu mukudargallile ulla moondru privugalile ondru kallar endru therinthathu.nan ungali thalmaiudan kaatukiraien neenga innum supera elututhanum.

முரளிகண்ணன் said...

நன்றி சேகர் ரஞ்சித்.

Gokul said...

முரளிக்கண்ணன்,
இதை படிக்கும்போது உண்மையிலேயே மலரும் நினைவுகள்தான் எனக்கு. இந்த படத்தில் தான் ரஜினி ரசிகனாக இருந்து முழு கமல் ரசிகனாக மாறினேன் (இப்போது யார் ரசிகனும் இல்லை என்பது வேறு விஷயம்). உண்மையில் எனக்கு பிடித்த டாப் டென் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது , ஆனால் நேட்டிவிட்டி என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதியை மிகவும் உயர்த்தியது இப்போது பிறகு சிந்திக்கும்போது எரிச்சலாக இருந்தது. மேலும் பிறகு வந்த பருத்தி வீரனை ஒப்பிடும்போது தேவர் மகன் Posh/Elegant/refined ஒரு கிராமிய படமாக தோன்றுகிறது(மற்றொரு ஒப்பீடு தேவர் மகனில் ரேவதி / பருத்தி வீரனில் ப்ரியாமணி பாத்திரப்படைப்பு) ,கமலின் நிறமும் பி.சி.ஸ்ரீராமின் காமெராவும் காரணமா தெரியவில்லை.பிறகு கமலே பின்னர் வந்த விருமாண்டியில் தேவர் மகனில் இருந்த ஒரு Polishness-ஐ எடுத்துவிட்டார் (ஓரளவிற்கு).

Madan said...

முரளி கண்ணன்,
பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவும், மிக அருமையான வசனங்களும், இளையராஜாவின் இசையும் இந்த படத்தை ஒரு classic ஆக மாற்றி விட்டன.. அவ்வளவு பேசபடாத கௌதமி episode (particularly திரும்பி வந்தவுடன்) வசனங்கள் மிக இயல்பாக இருக்கும்!!! ஒரு வருடத்திற்கு மேல் தேடி ஒரு நல்ல DVD print வாங்கி விட்டேன்!!! நல்ல பதிவு. நீங்களும் என் வயது போலே இருக்கு!!! (40?)

முரளிகண்ணன் said...

கருத்துக்களுக்கு நன்றி கோகுல்

நன்றி மதன். எனக்கு 38 வயது.

Shaik,SIT said...

Enaku therinthu intha padam samuthayathil nalla maatrathai vida kurippita samuthayathai kombu seevi vittathai polathan unarkiren. Intha movieku piragu niraya sathiya padangal edukapattana utharanamaga paruthi veeran, sundarapandian,etc. Tamil cinemavil sathi padangalin pillayar suli intha padamthan.