January 30, 2016

நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் திருமணம் பற்றிய தற்போதைய எதிர்பார்ப்புகள்.

1. மாப்பிள்ளையின் வயது கண்டிப்பாக 30க்குள்தான் இருக்க வேண்டும். மாப்பிள்ளையின் வயது என்ற கேள்விக்கு இருவத்தி என்று ஆரம்பித்தால்தான் காது கொடுக்கிறார்கள். 25க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சரி, என்ன வேலை என அடுத்து தொடர்கிறார்கள்.

2. அரசு வேலை, சாஃப்ட்வேர், மக்கள் அறிந்த பெரிய கம்பெனிகளில் வேலை என்றால்தான் அடுத்த கேள்வி தொடங்குகிறது.


3. முப்பதாயிரத்துக்கு குறைவான சம்பளம் என்றால் மேல படிக்கணும்னு ஆசைப்படுறா என அசால்டாக கட் செய்துவிடுகிறார்கள்.

4. அரசு வேலை, பேங்க் அல்லது பொறியியல் படித்தவர்கள் என்றால் சரி. டிப்ளமோ, பி ஏ என்றால் போய்யா என்று சொல்லி விடுகிறார்கள்.


5. தொப்பை, கண்ணாடி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள். வழுக்கை என்றால் பெரிதும் யோசிக்கிறார்கள்

6. மிலிட்டரி, போலீஸ், வக்கீல் மற்றும் அரசியல் சார்புள்ள குடும்ப வரன்களை இந்த கேட்டகிரியில் இல்லாதவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.


7. வெளிநாட்டு வேலை மாப்பிள்ளை என்றால் பொறியியல் சார்பு பணி ஒன்றுக்கு மட்டுமே மார்க்கெட். மற்ற வேலைகளில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு சிரமம்தான்.
8. வீட்டில் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த அக்காவோ, திருமணமாகாத தங்கையோ ஏன் தம்பி இருந்தால்கூட யோசிக்கிறார்கள்.

9. மாப்பிள்ளை வீட்டார்தான் திருமணச் செலவுகளை ஏற்கவேண்டும், நாங்கள் இது மட்டும்தான் செய்வோம் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார்கள்.

10. மாப்பிள்ளை வீட்டார் தங்களை விட வசதியில் ஒரு படி அதிகமாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.

1 comment:

சீனிவாசன் said...

நீங்கள் சொல்வது சரிதான், திருமண சந்தையில் இன்று பெண்களுக்கே கிராக்கி அதிகம். டிப்ளமோ அல்லது அதற்கு குறைவாக படித்தவர்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பெண் கிடைப்பதில்லை. பொறியியலில் பட்டத்திற்கு குறைவாக பெற்றவர்களுக்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பே :-( ....