June 06, 2008

இரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்


முட்டை இல்லாமல் கூட ஆஃபாயில் போட்டு விடலாம் ஆனால் பாலபாரதி மற்றும் லக்கிலுக் இல்லாமல் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவது முடியாத காரியம். வரும் ஜூன் 8 மற்றும் 15 ஆம் தேதிகளில் சென்னையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலை தனிக்கட்டை பிரச்சினை இல்லை. லக்கி தான் வீட்டை ஏமாற்றிவிட்டு கலந்து கொள்ளவேண்டும். கடந்த பதிவர் சந்திப்புகளிலேயே அவர் தன்னிடமிருந்த பொய்களை காலி செய்து விட்டதால் இந்த சந்திப்புகளுக்கு அவசரமாக இரண்டு பொய்கள் தேவைப்படுகின்றன. கைவசம் வைத்திருப்போர் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சிறந்த காரணத்துக்கு கீழ்க்கண்ட பரிசுகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்

(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி

பதிவர் சந்திப்பு பற்றிய விபரங்களுக்கு

June 05, 2008

ஜூன் 15 பதிவர் சந்திப்பில் உண்மைத்தமிழன் விவகாரம்


சமீப காலமாக உண்மைத்தமிழன் தினமும் ஒரு பதிவுக்கு 50 முதல் 100 வரை பின்னூட்டம் போடுவது பதிவர்கள் யாவரும் அறிந்ததே. இந்த தனி நபர் பின்னுட்ட சுனாமியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல பதிவர்கள் கவலைப்பட துவங்கிஉள்ள நிலையில் ஜூன் 15 தமிழ்மண நிர்வாகிகள் மட்டும் பதிவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.இதன் காரணமாக பின்னூட்ட உயரெல்லை மீண்டும் அமலுக்கு வந்தால் என்ன செய்வது என கும்மி மட்டுமே அடிக்கும் அமீரக பதிவர்கள் தங்கள் வருத்தங்களை சென்னை பதிவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதால் அவர்கள் இந்த பிரச்சினையை அன்றைய தினம் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இப்படி ஏதும் விவாதம் நடைபெற்றால் அதை எதிர்த்து தீக்குளிப்போம் (டீ இல்லை) என்று உன்மைத்தமிழன் ரசிகர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காரணத்தால் அன்று காவல் துறை பாதுகாப்புடன் பதிவர் சந்திப்பு நடைபெறும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்று எந்த பிரச்சினையும் நடக்காமல் எப்படி சந்திப்பு நடத்துவது என்பதற்காக அமெரிக்க எஃ பி ஐ யிடம் பயிற்சி பெற்ற திரு பாஸ்டன் பாலா அவர்கள் ஜுன் 8 ஆம் தேதி சென்னை பதிவர்களின் மெக்காவான மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் பயிற்சி கொடுக்க உள்ளார்.

அனைவரையும் வருக வருக என சென்னை பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்

மேலதிக விபரங்களுக்கு இங்கே

May 22, 2008

ராமராஜன் திரைப்படங்களின் உளவியல் – சுகுணா திவாகர் கருத்தை முன்வைத்து.


கமலின் தீவிர ரசிகனான எனக்கு ராமராஜன் படங்களை சுத்தமாகப் பிடிக்காது. அவர் படங்களுக்கு செல்வோரை நக்கல் செய்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. ஒருமுறை “என்னப் பெத்த ராசா” என்ற படத்துக்கு நண்பன் அழைத்த போது நூறு ரூபாயும்,ஒரு கர்ச்சீப்பும், பஞ்சும் கொடுத்தாலும் வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அப்போது அவர் படங்களைப் பற்றிய பொதுவான விமர்சனம்
1. ஸ்டில்களில் இணைந்து நடிப்போர் இல்லாமல் இருந்தால் எந்தப்படம் என்று கண்டுபிடுக்க முடியாது
2. எல்லா வகை காட்சிக்கும் ஒரேமாதிரி நடிப்பு வசன உச்சரிப்பு
3. காமெடி மற்றும் பாட்டு இல்லாவிட்டால் படம் ஓடாது
(யோசித்துப் பார்த்தால் இது விஐய் படத்துக்கும் பொருந்தும்)

ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளாலும் பேருந்து பயணங்களாலும் பத்து பதினைந்து ராமராஜன் படங்களைப் பார்க்கும் அவல நிலைக்கு ஆளானேன்.

சுகுணா திவாகர் தன் பதிவொன்றில் ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாத கிராமப் படங்கள் ஏனெனில் அவை நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தாதவை என்று கூறியிருந்தார். அதைப்படித்தபின் படங்கள் அனைத்தையும் மீள்பார்வை செய்து பார்த்தேன். அப்பட்டமான உண்மை.

1.கதையின் நாயகன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாகவே காட்டப்படுகிறான். (என்னப் பெத்த ராசா, தங்கமான ராசா, கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊரு வந்து,நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்..........). செயற்கரிய செயல்களை செய்வதில்லை. சிறிது புத்திசாலித்தனம்,நேர்மை ஆகியவற்றால் மக்களை கவர்கிறான். இந்த கதாநாயக தன்மையால் கிராமப்புற இளைஞர்கள் தங்களை அவரிடம் அடையாளம் கண்டார்கள். ஓ இதுமாதிரி இருந்தால் நம்மையும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளோடியது.
ஆனால் அவரை அடுத்து வந்த கே.எஸ். ரவிக்குமார் தன் படங்களில் (ஊர்மரியாதை, நாட்டாமை, நட்புக்காக,சமுத்திரம் ) நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தினார். ஊர் பெரியவர் தெய்வம் மற்றவர்கள் ஏப்ப சாப்பை என்பது போல கதையமைப்பு இருக்கும். ஆர்.வி.உதயகுமார் (சின்னகவுண்டர், எஜமான்,ராஜகுமாரன்) பின்னர் வெளிவந்த சில பிரபு,சத்யராஜ்,சரத்குமார் படங்களும் இவ்வகையே. அவற்றில் எல்லாம் கதாநாயர்கள் நம்ப முடியாத பலம், நேர்மை, வள்ளல் தன்மையுடன் இருப்பார்கள். அவ்வகைப் படங்களில் கிராமப்புற ரசிகர்களால் தங்கள் சுயத்தை அடையாளம் காண முடியவில்லை. எனவேதான் இன்னமும் ராமராஜன் படங்கள் பி சி சென்டர்களில் ஓடுகின்றன.

2. கதாநாயகிகளும் கூடியவரையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவே காட்டப்படுகிறாள். ஆளை மயக்கும் அழகுடன் இருப்பதில்லை. இது கிராமப் புற பெண்கள் தங்களை அடையாளப்படுத்த.

3.பெண்களை மட்டம் தட்டி பேசும் காட்சிகள் குறைவு. ரஜினி (படையப்பா,மன்னன்) விஐய்(சிவகாசி,குருவி) இதில் படு மோசம்.
இப்போது வரும் பல மொக்கைப்படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளோவோ பரவாயில்லை.