ஞாயிறு மாலை சந்திப்பை உறுதி செய்வதற்காக நேற்று சென்னை பதிவர்களை அலைபேசியில் பிடித்த போது
நான் : தலை, சந்திப்பு
பாலபாரதி : நான் வரல்லையா
நான் : ஏன் தலை?
பாலபாரதி : கம்பெனியில டவுசரை கிழிக்கிறாங்க, வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை தான் 12 டவுசரையும் தைக்க வேண்டிஇருக்கு
நான் : 6 நாள் 6 டவுசர் தானே?
பாலபாரதி : அங்க ஒருநாளைக்கு ரெண்ட கிழிக்கிறாங்க
நான் : !!!!!!!!
நான் : லக்கி, சந்திப்பு
லக்கி : வரல்ல
நான் : ஏங்க?
லக்கி : வாரநாள்ள எல்லாம் சுட்டபழம்,பத்துபத்து மாதிரி படம் பார்க்கவும் அதிக்கு விமர்சனம் எழுதவுமே நேரம் சரியாப்போயிடுது. இதுல பின்னூட்டம், பதில் பின்னூட்டம் அப்புறம் யூத் விகடன் வேலைகள்
நான் : அதனால?
லக்கி : ஞாயிறு தான் எங்க கம்பெனி வேலையை பார்க்க வேண்டி இருக்கு
நான் : !!!!!!!!
நான் : சார், சந்திப்பு
ஜியோவ்ராம் : ம்ஹூம்
நான் : ஏன் சார்?
ஜியோவ்ராம் : தெரியாம 45 கதைன்னு சொல்லிட்டேன். பார்க்கிற ஆள் எல்லாம் மீதி கதையைக்கேட்டு ஒரே தொல்லை
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
வளர்மதி : திரைப்படம் காட்சி ஊடகம், பதிவு மொழி ஊடகம்,சந்திப்பு ஒலிஒளி ஊடகமா பன்முகத்தன்மையின் நீட்சியா இருப்பதால
நான் : அப்படின்னா நீங்க வரல்லையா சார்?
வளர்மதி : நான் வரல்லைன்னு எப்பங்க சொன்னேன், வந்தா நல்லாயிருக்குமேன்னுதானே சொன்னேன்
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
புருனோ : அய்யய்யோ
நான் : என்னாச்சு?
புருனோ : அட நீங்க வேற, 6 நாளும் ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்த்துட்டு ரிலாக்ஸ்க்காக வந்தா, அங்கயும் ஒரே கன்சல்டிங். இதுக்கு மக்களுக்காவது சேவையை தொடரலாம்
நான் : !!!!!!!!!!!!
நான் : சார், சந்திப்பு
பைத்தியக்காரன் : கண்டிப்பா வந்துர்றேன். ஆமா வளர்,சுந்தர், பாலா, லக்கி எல்லாம் வர்றாங்கல்ல?
நான் : இல்லை
பைத்தியக்காரன் : அவங்க இல்லாம எதுக்கு சந்திப்பு நடத்துறீங்க? பேசாம நீட்ஷேவையும் பூக்கோவையும் போய் படிங்க
நான் : !!!!!!!!!!!!
நொந்து போய் அதிஷாவை அழைக்க,
நான் : அதிஷா, யாரும் வரமாட்டாங்க போல இருக்கே?
அதிஷா: அமீரகம் மாதிரி பிரியாணி போட்டு, இலவச புக் டிவிடி கொடுப்பமா?
நான் : யாரு, நீயா? நீ அடைச்ச கடையில உடைச்ச சோடாவும், குருதிப்பனல் பாட்டு கேசட், பேசும்படம் வசன புத்தகம் தருவ. யாரு வருவா?
அதிஷா : அப்ப சிங்கை மாதிரி இலவச பின்னூட்டம்....
நான் : அங்க எல்லாம் சாப்ட்வேர் ஆட்கள். பிடுங்க ஆணி இல்லேன்னா பின்னூட்ட விளையாட்டு விளையாடுறவங்க. இந்த குரூப்பு போடுற பின்னூட்டத்தயே ரிலீஸ் பண்ணாது. இதில பரிசாம்
அதிஷா : அப்ப கோவை மாதிரி ஷாமியானா போட்டு....
நான் : நீ சொந்தமாவே யோசிக்க மாட்டியா?
அதிஷா : அப்படின்னா ஒரே வழிதான் இருக்கு. அதப்பண்ணுன்னா சென்னை என்ன, கும்மிடிப்பூண்டியில இருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள பதிவர்கள் வந்துருவாங்க
நான் : சீக்கிரம் சொல்லுப்பா
அதிஷா : பத்து பத்து சோனா வை சிறப்பு அழைப்பாளரா கூப்பிட்டுறலாம். கூட்டம் அம்மிரும்
நான் : !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!! !!!!!!!!!!!!
சோனா வந்தாரா?
பதிவர் கூடினரா?
10-08-08 மாலை 5-30 மெரினா வில் காண்க
நமது மலேசிய மாவீரன் டிபிசிடி இன்று மாலை மெரினாவில் பதிவர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் வருக
நேரம் : 6.30-8.30