கதை நடப்பது 2025ல். மனிதர்களைப் போல தோற்றம் உடைய ரோபோக்களை வைத்து உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரி. அதன் மூலம் மக்கள் படும் கஷ்டங்களை அறியும் முக்கிய விஞ்ஞானி அந்த சர்வாதிகாரியிடம் இருந்து தப்புகிறார். அதற்கு உதவும் ரஜினியையே அந்த ரோபோவை போல மாற்றுகிறார். சில உபகரணங்கள் ரஜினி உடலில் பொருத்தப்படுகின்றன. அதன் மூலம் எப்படி அவர் மக்களை விடுவிக்கிறார்? என்பதே கதையின் ஒன் லைன்.
ஐஸ்வர்யா பச்சன் காதலி. ரஜினியும் இவரும் மட்டுமே எல்லா மொழிக்கும். சர்வாதிகாரி,விஞ்ஞானி மொழிக்கு ஏற்ப மாறுவார்கள்.இந்திப் பதிப்பில் முக்கிய இந்தி நடிகர்களை நடிக்க வைக்க ஈராஸ் நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது.
ஏக் துஜே கேலியே,சனம் தேரி கசம், சாகர் மற்றும் சாச்சி 420 போன்ற நேரடி வெற்றிப்படங்களிலும், ஹிந்துஸ்தானி,அப்பு ராஜா போன்ற டப்பிங் படங்களிலும் வெற்றியை ருசித்த கமல் இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் தசாவதாரத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் மர்மயோகிக்கு கூட ஹேமமாலினி, கஜோல், ரஹ்மான் என்று சேலபில் ஸ்டார் வேண்டும் என அவர்களை தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ரஜினி அங்கு நடித்ததெல்லாம் பி கிரேட் படங்கள் தான். (அந்தா கானூன், கங்குவா, ராஜகுரு,லட்சத்தில் ஒருவன்). அவர் நடித்த ஏ கிரேட் படத்தில் இரண்டாம், மூன்றாம் கதானாயகனே. (பாட்ஷா வின் மூலமான ஹம்மில் அவருக்கு செண்பகா வின் வேடம்). தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான். அதனால் தான் சிவாஜி யை கூட அங்கே டப் செய்யவில்லை.
ஈராஸ் நிறுவனம் இந்தியில், படத்திற்க்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்த சர்வாதிகாரி,விஞ்ஞானி கேரக்டர்களுக்கு முக்கிய இந்தி நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஷங்கர் வழக்கப்படி இரண்டு பாடல்கள் படமாக்கப்படும். பார்ப்போம் ஐஸ்வர்யா, ரஹ்மான் கூட்டணியில்இந்த படமாவது ரஜினிக்கு இந்தியில் வெற்றி தருகிறதா? என.
