September 05, 2008

எந்திரம் தி ரோபோ புதிய தகவல்கள்

கதை நடப்பது 2025ல். மனிதர்களைப் போல தோற்றம் உடைய ரோபோக்களை வைத்து உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரி. அதன் மூலம் மக்கள் படும் கஷ்டங்களை அறியும் முக்கிய விஞ்ஞானி அந்த சர்வாதிகாரியிடம் இருந்து தப்புகிறார். அதற்கு உதவும் ரஜினியையே அந்த ரோபோவை போல மாற்றுகிறார். சில உபகரணங்கள் ரஜினி உடலில் பொருத்தப்படுகின்றன. அதன் மூலம் எப்படி அவர் மக்களை விடுவிக்கிறார்? என்பதே கதையின் ஒன் லைன்.

ஐஸ்வர்யா பச்சன் காதலி. ரஜினியும் இவரும் மட்டுமே எல்லா மொழிக்கும். சர்வாதிகாரி,விஞ்ஞானி மொழிக்கு ஏற்ப மாறுவார்கள்.இந்திப் பதிப்பில் முக்கிய இந்தி நடிகர்களை நடிக்க வைக்க ஈராஸ் நிறுவனம் பொறுப்பேற்று இருக்கிறது.

ஏக் துஜே கேலியே,சனம் தேரி கசம், சாகர் மற்றும் சாச்சி 420 போன்ற நேரடி வெற்றிப்படங்களிலும், ஹிந்துஸ்தானி,அப்பு ராஜா போன்ற டப்பிங் படங்களிலும் வெற்றியை ருசித்த கமல் இப்போது அங்கு நிலைமை சரியில்லாததால் தசாவதாரத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் தான் மர்மயோகிக்கு கூட ஹேமமாலினி, கஜோல், ரஹ்மான் என்று சேலபில் ஸ்டார் வேண்டும் என அவர்களை தொங்கிக்கொண்டிருக்கிறார்.

ரஜினி அங்கு நடித்ததெல்லாம் பி கிரேட் படங்கள் தான். (அந்தா கானூன், கங்குவா, ராஜகுரு,லட்சத்தில் ஒருவன்). அவர் நடித்த ஏ கிரேட் படத்தில் இரண்டாம், மூன்றாம் கதானாயகனே. (பாட்ஷா வின் மூலமான ஹம்மில் அவருக்கு செண்பகா வின் வேடம்). தென் மாநிலத்தவரைத் தவிர பூர்விக இந்தி மக்கள் (கவ் பெல்ட் உட்பட) அவரை பார்ப்பது ரித்தீஸ் மாதிரித்தான். அதனால் தான் சிவாஜி யை கூட அங்கே டப் செய்யவில்லை.

ஈராஸ் நிறுவனம் இந்தியில், படத்திற்க்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்த சர்வாதிகாரி,விஞ்ஞானி கேரக்டர்களுக்கு முக்கிய இந்தி நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ஷங்கர் வழக்கப்படி இரண்டு பாடல்கள் படமாக்கப்படும். பார்ப்போம் ஐஸ்வர்யா, ரஹ்மான் கூட்டணியில்இந்த படமாவது ரஜினிக்கு இந்தியில் வெற்றி தருகிறதா? என.

September 02, 2008

பாலபாரதி இப்படி செய்யலாமா?


பதிவர் சந்திப்புகள் எப்போதும் இரண்டு நாட்களுக்கான உற்சாகத்தைக் கொடுக்கும். வாழ்வதன் மீதான காதலை அதிகப்படுத்தும் அந்த ஒத்த அலை வரிசையினரின் சந்திப்பு. இந்த ஞாயிறு அப்படியில்லை. காரணம் பாலபாரதி.



நான் படித்த சிற்றூரில் நிறத்தாலும் அதிர்ந்து பேசா குணத்தாலும் என் தெருப்பையன்களிடம் நான் அன்னியப்பட்டுபோயிருந்தேன். வகுப்பிலும் வீட்டிலும் செல்லப்பிள்ளை, ஆனால் தெருவில் கிடைக்காத அங்கீகாரம் என்னை அலைக்கழித்தது.என்னை அவர்களிடம் நிரூபிப்பதற்க்காக பலான படங்கள்,சிகரட் என திசை மாறத்தொடங்கினேன். என் தந்தையின் இடமாறுதல் எனக்கு ஏற்படவிருந்த விபத்துக்களை தடுத்து நிறுத்தியது.
ஒரு சிறுகுழுவிடம் எனக்கு கிடைக்காத அங்கீகாரமே என்னை துவளச்செய்தது.



திருநங்கைகள் தங்கள் வாழ்வில் எங்குமே அங்கீகாரம் கிடைக்காமல் வாழ்கிறார்கள். ஒவ்வொருமுறை அது மறுக்கப்படும்போதும் ஒரு காயத்தை அது அவர்கள் மனதில் உண்டாக்குகிறது. வாழ்வின் மீதான காதல்தானே அவர்களை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளச்செய்கிறது. பாலபாரதியின் அவன் - அது = அவள் படித்தபின் எனக்குத் தோன்றியதெல்லாம் மன வலி என்றால் என்னவென்றே உணராமல் அடிக்கடி மனசு கஷ்டமா இருக்கு என்ற பதத்தை உபயோகிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சிதான்.



இனி திருநங்கைகளை காணும் போதோ அவர்களிடம் உரையாடும் போதோ என்னிடம் அனுதாபத்தொனி இருக்காது. தோழமைத்தொனி மட்டுமே. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.இந்த புனைவு என் மனத்தில் விதைத்ததும் அதைத்தான்.

ஆசிரியர் : யெஸ். பாலபாரதி

தோழமை வெளியீடு விலை: ரூ. 120 பக்கங்கள் : 184


தமிழ்நாட்டில், பிரதிகள் கிடைக்கும் இடம்

தோழமை 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை

நடிக்காதீங்க, இயக்குநர் மணிவண்ணன்

அன்புள்ள இயக்குநர் மணிவண்ணனுக்கு

நான் முன்னெல்லாம் வாரத்துக்கு ஒரு படம்னு வருஷம் 40-50 படம் பார்த்துருவேங்க. இப்ப மாசம் ஒண்ணுன்ணு 12 தான். அதிலயும் பாருங்க இந்த வருஷம் நாலுதான். நான் ஆசைப்பட்டாலும் உங்க சினிமாக்காரங்க எனக்கு அதிகம் செலவு வைக்கிறதில்லீங்க.

ஒரு காலத்துல ரசிக்கிற மாதிரி படமெல்லாம் எடுத்தீங்க

கோபுரங்கள் சாய்வதில்லை
இளமைக்காலங்கள
இங்கேயும் ஒரு கங்கை
நூறாவது நாள்
24 மணி நேரம்
விடிஞ்சா கல்யாணம்
முதல் வசந்தம்
இனி ஒரு சுதந்திரம்
அமைதிப்படை
மூன்றாம் கண்ணுன்னு.

அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, தோழர் பாண்டியன், வீரப்பதக்கம், ஆண்டான் அடிமைன்னு சொதப்ப ஆரம்பிச்சுட்டீங்க. அமைதிப்படைக்கப்புறம் நடிப்புல அதிக கவனம் செலுத்தறனால நல்ல படம் எடுக்க முடியலையா?

தமிழ்சினிமா ஆடியன்ஸ்ஸ ரெண்டு பிரிவா பிரிக்கலாங்னா. ஒண்ணு 18 ல இருந்து 25 வயசு வரைக்கும் இருக்கிற படிக்கிற,வேலைக்குப்போற, வேலை இல்லாத ஆளுங்க. இதுல என்னை மாதிரி சினிமா பைத்தியங்களையும் சேர்த்துக்கலாம். இன்னொண்ணு பேம்லி ஆடியன்ஸ்.


இரண்டு கூட்டமுமே இப்ப கடைசியா நீங்க எடுத்த படங்களுக்கு வரலைண்ணா.

நீங்க இப்ப இருக்கிற பசங்களுக்கு ஏத்த மாதிரி இளைய தலைமுறை ஆளுங்களை போட்டு படம் எடுக்கிறதில்ல, பாட்டுகளை படமாக்கிறதுலயும் வீக்கு. நாத்திக கருத்துகள் அதிகமா இருக்கிறதால தன்னை மாதிரியே கட்டுபெட்டுயா தன் பிள்ளைக இருக்கணும்னு நினைக்கிற பேமிலியும் வர்றதில்ல.

நீங்களும் என்னதான் செய்வீங்க?

பேசாம நடிப்ப கொறைங்கண்ணா. நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம் மாதிரி திரில்லர் படம் எடுங்கண்ணா. அதுக்கு இப்ப இங்க ஆளுங்க கம்மி.

இப்ப பாருங்க மாசத்துக்கு ஒண்ணாச்சும் பார்க்கணுமேன்னு மொக்க படமெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. நீங்க வந்தீங்கன்னா அதில ஒண்ணு எனக்கு கொறையும்.

இப்படிக்கு

நல்ல படம் பார்க்க ஆசைப்படும் சராசரி சினிமா ரசிகன்.