ரஜினியின் ரோபோ ஆரம்பிக்கப்பட்டவுடன் எல்லோர் கவனமும் அதை நோக்கி திரும்பிவிட்டது. இணைய தளங்கள்,பத்திரிக்கைகள்,பிளாக்குகள் என அனைவரும் அதைப்பற்றியே பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களுக்கும் 365 நாட்களுக்கும் செய்தி வேண்டுமல்லவா?
இந்த விஷயத்தில் அதிக சந்தோஷம் அடைந்திருப்பது மர்மயோகி வட்டாரமே. தசாவதார வெற்றியாலும், குசேலன் சுருண்டதாலும் மர்மயோகி பற்றி எழுத வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஏனென்றால் எல்லாத்தரப்பும் இவர்களைப் பற்றிய செய்தியைத்தான் அதிகம் படிக்கிறார்கள்.
ரஜினிக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் கமலை விட ரஜினிக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கும். இனி மர்மயோகியைப் பற்றி பிரஸ் ரிலீஸ் கொடுத்தால் கூட போடுவார்களா என்பது சந்தேகமே. அதனால் தேவையற்ற செய்திகள் வெளியாகது. ஹைப்பும் எழும்பாது. அந்த படம் எடுக்கப்படும் 2 வருடங்களில் சத்தமில்லாமல் நம் படத்தை முடித்துவிடலாம் என அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.