37 வருடமாக ஆடப்பட்டு வரும் இது, தோன்றியதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் இவர்கள்.
ஜாவேத் மியான்டாட்
சாப்ட் ஹேண்ட் சிங்கிள் இவரது சிறப்பு. தட்டி தட்டி எடுக்கப்படும் இவருடைய சிங்கிள்கள் எதிர் அணியின் வசமிருக்கும் ஆட்டத்தை தட்டிப் பறித்து விடும். 15 முதல் 40 ஓவர் வரையில் இந்த வகை சிங்கிள்கள் எந்த அணிக்கும் கைகொடுக்கும். டீன் ஜோன்ஸ், பேவன் ஆகியோர் இதை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றனர். இந்த வகை ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக முதலில் பயன்படுத்தியவர் இவரே.
ஜான்டி ரோட்ஸ்
இவர் வருகைக்கு முன் விக்கெட் கீப்பர் மட்டுமே ஸ்பெசலிஸ்ட் பீல்டர். பேக்வர்ட் பாயிண்ட்ம் ஒரு ஸ்பெசலிஸ்ட் ப்ளேஸ், 30 முதல் 40 ரன் தடுக்க முடியும் என காட்டியவர். இவர் வருகைக்கு பின்னர்தான் எல்லா அணிகளிலும் பீல்டிங் புரட்சி ஏற்பட்டது
கிரேட் பாட்ச்
நம்ம ஸ்ரீகாந்த்,அதற்கு பின்னால் ஜயசூரிய/கலுவித்தரன அப்படி ஆடியிருந்தாலும், வெற்றிகரமாக முதலில் நடத்திக்காட்டியவர் இவரே. அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் இன்று எந்த அணியும் இல்லை. 1992 ல் இவர் அம்புரோஸ்,அக்ரம் போன்றோரை அடித்ததைப் பார்த்துதான் ரணதுங்காவுக்கே இந்த ஐடியா வந்திருக்க வேண்டும்.
பாப் ஊல்மர்
கிரிக்கெட்டில் கோச்சுகளின் முக்கியதுவத்தை உணர வைத்தவர். முதல் லேப் டாப் கோச். இவர் வருகைக்கு பின்னரே எதிர் அணியினரின் பலவீனத்தை அக்கு வேறு ஆணி வேறாக பலரும் அலசத்தொடங்கினர்.
கில்க்ரிஸ்ட்
பலத்த எதிர்ப்புக்கிடையில் ஹீலேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்தவர். அதற்க்கு முன்னால் விக்கெட் கீப்பர் எடுக்கும் ரன்கள் போனஸ் என்று இருந்த நிலையை மாற்றியவர். இப்பொதெல்லாம் எந்த அணியிலும் விக்கெட் கீப்பர் சிறந்த மட்டையாளராக இருக்க இவர் தான் காரணம்
ஐ சி சி ஆட்டத்தை பிரபலப்படுத்த பல புதிய விதிகளை கொண்டு வந்தது. அதில் பல தோல்வி அடைந்தன (எ.கா. சூப்பர் சப் ரூல்). ஆனால் இந்த தனிப்பட்ட சாதனையாளர்கள் தங்கள் திறமையால் ஆட்ட்டத்தை சுவராசியமாக்கினார்கள். அமைப்புகள் தேவை தான், ஆனால் அதை விட முக்கியம் ஆட்டக்காரர்கள்.