July 02, 2010

சூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா? யார் ராதா?

தமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களைக் காட்டிலும் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்துள்ளார்கள்.

நடிகர்களை எடுத்துக் கொண்டால்

எம்.ஜி.சக்கரபாணி – எம்.ஜி.ராமச்சந்திரன்

மு.க.முத்து-மு.க ஸ்டாலின் (திரைப்படம் : ஒரே ரத்தம்)

எம் ஆர் ஆர் வாசு – எம் ஆர் ராதாரவி

சந்தான பாரதி – ஆர் எஸ் சிவாஜி

சாருஹாசன் - சந்திரஹாசன் - கமல்ஹாசன்

ராம்குமார் (அறுவடை நாள்) – பிரபு

டாக்டர் ராஜசேகர் – செல்வா

பிரபுதேவா-ராஜு சுந்தரம்-நாகேந்திர பிரசாத்

சூர்யா – கார்த்தி

அஜய் கிருஷ்ணா - விஷால்

ஜித்தன் ரமேஷ் – ஜீவா


நடிகைகளை எடுத்துக் கொண்டால்


வரலட்சுமி-மாதுரி

பண்டரிபாய் - மைனாவதி

சௌகார் ஜானகி - கிருஷ்ணகுமாரி

சந்தியா - வித்யாவதி

லலிதா-பத்மினி-ராகினி

கே ஆர் விஜயா – கே ஆர் வத்சலா - கே ஆர் சாவித்திரி

ஜெயசுதா-சுபாஷினி

ராஜ்கோகிலா - ராஜ்மல்லிகா (மீனாவின் தாய்)

ஜோதிலட்சுமி - ஜெயமாலினி

ரேகா - ஜிஜி (நினைவெல்லாம் நித்யா)

ராதிகா-நிரோஷா

அம்பிகா-ராதா

இந்திரா - ராசி

கல்பனா – ஊர்வசி – கலாரஞ்சனி

அருணா – நந்தினி (ஆவாரம் பூ)

சரிதா - விஜி

பானுப்பிரியா-நிஷாந்தி

டிஸ்கோ சாந்தி – லலிதகுமாரி

என் உயிர் தோழன் ரமா – லதா

ஷகிலா - ஷீத்தல்

அனுஷா - ராகசுதா

நக்மா-ரோஷினி-ஜோதிகா

கவிதா - வனிதா - பிரீதா - ஸ்ரீதேவி (விஜயகுமார்)

சிம்ரன் – மோனல் (இதில் சில குழப்பங்களும் உண்டு,
மோனலை சித்தி பெண் என்றும் கூறுவார்கள்)

மீரா ஜாஸ்மின் - ஜெனி

ஷாலினி - ஷாமிலி




(சகோதரிகள் பட்டியல் பதிவர்கள் கிருஷ்குமார், உண்மைத்தமிழன்,இந்தியன் ஆகியோர் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நன்றிகள் பின்னூட்டத்தில் கலக்குவோர் அனைவருக்கும்).



எனப் பலர் தமிழ்சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்கள். (பலர் விடுபட்டிருக்கலாம்)


இந்த வரிசையைப் பார்த்தோமென்றால்

1. சகோதரர்கள்/சகோதரிகளில் ஒருவர் எட்டிய உச்சத்தை/அடைந்த புகழை இன்னொருவர் அடைந்ததில்லை.

2. அப்படி இருவரும் சமமான இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்றால் அவர்கள் அத்துறையில் முண்ணனியில் இருந்திருக்க மாட்டார்கள்.

3. சமமான புகழைப் பெற்று முண்ணனியில் இருந்திருந்தால் அது வேறு வேறு காலகட்டமாக இருந்திருக்கும். (நக்மா – ஜோதிகா).


இந்த விதிக்கு உட்படாமல் ஒரே நேரத்தில் சம புகழை அடைந்தவர்கள் எனில் அது அம்பிகா-ராதா சகோதரிகள்தான். 80களின் துவக்கத்தில் ஸ்ரீதேவி இந்திக்கு சென்று விட, ஸ்ரீபிரியா,ஸ்ரீவித்யா குண்டாகி விட, உருவான வெற்றிடத்தை அம்பிகா,ராதா மற்றும் மாதவி ஆகியோர் நிரப்பினார்கள்.

ராதா பாயும்புலி, தூங்காதே தம்பி தூங்காதே என ரஜினி மற்றும் கமலுடன் ஏ வி எம்மின் அடுத்தடுத்த படங்களில் நடித்தால் அம்பிகா அடுத்த சுற்றில் மிஸ்டர் பாரத், உயர்ந்த உள்ளம் என்று அதே காம்பினேஷனில் கலக்குவார்.

ராதா நான் மகான் அல்ல, ஒரு கைதியின் டைரி என ஒரே ஆண்டில் ரஜினி,கமலுடன் ஜோடி சேர்ந்தால், நான் சிகப்பு மனிதனில் ரஜினியுடனும், காக்கி சட்டையில் கமலுடனும் அம்பிகா ஜோடி சேர்ந்த படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

சிவாஜி கணேசனுடன் அம்பிகா வாழ்க்கையில் (திரைப்படம்) நடித்தால், ராதா முதல் மரியாதையில் ஜோடி சேருவார்.

ரஜினி காந்துடன் எங்கேயோ கேட்ட குரல், கமல்ஹாசனுடன் காதல் பரிசு மற்றும் மோகனுடன் இதயகோயில் என இருவரும் ஒரே நாயகனுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் தனித்தனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு.

தற்போது தமிழ்சினிமாவில் அப்படி வணிக மதிப்புடனும், நடிப்பு ரீதியாகவும் புகழ் அடைந்து கொண்டிருப்பவர்கள் சூர்யாவும், கார்த்தியும். சூர்யா அயன்,ஆதவன் மற்றும் சிங்கம் என கலக்க, கார்த்தியும் பருத்திவீரன்,ஆயிரத்தில் ஒருவன்,பையா என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இருவரது அடுத்தடுத்த படங்களும் பெரிய நிறுவனங்களால் (தற்போதைய சூழ்நிலையில்) வாங்கப் பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக சன் பிகஸர்ஸ் எந்திரனை அடுத்து தானே தயாரிக்கும் இரண்டாவது படத்தில் இருவரையும் நடிக்க கேட்டிருக்கிறார்கள் என்னும் செய்தி. இது அவர்களின் வணிக மதிப்பை உறுதிப் படுத்துகிறது.

80களின் ஆரம்பத்தில் வாலிப வயதில் இருந்தவர்களுக்குத் தெரியும் அம்பிகாவை விட, ராதாவுக்கு மவுசு ஒரு படி அதிகம் என்பது. அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி ராதா தான்.

ராதாவின் அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லையில் ராதாவை வம்புக்கு இழுத்து கார்த்திக் பாடும் பாடல் ”வாடி என் கப்பக் கிழங்கே”. இதை எழுதியவர் கங்கை அமரன். அவரிடம் இந்தப் பாடல் குறித்து ஒருவர் கேட்ட போது அவர் சொன்னது இது.

”பொதுவா கும்முன்னு இருக்குற பொண்ணுகளை கிழங்கு மாதிரி இருக்கான்னு கிராமப் புறங்கள்ல சொல்லுவாங்க, ராதாவும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க நேட்டிவ் கேரளா, கேரளாவுல கப்பக் கிழங்கு தான பேமஸ். அதுதான் வாடி என் கப்பக் கிழங்கேன்னு எழுதுனேன். என்றார்.

இது அப்போது எல்லோருடைய கருத்தும் தான்.

அம்பிகா திருமணத்துக்குப் பின் விவாகரத்து, மறுமணம், கேரக்டர் ரோல், காமெடி ரோல், சின்னத்திரை என தன் கெத்தை விட்டு விட்டார்.

ஆனால் ராதாவோ ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டதோடு சரி, மீடியாவில் இருந்து விலகி விட்டார். தற்போது தன் பெண்ணுடன் திரும்பி வந்திருக்கிறார். வேறு எதிலும் தலைகாட்டி தன் கெத்தை இறங்கிவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அக்கால இளைஞர்களின் காணாமல் போய்விட்ட கனவு தேவதையாகவே இன்னும் இருக்கிறார்.

அது போல சூர்யாவா, கார்த்தியா யார் முந்தப் போகிறார் என்பது சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

அம்பிகா,ராதாவுக்கு நிழலில் கணவராக நடித்த சிவகுமார் நிஜத்தில் சூர்யா-கார்த்திக்கு தந்தை என்பது இதில் ஒரு சுவராஸ்யமான ஒற்றுமை.