பேருந்துகளில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து 25 வருடங்களாகிறது. எத்தனை விதமான கண்டக்டர்கள்! இடத்தோல் பட்டையிலே தோல் பையைத் தொங்கவிட்டு, அக்கையிலேயே எல்லா டிக்கட் புத்தகங்களையும் அடுக்கிக் கொண்டு விரலிடுக்கில் ஐந்து, பத்துக்களை மடித்து வைத்துக் கொண்டு, வலக்கையில் நீள நகங்களை வளர்த்துக் கொண்டு வாயிலேயே விசில் கொடுக்கும் மதுரை ஏரியா கண்டக்டர்கள், நீள் செவ்வக அட்டையில் ரேட் வாரியாக டிக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு மெதுவாக இயங்கும் நாஞ்சில் ஏரியா கண்டக்டர்கள், மரியாதையாக நடத்தி மணி அடித்து பஸ்ஸை வழிநடத்தும் கொங்கு ஏரியா கண்டக்டர்கள், பில்கேட்ஸே ஏறினாலும் பிச்சைக்காரனைப் போல் மதிக்கும் சென்னை கண்டக்டர்கள் என டவுன் பஸ்களில் மட்டும் எத்தனை வகை?
மினி பஸ், ஷேர் ஆட்டோ/டாடா மேஜிக் கண்டக்டர்களில் இருந்து தொலைதூர பேருந்து கண்டக்டர்கள் வரை பல ஜாதியினர் இருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் இரண்டே பிரிவுகளில் தான் அடங்குவார்கள். கவர்மெண்ட், பிரைவேட்.
கவர்மெண்ட் கண்டக்டர்கள் என்றால், எப்படியாவது சாம, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகங்களில் நுழைந்து விடுபவர்கள். அவ்வளவுதான். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான். இவர்களுக்கும் பிரைவேட் கண்டக்டர்களுக்கும் திறமை அளவில் பெரிய வேறுபாடு இருக்காது. சொல்லப்போனால் பிரைவேட் கண்டக்டர்களின் ஸ்மார்ட்னெஸ் இவர்களிடம் அறவே இருக்காது.
அரசு கண்டக்டர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அந்த வக்காபுலரி ஒரு இருபது சொச்ச வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நைட் டூட்டி, சொச்சக்காசு, எல்பிஎஃப், சிஐடியு, ஐஎண்டியூசி, பி எம், கலெக்ஷன் பேட்டா, செக்கரு, போனஸ், டொச்சு ரூட்டு போன்றவையே அவை.
இன்னொரு வகையான பிரைவேட்டில் தான் மினி பஸ் கண்டக்டர் முதல் ஆம்னி பஸ் கண்டக்டர் வரை அடங்குவார்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் எந்த வாகனமாய் இருந்தாலும் இவர்களின் சம்பளத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மாவுக்கேத்த பனியாரம் என்பது போல கலெக்சனுக்கு ஏற்பவே இவர்கள் சம்பளம்.
இவர்களின் கனவே எப்படியாவது அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து விட வேண்டும் என்பது தான்.
இந்தக் கூட்டத்தில் தான் பல வகையான பர்சனாலிட்டிகளைப் பார்க்கலாம். இசை அமைத்தவர் கூட மறந்து விட்ட பாடல்களை ஞாபகமாக வைத்து, சிச்சுவேஷன் பாடல் கேசட் தயாரிப்பவர்கள், காக்கியாக இருந்தாலும் பூட் கட், ஷார்ட் குர்தா என டிரெண்டுக்கு ஏற்ப தைத்துப் போடுபவர்கள், வாகனத்தில் ரெகுலராக வரும் கல்யாணமாகாத பெண்களுக்கு இடம் போட்டு மனதில் இடம் பிடிப்பவர்கள், கூட்டம் எவ்வளவு இருந்தாலும், பாடல் எவ்வளவு சத்தமாக ஒலித்தாலும், அரை டிக்கட் பிரச்சினை, லக்கேஜ் பிரச்சினை என எல்லாவற்றையும் சமாளித்து கடைசி டிக்கட் கிழித்த உடனேயே அசிஸ்டெண்ட் கண்டக்டரிம் கணக்கை சொல்லும் அளவுக்கு தசாவதானிகள் என பல வகை உண்டு.
70-90 களில் கண்டக்டர் வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தந்தை, உறவினர்களைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருந்தார்கள். பி யூ சி யோ, பத்தாம் வகுப்போ பெயிலாகியோ, நூல் பிடித்து பாஸ் செய்தவர்களுக்கோ போக்கிடம் போக்குவரத்து துறையாகத்தான் இருந்தது. 90களுக்குப் பின் கண்டக்டராக வந்தவர்களை குடும்ப வறுமையே உள்ளே தள்ளியிருக்கும். இப்போது கூட புதிதாக எந்த வாகனத்திலாவது கண்டக்டராக ஏறுபவர்களின் பின்னால் வசதிக் குறைவே முக்கிய காரணியாக இருக்கிறது.
இக்கால இளைஞர்களின் விருப்பத் தொழில்களில் கண்டக்டர் பணிக்கு கடைசி வரிசையில் தான் இடம் தான் இருக்கிறது. கவர்மெண்டில் கிடைக்காட்டி என்ன பண்ணுவது? என்பதே இவர்களின் முன்னால் இருக்கும் கேள்விக்குறி.
ட்ரைவராக வருபவர்களுக்கு இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. நல்ல தொழில் தெரிந்தவர்களுக்கு வழக்கமான நேரம் போக, டூரிஸ்ட் பஸ் ஓட்டுதல், நீண்ட தூரப் பயணங்களுக்கு இணையாகப் போகுதல் என பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். 60 வயதானால் கூட பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளின் வாகன ஓட்டுநராக இருந்து சமாளிக்குமளவுக்கு சம்பளம் பெறலாம்.
72க்குப் பின் தான் இந்த கவர்மெண்ட், பிரைவேட் பிரிவு. அப்போதைய காங்கிரஸுக்கு ரத்தம் பாய்ச்சியவர்கள் பண்ணையார்களும், பெரும் பஸ் முதலாளிகளான மதுரை டி வி எஸ், பொள்ளாச்சி மகாலிங்கம், திருச்சி, தஞ்சையில் கோலோச்சிய ராமன், சக்தி விலாஸ் போன்றவர்களும்தான். காங்கிரஸின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் பஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் தான். திமுகவின் 67 தேர்தல் அறிக்கையில் ரூபாய்க்கு படி அரிசி போன்ற கவர்ச்சிகர அம்சங்கள் இருந்தாலும், பஸ்களை அரசுடையாக்குவோம் என்ற கோஷமும் இருந்தது. எம்ஜியார் பிரச்சாரம் என்ற பிரம்மாஸ்திரம், இந்தி எதிர்ப்பால் மாணவர் ஆதரவு என்ற நாகாஸ்திரம் ஆகியவையே அண்ணாவுக்கு போதுமானதாக இருந்தது அந்த தேர்தலில்.
அம்புறாத்துணியில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் அரசுடமையாக்கம் என்ற அஸ்திரத்துக்கு வேலை கொடுத்தவர் கருணாநிதிதான். 67 அமைச்சரவையில் போக்குவரத்து, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்று அண்ணா மறைவுக்குப் பின் 69ல் முதல்வரான பின் காங்கிரஸின் பொருளாதார மூலத்தை அசைக்க அதை எய்தார்.
50 பேருந்துகளை மட்டும் முதலாளிகள் வைத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் உள்ளவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற ஆணையால் வெறுப்புற்ற மதுரை டி வி எஸ் நிர்வாகம், எனக்கு பஸ்ஸே வேணாம், பார்சல் சர்வீஸ் நடத்திக்கிறேன் என்று மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டது.
இந்த நிகழ்வு தமிழகத்தில் ஓரளவுக்கு சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஒன்று. தனியார் வேலைகள் குறைவாகவும், மிக மிக குறைவான சம்பளத்துடனும் இருந்ததால் 80,90 களில் ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
91-96 ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறை பஸ் கட்டணம் உயர்த்தப் பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான நெடுஞ்செழியன் நிருபர்களிடம் பேசும் போது சொன்னார், கோயம்புத்தூர்ல நாலு பஸ் வச்சிருக்கவங்க நாலஞ்சு வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுறாங்க. இவ்வளோ பஸ் வச்சுக்கிட்டு நாம நஷ்டத்துக்கு ஓட்டுறோம் என்று.
கார்பொரேஷன் கண்டக்டர்கள் நீ ஏறினா என்ன, ஏறாட்டி என்ன என்ற முக பாவத்துடனே பெரும்பாலும் காணப்படுவார்கள். காரணம் அவர்களுக்கு கிடைக்கும் கலெக்ஷன் பேட்டா, மற்ற அலவன்ஸுகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவுதான்.
ஆனால் தனியார் பேருந்துகளிலோ, சம்பளம் என்பது பேருக்குத்தான். கலெக்ஷன் பேட்டாதான் கண்டக்டர்களின் முக்கிய வருமானம். அதனால் அவர்கள், ஆள் ஏற்றுவது, டயத்தை நெருக்கி வண்டி எடுப்பது என்று சகல வித்தைகளையும் காட்ட வேண்டியுள்ளது.
ஆனால் இவற்றை வைத்து கார்பொரேஷனின் நஷ்டத்திற்கு கண்டக்டர்கள் தான் காரணம் என்ற முடிவுக்கு யாரும் வர வேண்டாம். அவர்களின் பங்கு இதில் ஓரளவே.
தற்போது அதிக அளவில் டிக்கெட் விலை ஏறியபோதும், ஜெயவிலாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், பெரிதும் விலை ஏற்றவில்லை. சொல்லப் போனால் இந்த ரேட்டுக்கு வண்டி ஓட்டினால் திவாலாகிப் போய்விடுவோம், நான் எங்கே போவது என ஜெயலலிதா மடிப்பிச்சை கேட்ட சமயத்தில் தனியார் பஸ் முதலாளிகள் எல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
தனியார் முதலாளிகள் எல்லாம் ரேடியல் டயர் போட்டு, டீசல் உபயோகத்தை குறைக்கிறார்கள். ஆனால் கார்பொரேஷனில் கமிஷன் காரணமாக தொடர்ந்து டயர்களுக்கு ரீ பட்டன் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எஞ்சின் ஆயில் வாங்குவதில் இருந்து, சகல உதிரிப்பாகங்களுக்கும் கமிஷன். இதில் இரண்டு வண்டிகளுக்கு இடையே பாகங்களை மாற்றிப் போட்டு இரண்டு செட் உதிரிப்பாகங்கள் வாங்கியதாக மோசடி பில்கள் வேறு.
போக்குவரத்து விஜிலன்ஸ் அதிகாரி பதவியிடமானது, பழிவாங்கப்படும் இடமாகப் பார்க்கப்படுவதால் அங்கே வருபவர்களும் டீமாரலைஸ் ஆகி விடுகிறார்கள். பஸ் டி ஜி பி என்று திரைப்படங்களில் கிண்டல் செய்யப்படும் அளவுக்கு அந்தப் பதவி இருக்கிறது.
பஸ் இரவு நேரங்களில் ஓட ஜீவாதாரமானது ஹெட் லைட். அதைக்கூட மாற்றுவதில்லை நம் ஆட்கள். எனவே பெரும்பாலான ட்ரைவர்கள், தனியே பல்பு வாங்கி வைத்துள்ளார்கள். இரவு ட்ரிப் எடுக்கப் போகும்முன் அதை மாட்டி விட்டு, இறங்கும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
ஆட்சியில் உள்ள தொழிற்சங்கங்க நிர்வாகிகள் வேலை செய்யத் தேவையில்லை என்ற உயரிய வழக்கமும் இங்கேயிருக்கிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு டூட்டி போடும் அதிகாரமும் இவர்கள் கையில் உள்ளதால் எந்த சங்கத்திடமாவது அடைக்கலம் ஆக வேண்டிய கட்டாயமும் உண்டு.
இததனை குறைகள் இருந்தாலும் குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஏழை மாணவர் இலவச பஸ் பாஸ், அரசு சம்பளத்தினால் பல குடும்பங்களுக்கு ஏற்பட்ட உயர்வு என்ற அம்சங்களும் உள்ளன. முழுக்க முழுக்க போக்குவரத்து தனியாரிடமே இருந்தால் இவையெல்லாம் கனவாகவே இருக்கும்
இந்தக் குறையெல்லாம் நல்ல அக்கவுண்டபிலிடி உள்ள சிஸ்டத்தாலும், கடுமையான விஜிலன்ஸ் முறை மூலமும் சரி செய்யக்கூடியவையே.
சில மாதங்களுக்கு முன் பெரும் மனக் கிலேசத்தில் இருந்த நாளொன்றின் இரவில் அதை அதிகப்படுத்தும் விதமாக நெருங்கிய உறவினரின் இறப்புச் செய்தி வேறு வந்தது. தனியார் பேருந்தில் பயணிக்கையில் முதல் 15 நிமிடங்கள் ஒலித்த பாடல்களை சரியாக கவனிக்கவில்லை. பின்னர் தான் அவை ஒரே கருத்துப் பிண்ணனியில் அமைந்த பல்வேறு காலகட்டத்தில் வெளியான பாடல்கள் என்று உணர்ந்தேன். இரண்டு மணி நேரப் பயணத்தில் சுமார் 20 பாடல்கள். காலை முதல் இருந்த மனச் சோர்வு நீங்கி ஒரு தெளிவான மன நிலை பேருந்தை விட்டு இறங்கும் போது கிடைத்தது.
அந்த கண்டக்டரைப் பார்த்தேன். பெரும்பாலான கண்டக்டர்களைப் போலவே பிளஸ் டூ பெயிலாகி, வேன், மினி பஸ் என ஒரு சுற்று சுற்றி பின் இன் ஆடி ஓடி தனியார் பேருந்தில் இடம் பிடித்து, லைசென்ஸ் எடுத்து வைத்து கார்பொரேஷனுக்கும், கல்யாணத்துக்கும் காத்திருக்கும் வயதில் இருந்தார். அடுத்த போஸ்டிங்கின் போது ஏதாவது உப தெய்வத்துக்கு சில லட்சங்கள் கொடுத்து, அமைச்சர் அருள் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவராய் தோன்றினார்.
அவருக்கு அரசு கழகத்தில் வேலை கிடைக்காவிட்டால்? 50 வயது வரை அவர்கள் பாஷையில் சொன்னால், ரூட்டில் ஓடுவார். பின்னர் சரியா ஆள் ஏத்தத் தெரியல, வேகம் பத்தலை என கமெண்டுகள் வரும். ஒரு சுபயோகமில்லாத தினத்தில் அவரை கழட்டி விடுவார்கள். ஒரு நாளில் பஸ்ஸிற்குள்ளேயே 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடந்த அவர் கால்கள் எங்காவது அடைக்கலம் புகும்.
கிடைத்து விட்டால், மாதம் தவறாத சம்பளம், பயணப்படி, பஞ்சப் படி, ஸ்டிரைக் செய்யாமலே கிடைக்கும் போனஸ், போதும் போதும் எனும் அளவுக்கு கிடைக்கும் ஓய்வு, கல்யாண மார்க்கட்டில் கௌரவமான இடம், பிள்ளைக்கு கூட ஐ ஆர் டி டி யில் இட ஒதுக்கீடு, தமிழகம் முழுக்க குடும்பமே இலவசமாக பயணிக்கும் வசதி, சென்னையில் வசிக்கும் பாவப்பட்டர்கள் பொங்கல், தீபாவளிக்கு வர செய்யும் டிக்கட் ரெக்கமண்டேஷன்கள்.
சரியான பூசாரியைப் பிடிக்காததும், ஓரளவு வசதி இல்லாததும் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது
பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை
நன்றி
பிப்ரவரி 1 இதழின் பொறுப்பாசிரியர் கார்த்திகை பாண்டியன்
பண்புடன் இதழ் ஆசிரியர் குழு
February 07, 2012
February 06, 2012
பூவும் பூ சார் இடங்களும்
சில நாட்களுக்கு முன், சென்னையில், பேருந்துக்காக காத்து இருந்தபோது, அருகேயுள்ள பூக்கடையில் பூ வாங்கிய பெண் ஒருவர், தன் கணவரிடம் சன்னமான குரலில் பேசியது என் காதில் விழுந்தது.
“துஷ்டிக்கு கட்டுற மாதிரி இடம் விட்டு கட்டியிருக்காங்க”. கடந்த ஐந்தாண்டுகால சென்னை வாழ்க்கையில் இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் கேட்டது மிகக் குறைவு. பூ கட்டும் குடும்பத்திலோ அல்லது அதன் அருகாமை வீடுகளிலோ இருப்பவர்கள் தான் இந்த வார்த்தையைப் பிரயோகப் படுத்துவார்கள்.
அன்பு நண்பர் மருத்துவர் புருனோ ஒருமுறை சொன்னார் “சென்னையில் வழங்கப்படும் சிகிச்சையை தென் மாவட்டங்களில் கொடுத்தால் மருத்துவருக்கு அடிவிழும்” என்று.
அம்மாதிரி இங்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவை குறைவான தரத்தை கொண்டவையாகவே இருக்கின்றன. அன்பு நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் சென்னை புரோட்டா சால்னாவின் தரத்தைப் பற்றி சொல்லும் போது, “சாணியில் முக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது” என்பார். சென்னைவாசிகளுக்கு உண்மையான தரம் தெரிவது இல்லை என்பது மதுரைப் பகுதி மக்களின் உறுதியான எண்ணம்.
அதனால்தான் திண்டுக்கல்,சேலம்,மதுரை, விருதுநகர்,ஆம்பூர் என பல ஊர்களின் ஸ்பெசல் அயிட்டங்களும் சென்னையில் சக்கைப் போடு போடுகின்றன். சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை, சென்னை எல்லையைத் தாண்டி யாரும் சீண்டுவதில்லை.
மயிலாப்பூரில், மதுரை மல்லிகையை மட்டுமே கட்டி ஒரு கடையில் மாலை வேளையில் விற்கிறார்கள். முன் தினமே அட்வான்ஸ் கொடுத்தால்தான் கிடைக்கும் நிலையில் அதன் டிமாண்ட் இருக்கிறது.
இப்படி பூவிற்கு பெயர் போன, மதுரை ஏரியா பக்கம் பூக்காரர்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
பூக்கட்டி விற்பது தற்போது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே எல்லா ஜாதியினராலும் செய்யப் பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரம் பல ஆண்டுகளாக பல்வேறு ஜாதியினரால் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் பூக்கடைகள். முன்காலத்தில் பண்டாரம் என்ற பிரிவினர் மட்டும் இத்தொழில் ஈடுபட்டதாக பூக்கடைகாரகள் சொன்னார்கள்.
மதுரையைச் சுற்றியுள்ள பூக்கடைகாரர்களின் தினப்படி வாழ்க்கை காலை மூன்று மணியளவில் தொடங்கிவிடுகிறது.
சமயநல்லூர், மேலூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வரையிலான பூக்காரர்கள் மதுரையிலும், திண்டுக்கலுக்கு அருகிலுள்ளோர் திண்டுக்கலிலும், நிலக்கோட்டை தாலுகா, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளோர் நிலக்கோட்டையிலும் பூ வாங்குவார்கள் (அவர்கள் மொழியில் உதிரிப்பூ). மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வர இந்தப் பூக்கடைகளும் காரணம். 12 மணிக்கு மேல் தான் பூ வரத்து தொடங்கும். காலை நாலு மணிக்குள் வியாபாரிகள் வாங்கிப் போய்விடுவார்கள்.
அப்படி வாங்கிச் சென்ற பூக்களை தாங்கள் பிடித்து வைத்திருக்கும் வீடுகளில் டெலிவரி செய்து விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசரத்திற்கேற்ப பூக்களை கட்டிக் கொடுப்பார்கள். இதற்கு மல்லிகை, கனகாம்பரம் என்றால் ஆயிரத்திற்கு இவ்வளவு என்றும், கதம்பப் பூவிற்கு பந்துக்கு இவ்வளவு என்றும் கட்டுக்கூலி நிர்ணயித்திர்ப்பார்கள்.
தீப்பெட்டி ஓட்டுவது, தீக்குச்சி அடுக்குவதை விட இது வருமானம் தர்ம் தொழில் தான். ஆனால் டிமாண்ட் மாறிக் கொண்டேயிருப்பதால் சீரான வருமானம் கட்டிக் கொடுப்பவர்களுக்கு இருக்காது.
பூக்கடைக் காரர்கள் ஒருவர், இருவருக்கு மேல் வேளைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை கட்டத் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும். மீதமுள்ளவற்றை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொள்வார்கள். தற்போது பெரிய நகர பூக்கடைகளில் மட்டுமே பலரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
சுப முகூர்த்த நாட்கள், தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாத அம்மன் பண்டிகளைகள், வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் பூ வியாபாரம் களை கட்டும். இந்த நாட்களில் விலை அதிகமாகவும் மற்ற நாட்களில் அதில் பாதியாகவும் இருக்கும். இருப்பதிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சமயங்களில் தான் பூ விலை உச்சத்துக்குப் போகும். ஏனென்றால் இந்தப் பண்டிகைகள்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள்.
இது தவிர கூடைகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகில் கடை போட்டிருக்கும் பெண்கள் ஆகியோர், பெரும்பாலும் கமிசன் வியாபாரிகளிடம் பூ வாங்கி கட்டி விற்பார்கள். இவர்களுக்கு ஆண்களின் சைக்காலஜி அத்துப்படி. கையில் பளபள பிரேஸ்லட், மோதிரத்தை வைத்து புது மாப்பிள்ளை என்று கண்டு பிடித்து விட்டால் எப்படியும் வாங்க வைத்து விடுவார்கள். ஆனால் பெண்களிடம் இவர்கள் ஜம்பம் செல்லாது. இது தவிர இப்போது வீடுகள், கடைகளுக்கு மாத விலை பேசி ரெகுலராக கொடுப்பவர்களும் அதிகரித்து உள்ளார்கள். அவர்கள் சீசனுக்கேற்ப அளவை கூட்டி குறைத்து கொடுப்பார்கள்.
பூ கட்டும் வீட்டை எளிதில் கண்டு பிடுத்து விடலாம். மல்லி, கனகாம்பரம், சாமந்தி என ஒரு கலவையான வாசனை அடிக்கும். தரை எப்பொழுதுமே ஈரமாக நசநசப்புடன் காணப்படும். வெளியில் பூக்கட்டுவதற்கான வாழை நாரை காய வைத்திருப்பார்கள். இப்போது பலரும் ட்வெயின் நூலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணி போட்டு வீட்டை புகை மண்டலமாக்கி விடுவார்கள். இல்லையெனில் சிறு சிறு பூச்சிகள், நச்சு உயிரினங்கள் படையெடுக்கத் துவங்கி விடும். ஏனென்றால் பல பெண்கள் குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டுதான் பூ கட்டுவார்கள்.
பூ கட்ட பயிற்றுவிக்கும் போது, முதலில் பேப்பரை கிழித்து, நூலில் கட்டி பழகச் சொல்வார்கள், பின் கதம்பம், கனகாம்பரம் என பழகி, இருப்பதிலேயெ கஷ்டமான மல்லிகைக்கு வருவார்கள். சுப நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாகவும், சாதரான உபயோகத்திற்கு நெருக்கமாகவும், துஷ்டிக்கு இடைவெளி விட்டும் கட்டுவார்கள். அடுத்த கட்டம் மாலை போட பழகுதல். இதை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் மாலை கட்டுவதில் ஒரு ஸ்டைல் உண்டு. மதுரைப் பக்கங்களில், ரோஜா மாலை கட்டி முடிந்தவுடன் ஜண்டி எனப்படும் மின்னும் பட்டு நூலால் அலங்கரிப்பார்கள். இதனான் பூ உதிர்வது தடுக்கப்படும். இந்த ஜண்டி அடிப்பது ஒரு கலை. மாலையை மேல் உத்திரத்தில் தொங்க விட்டு கீழ் நாரை கால் கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மாலையின் மேலும் கூழும் சுற்ற வேண்டும். இப்போது இடையில் தெர்மோ கோலால் செய்யப்பட்ட வண்ண அட்டைகளை வைக்கிறார்கள்.
துக்க நிகழ்வுகள் இவர்களுக்கு எதிர்பாராத வருமானம். பெரிய ஆட்கள் இறந்து விட்டால், பார்க்க வருபர்கள் வாங்குவது, கப்பல், தேர் போன்ற வடிவங்களில் பாடை கட்டுவது என பூ ஓடி அடையும்.
முன் காலத்தில் இத்தொழிலில் இருந்த சீரற்ற நிலை காரணமாக, பலர் வருமானக் குறைவால் அவதிப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பல பூக்காரர்கள் இப்போது கடன் வாங்கி ஐந்து அல்லது ஆறு பவுனுக்கு ஒரு நகையை வாங்கிக் கொள்கிறார்கள். அந்த கடனை தினப்படி வரவு வைத்து அடைக்கிறார்கள். பின் அந்த நகையை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கி, அதில் நகை வாங்கி, பின் திருப்பிக் கொள்கிறார்கள்.
சென்னையில் பூக்கடை ஏரியா, கோவையில் சென்ட்ரல் மார்க்கெட் என கட்டிய பூ விற்பனை கேந்திரங்கள் உள்ளன. இவை இரவு பகலாக செயல்படும். குழந்தை பிறந்த சில நாளில் செய்யப்படும் புண்ணிய தானம் முதல், அவன் நூறாண்டு வாழ்ந்து மறைந்தபின் சில நாட்கள் கழித்து செய்யப்படும் கருமாதி வரையிலான விசேஷங்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். இதே போல் மதுரையில் விளக்குத்தூணுக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தில் கிடைக்கும். இது போன்ற பகுதிகளில் இருந்துதான் சிறு பூக்கடைக்காரகள் சந்தனம், பத்தி முதலான பொருட்களை கொள்முதல் செய்து கொள்வார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பூக்கடைக்குச் சென்றிருந்தால் குறிப்பாக கோயில் சார்ந்த பூக்கடைகள். மாலை, கட்டிய பூ, சந்தனம், குங்குமம், பத்தி, கற்பூரம், தேங்காய், பழம் ஆகியவை மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அந்தக் கடைகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, துளசி மாலை, அருகம் பூ மாலை, எருக்கம் பூ மாலை போன்றவையே அதிகம் காணப்படுகின்றன.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர், மல்லிகை போன்ற மகளிர் பத்திரிக்கைகள் ஜாதகம், தோஷம், பரிகாரத்துக்கு விளக்கு போடுதல், மாலை சாத்துதல் என தீவிரப் பிரச்சாரம் செய்ததில் இந்த போக்கு அதிகமாகிவிட்டது. கணபதிக்கு அருகம்புல், செவ்வாய் முருகன், வியாழன் தட்சிணா மூர்த்தி, வெள்ளி துர்க்கைக்கு எண்ணெஉ, நெய் விளக்கு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு துளசி மாலை நெய் விளக்கு , சனி பகவானுக்கு எள் விளக்கு, என இப்பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன.
ஆமாம் முன்னெல்லாம் நோய் ஏற்பட்டால் எம் பி பி எஸ் டாக்டரைத்தான் பார்ப்போம். ஆனால் இப்போது கால லேசாக வலித்தால் ஆர்த்தோ, பசியால் கை நடுங்கினால் கூட நியூரோ என்று ஓடுகிறோமில்லையா?. அதுபோல் கடவுள்களிலும் ஸ்பெஷலிஸ்டுகள் பெருகிவிட்டார்கள்.
தட்சிணா மூர்த்திக்கு சுண்டல் மாலை நிறையப் பேர் கேட்குறாங்க, அதனால அடுத்த வியாழன்ல இருந்து அதுவும் செய்யலாம்னு இருக்கோம் என்றார்கள். விட்டால் வடை மாலையும் ரெடிமேடாய் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
முன்பைக் காட்டிலும் இப்போது பூ விலை அதிகரிக்கக் காரணம் அதிகமான உதிரிப்பூ விலையும் கட்டும் கூலியும் தான். மாலை வேளைகளில்தான் தோட்டங்களில் பூ பறித்தலை தொடங்குவார்கள். இரவு ஒன்பது, பத்து மணி வரை கூட பூ பறிப்பார்கள். வெயில் சேராதவர்கள், அருகிலுள்ள கிராமப் பெண்டிர் ஆகியோர் முன்னர் ஆர்வமாக பறிக்க வருவார்கள். இப்போது ஆட்கள் கிடைப்பது தட்டுப் பாடாய் இருக்கிறது என்கிறார்கள். மாலை வேளைகளில் கணவர், பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும், நாங்க இருந்தாத்தான் பிள்ளைக படுக்கிதுங்க போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. சொல்லப் படாத இன்னொரு காரணம் மாலை நேர சீரியல்கள். இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.
பூக்களை பத்திரப்படுத்த, பதப்படுத்த குளிர்பதன சேமிப்பு அறை நிலக்கோட்டை பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 84 ஆம் ஆண்டு தொகுதி அதிமுக எம் எல் ஏ அ. பாலுச்சாமி, ஒரு கோடியில் மல்லிகை செண்ட் தயாரிக்க ஆலை நிறுவுமாரு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். எம்ஜியாரும் சரி என்றார். அந்த ஆலை இன்னும் வந்த பாடில்லை. அதன்பின் ஏ எஸ் பொன்னமாள் (காங்கிரஸ்), மற்றும் அதற்கடுத்து வந்த பல அதிமுக எம் எல் ஏக்கள் குளிர்பதன சேமிப்பு அறைக்கு சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய அளவில் தங்கள் ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளுக்காக பல இடங்களில் காய்கறிக்கான வேர் ஹவுஸ் அமைத்து வருகிறது. அது போல் பூக்களுக்காகவும் வேர் ஹவூஸ் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. கார்பொரேட்கள் இதை கையில் எடுத்துக் கொண்டால் பிஸ்ஸாவுக்கு கோக் காம்போ போல பூவுக்கு விளக்கு காம்போ வாங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.
“துஷ்டிக்கு கட்டுற மாதிரி இடம் விட்டு கட்டியிருக்காங்க”. கடந்த ஐந்தாண்டுகால சென்னை வாழ்க்கையில் இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் கேட்டது மிகக் குறைவு. பூ கட்டும் குடும்பத்திலோ அல்லது அதன் அருகாமை வீடுகளிலோ இருப்பவர்கள் தான் இந்த வார்த்தையைப் பிரயோகப் படுத்துவார்கள்.
அன்பு நண்பர் மருத்துவர் புருனோ ஒருமுறை சொன்னார் “சென்னையில் வழங்கப்படும் சிகிச்சையை தென் மாவட்டங்களில் கொடுத்தால் மருத்துவருக்கு அடிவிழும்” என்று.
அம்மாதிரி இங்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவை குறைவான தரத்தை கொண்டவையாகவே இருக்கின்றன. அன்பு நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் சென்னை புரோட்டா சால்னாவின் தரத்தைப் பற்றி சொல்லும் போது, “சாணியில் முக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது” என்பார். சென்னைவாசிகளுக்கு உண்மையான தரம் தெரிவது இல்லை என்பது மதுரைப் பகுதி மக்களின் உறுதியான எண்ணம்.
அதனால்தான் திண்டுக்கல்,சேலம்,மதுரை, விருதுநகர்,ஆம்பூர் என பல ஊர்களின் ஸ்பெசல் அயிட்டங்களும் சென்னையில் சக்கைப் போடு போடுகின்றன். சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை, சென்னை எல்லையைத் தாண்டி யாரும் சீண்டுவதில்லை.
மயிலாப்பூரில், மதுரை மல்லிகையை மட்டுமே கட்டி ஒரு கடையில் மாலை வேளையில் விற்கிறார்கள். முன் தினமே அட்வான்ஸ் கொடுத்தால்தான் கிடைக்கும் நிலையில் அதன் டிமாண்ட் இருக்கிறது.
இப்படி பூவிற்கு பெயர் போன, மதுரை ஏரியா பக்கம் பூக்காரர்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
பூக்கட்டி விற்பது தற்போது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே எல்லா ஜாதியினராலும் செய்யப் பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரம் பல ஆண்டுகளாக பல்வேறு ஜாதியினரால் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் பூக்கடைகள். முன்காலத்தில் பண்டாரம் என்ற பிரிவினர் மட்டும் இத்தொழில் ஈடுபட்டதாக பூக்கடைகாரகள் சொன்னார்கள்.
மதுரையைச் சுற்றியுள்ள பூக்கடைகாரர்களின் தினப்படி வாழ்க்கை காலை மூன்று மணியளவில் தொடங்கிவிடுகிறது.
சமயநல்லூர், மேலூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வரையிலான பூக்காரர்கள் மதுரையிலும், திண்டுக்கலுக்கு அருகிலுள்ளோர் திண்டுக்கலிலும், நிலக்கோட்டை தாலுகா, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளோர் நிலக்கோட்டையிலும் பூ வாங்குவார்கள் (அவர்கள் மொழியில் உதிரிப்பூ). மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வர இந்தப் பூக்கடைகளும் காரணம். 12 மணிக்கு மேல் தான் பூ வரத்து தொடங்கும். காலை நாலு மணிக்குள் வியாபாரிகள் வாங்கிப் போய்விடுவார்கள்.
அப்படி வாங்கிச் சென்ற பூக்களை தாங்கள் பிடித்து வைத்திருக்கும் வீடுகளில் டெலிவரி செய்து விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசரத்திற்கேற்ப பூக்களை கட்டிக் கொடுப்பார்கள். இதற்கு மல்லிகை, கனகாம்பரம் என்றால் ஆயிரத்திற்கு இவ்வளவு என்றும், கதம்பப் பூவிற்கு பந்துக்கு இவ்வளவு என்றும் கட்டுக்கூலி நிர்ணயித்திர்ப்பார்கள்.
தீப்பெட்டி ஓட்டுவது, தீக்குச்சி அடுக்குவதை விட இது வருமானம் தர்ம் தொழில் தான். ஆனால் டிமாண்ட் மாறிக் கொண்டேயிருப்பதால் சீரான வருமானம் கட்டிக் கொடுப்பவர்களுக்கு இருக்காது.
பூக்கடைக் காரர்கள் ஒருவர், இருவருக்கு மேல் வேளைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை கட்டத் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும். மீதமுள்ளவற்றை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொள்வார்கள். தற்போது பெரிய நகர பூக்கடைகளில் மட்டுமே பலரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
சுப முகூர்த்த நாட்கள், தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாத அம்மன் பண்டிகளைகள், வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் பூ வியாபாரம் களை கட்டும். இந்த நாட்களில் விலை அதிகமாகவும் மற்ற நாட்களில் அதில் பாதியாகவும் இருக்கும். இருப்பதிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சமயங்களில் தான் பூ விலை உச்சத்துக்குப் போகும். ஏனென்றால் இந்தப் பண்டிகைகள்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள்.
இது தவிர கூடைகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகில் கடை போட்டிருக்கும் பெண்கள் ஆகியோர், பெரும்பாலும் கமிசன் வியாபாரிகளிடம் பூ வாங்கி கட்டி விற்பார்கள். இவர்களுக்கு ஆண்களின் சைக்காலஜி அத்துப்படி. கையில் பளபள பிரேஸ்லட், மோதிரத்தை வைத்து புது மாப்பிள்ளை என்று கண்டு பிடித்து விட்டால் எப்படியும் வாங்க வைத்து விடுவார்கள். ஆனால் பெண்களிடம் இவர்கள் ஜம்பம் செல்லாது. இது தவிர இப்போது வீடுகள், கடைகளுக்கு மாத விலை பேசி ரெகுலராக கொடுப்பவர்களும் அதிகரித்து உள்ளார்கள். அவர்கள் சீசனுக்கேற்ப அளவை கூட்டி குறைத்து கொடுப்பார்கள்.
பூ கட்டும் வீட்டை எளிதில் கண்டு பிடுத்து விடலாம். மல்லி, கனகாம்பரம், சாமந்தி என ஒரு கலவையான வாசனை அடிக்கும். தரை எப்பொழுதுமே ஈரமாக நசநசப்புடன் காணப்படும். வெளியில் பூக்கட்டுவதற்கான வாழை நாரை காய வைத்திருப்பார்கள். இப்போது பலரும் ட்வெயின் நூலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணி போட்டு வீட்டை புகை மண்டலமாக்கி விடுவார்கள். இல்லையெனில் சிறு சிறு பூச்சிகள், நச்சு உயிரினங்கள் படையெடுக்கத் துவங்கி விடும். ஏனென்றால் பல பெண்கள் குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டுதான் பூ கட்டுவார்கள்.
பூ கட்ட பயிற்றுவிக்கும் போது, முதலில் பேப்பரை கிழித்து, நூலில் கட்டி பழகச் சொல்வார்கள், பின் கதம்பம், கனகாம்பரம் என பழகி, இருப்பதிலேயெ கஷ்டமான மல்லிகைக்கு வருவார்கள். சுப நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாகவும், சாதரான உபயோகத்திற்கு நெருக்கமாகவும், துஷ்டிக்கு இடைவெளி விட்டும் கட்டுவார்கள். அடுத்த கட்டம் மாலை போட பழகுதல். இதை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் மாலை கட்டுவதில் ஒரு ஸ்டைல் உண்டு. மதுரைப் பக்கங்களில், ரோஜா மாலை கட்டி முடிந்தவுடன் ஜண்டி எனப்படும் மின்னும் பட்டு நூலால் அலங்கரிப்பார்கள். இதனான் பூ உதிர்வது தடுக்கப்படும். இந்த ஜண்டி அடிப்பது ஒரு கலை. மாலையை மேல் உத்திரத்தில் தொங்க விட்டு கீழ் நாரை கால் கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மாலையின் மேலும் கூழும் சுற்ற வேண்டும். இப்போது இடையில் தெர்மோ கோலால் செய்யப்பட்ட வண்ண அட்டைகளை வைக்கிறார்கள்.
துக்க நிகழ்வுகள் இவர்களுக்கு எதிர்பாராத வருமானம். பெரிய ஆட்கள் இறந்து விட்டால், பார்க்க வருபர்கள் வாங்குவது, கப்பல், தேர் போன்ற வடிவங்களில் பாடை கட்டுவது என பூ ஓடி அடையும்.
முன் காலத்தில் இத்தொழிலில் இருந்த சீரற்ற நிலை காரணமாக, பலர் வருமானக் குறைவால் அவதிப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பல பூக்காரர்கள் இப்போது கடன் வாங்கி ஐந்து அல்லது ஆறு பவுனுக்கு ஒரு நகையை வாங்கிக் கொள்கிறார்கள். அந்த கடனை தினப்படி வரவு வைத்து அடைக்கிறார்கள். பின் அந்த நகையை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கி, அதில் நகை வாங்கி, பின் திருப்பிக் கொள்கிறார்கள்.
சென்னையில் பூக்கடை ஏரியா, கோவையில் சென்ட்ரல் மார்க்கெட் என கட்டிய பூ விற்பனை கேந்திரங்கள் உள்ளன. இவை இரவு பகலாக செயல்படும். குழந்தை பிறந்த சில நாளில் செய்யப்படும் புண்ணிய தானம் முதல், அவன் நூறாண்டு வாழ்ந்து மறைந்தபின் சில நாட்கள் கழித்து செய்யப்படும் கருமாதி வரையிலான விசேஷங்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். இதே போல் மதுரையில் விளக்குத்தூணுக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தில் கிடைக்கும். இது போன்ற பகுதிகளில் இருந்துதான் சிறு பூக்கடைக்காரகள் சந்தனம், பத்தி முதலான பொருட்களை கொள்முதல் செய்து கொள்வார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பூக்கடைக்குச் சென்றிருந்தால் குறிப்பாக கோயில் சார்ந்த பூக்கடைகள். மாலை, கட்டிய பூ, சந்தனம், குங்குமம், பத்தி, கற்பூரம், தேங்காய், பழம் ஆகியவை மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அந்தக் கடைகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, துளசி மாலை, அருகம் பூ மாலை, எருக்கம் பூ மாலை போன்றவையே அதிகம் காணப்படுகின்றன.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர், மல்லிகை போன்ற மகளிர் பத்திரிக்கைகள் ஜாதகம், தோஷம், பரிகாரத்துக்கு விளக்கு போடுதல், மாலை சாத்துதல் என தீவிரப் பிரச்சாரம் செய்ததில் இந்த போக்கு அதிகமாகிவிட்டது. கணபதிக்கு அருகம்புல், செவ்வாய் முருகன், வியாழன் தட்சிணா மூர்த்தி, வெள்ளி துர்க்கைக்கு எண்ணெஉ, நெய் விளக்கு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு துளசி மாலை நெய் விளக்கு , சனி பகவானுக்கு எள் விளக்கு, என இப்பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன.
ஆமாம் முன்னெல்லாம் நோய் ஏற்பட்டால் எம் பி பி எஸ் டாக்டரைத்தான் பார்ப்போம். ஆனால் இப்போது கால லேசாக வலித்தால் ஆர்த்தோ, பசியால் கை நடுங்கினால் கூட நியூரோ என்று ஓடுகிறோமில்லையா?. அதுபோல் கடவுள்களிலும் ஸ்பெஷலிஸ்டுகள் பெருகிவிட்டார்கள்.
தட்சிணா மூர்த்திக்கு சுண்டல் மாலை நிறையப் பேர் கேட்குறாங்க, அதனால அடுத்த வியாழன்ல இருந்து அதுவும் செய்யலாம்னு இருக்கோம் என்றார்கள். விட்டால் வடை மாலையும் ரெடிமேடாய் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
முன்பைக் காட்டிலும் இப்போது பூ விலை அதிகரிக்கக் காரணம் அதிகமான உதிரிப்பூ விலையும் கட்டும் கூலியும் தான். மாலை வேளைகளில்தான் தோட்டங்களில் பூ பறித்தலை தொடங்குவார்கள். இரவு ஒன்பது, பத்து மணி வரை கூட பூ பறிப்பார்கள். வெயில் சேராதவர்கள், அருகிலுள்ள கிராமப் பெண்டிர் ஆகியோர் முன்னர் ஆர்வமாக பறிக்க வருவார்கள். இப்போது ஆட்கள் கிடைப்பது தட்டுப் பாடாய் இருக்கிறது என்கிறார்கள். மாலை வேளைகளில் கணவர், பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும், நாங்க இருந்தாத்தான் பிள்ளைக படுக்கிதுங்க போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. சொல்லப் படாத இன்னொரு காரணம் மாலை நேர சீரியல்கள். இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.
பூக்களை பத்திரப்படுத்த, பதப்படுத்த குளிர்பதன சேமிப்பு அறை நிலக்கோட்டை பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 84 ஆம் ஆண்டு தொகுதி அதிமுக எம் எல் ஏ அ. பாலுச்சாமி, ஒரு கோடியில் மல்லிகை செண்ட் தயாரிக்க ஆலை நிறுவுமாரு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். எம்ஜியாரும் சரி என்றார். அந்த ஆலை இன்னும் வந்த பாடில்லை. அதன்பின் ஏ எஸ் பொன்னமாள் (காங்கிரஸ்), மற்றும் அதற்கடுத்து வந்த பல அதிமுக எம் எல் ஏக்கள் குளிர்பதன சேமிப்பு அறைக்கு சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய அளவில் தங்கள் ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளுக்காக பல இடங்களில் காய்கறிக்கான வேர் ஹவுஸ் அமைத்து வருகிறது. அது போல் பூக்களுக்காகவும் வேர் ஹவூஸ் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. கார்பொரேட்கள் இதை கையில் எடுத்துக் கொண்டால் பிஸ்ஸாவுக்கு கோக் காம்போ போல பூவுக்கு விளக்கு காம்போ வாங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.
January 02, 2012
2002 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை
2001 ஆம் ஆண்டின் மொக்கைப் படங்களால் டயர்ட் ஆகி இருந்த தமிழ் சினிமா துறையையும், ரசிகர்களையும் ஆசுவாசப் படுத்தும்படி இந்த ஆண்டில் சில படங்கள் வெளியாகின.
அறிமுகங்கள்
இன்று பல கிராமியம் சார்ந்த, யதார்த்தக்கதை களன் கொண்ட படங்கள் வருவதற்கு அடித்தளமிட்ட படம் என்று அழகியைச் சொல்லலாம். வட மாவட்ட கதைக்களனை தமிழ் சினிமாவிற்கு வீரியமாக கொண்டுவந்த படம் இதுதான். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் தங்கர் பச்சான் தன் சிறுகதையையே அழகியல் ததும்ப படமாக்கினார். அன்று 30 வயதான பல ஆண்களை மூக்கு சிந்த வைத்த படம்.
இன்று சக போட்டியாளர்களாக விளங்கும் சிம்புவும், தனுஷ்ஷும் நாயகர்களாக அறிமுகம் ஆனது இந்த ஆண்டில்தான். எங்க வீட்டு வேலன் என்னும் படத்தை தன் சிறு வயதிலேயே அனாயாசமாக சுமந்திருந்தாலும், மோனிஷா என் மோனலிஷா வில் ஒரு பாட்டுக்கு வாலிப தோற்றத்தில் ஆடியிருந்தாலும், நாயகன் என்னும் முத்திரையுடன் சிம்பு அறிமுகமானது இந்த ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் தான். டி ஆர் தன் மகனுக்காக தமிழ் மக்களையும், பிரகாஷ் ராஜ், சீதாவையும் கடுப்படித்தார். இந்தப் பட அறிமுகம் சார்மி பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தார்.
செல்வராகனுக்கும் இதை அறிமுக ஆண்டு என சொல்லலாம். ஆனால் அபிசியலாக சொல்ல முடியாது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார். யுவனின் அருமையான பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு பலம் சேர்த்தது. ஷெரின்னின் கண் பார்வையில் வயசுப் பசங்கள் அனைவரும் சுருண்டார்கள். தனுஷ் இதில் அறிமுகமான போது யார் கணித்திருக்க முடியும், அவர் ரஜினியின் மாப்பிள்ளை ஆவார், தேசிய விருது பெறுவார். படங்களில் காண்பிப்பது போல் ஒரே பாட்டில் உலகப் பிரபலம் அடைவார் என்று. உண்மையான சிண்ட்ரெல்லா ஸ்டோரியை நாம் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே சமயத்தில் தான் இந்தி முதல்வன் ரீமேக்கில் கையைச் சுட்டுக்கொண்ட ஏ எம் ரத்னத்திற்காக பாய்ஸ் படத்தை ஷஙகர் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் மைய இழையும் ஒன்று தான். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததுடன் இல்லாமல் அவப் பெயரையும் பெற்றுத்தந்தது.
ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாமுராய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியன், சிட்டிசன் என முன் பிரதிகள் இருந்ததால் இது எடுபடாமல் போனது. ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குநரான வசந்த பாலனும் இந்த ஆண்டு ஆல்பம் மூலம் அறிமுகமானார். பின் இருவருமே முறையே காதல், வெயில் என தங்கள் குருவின் தயாரிப்பில் தங்களை நிரூபித்தார்கள்.
இன்று எஸ் பி முத்துராமன், ராஜசேகர், கே எஸ் ரவிகுமார் வரிசையில் மசாலா இயக்குநராக அறியப்படும் அருவா ஹரி இந்த ஆண்டு தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரை பேக் டிராப்பில் நடுத்தட்டு இளைஞன் வன்முறை பாதைக்கு பயணப்பட்டு பின் மீள்வதை வெற்றிகரமாக சொன்ன படம் இது.
நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகி விட்ட சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் ரெட். அஜீத், மதுரை பேக் டிராப் இருந்தும் படம் மரண அடி வாங்கியது.
பேராவூரணி எம் எல் ஏ அருண் பாண்டியன் எம் எல் ஏ ஆகக் காரணமான படம் தேவன். ரேஷன் அரிசி கடத்தலை மையமாக வைத்து தன் நூறாவது படத்தை [உண்மையிலே அவ்வளோ நடிச்சிட்டாரா?] அவரே இயக்கினார். விஜயகாந்த், கார்த்திக் துணை நின்றார்கள்.
ரோஜா கூட்டம் மூலம் ஸ்ரீகாந்த்தும், பைவ் ஸ்டார் மூலம் பிரசன்னாவும், தமிழன் மூலம் பிரியங்கா சோப்ராவும் இந்த ஆண்டு தமிழுக்கு அறிமுகமானார்கள்.
திறமையை நிரூபித்தவர்கள்
இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் ஆசிட் டெஸ்ட். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கதை இருக்கும். அதை அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இயக்கி வெளியிட்டால் அது வெற்றிதான். ஆனால் இரண்டாம் படம்?. அதில் வெற்றி பெறுபவர்களைத்தான் கோடம்பாக்கம் அங்கீகரிக்கிறது.
தீனா படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ஏ ஆர் முருகதாஸுக்கு ரமணா பெரும் பெயரைத் தந்தது. விஜயகாந்த் அரசியலில் இறங்க முதுகெலும்பாக இருந்தது. இப்படம் வெளியான நேரத்தில் அரசுப்பணியில் இருந்த உறவினர் ஒருவரை சந்தித்த போது, “படத்தைப் பார்த்தா வாங்கவே பயமா இருக்குடா” என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுத்த படம் இது.
ஆனந்தம் படம் மூலம் கால் வைத்த லிங்குசாமி வேகமெடுத்தது ரன் படத்தின் மூலம். அருமையான பாடல்கள், விவேக் காமெடி, உணர்ச்சிகளை சரியாக காட்டத் தெரிந்த நாயகன், அழகான கதாநாயகி, போதுமான வில்லன் என மக்களைக் கவர்ந்தது இந்தப் படம்.
நகைச்சுவை படங்கள்
இந்த ஆண்டில் ஏராளமான முழு நீள நகைச்சுவைப் படங்கள் வந்தன. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விவரமான ஆளு, ஷக்கலக்க பேபி, சார்லி சாப்ளின், ஒன் டூ த்ரி, தென்காசிப் பட்டணம், சுந்தரா டிராவல்ஸ், நைனா, இதில் சார்லி சாப்ளின் இந்திக்கு நோ எண்ட்ரி என்ற பெயரில் சென்றது. பம்மலும், தந்திரமும் சன் டிவிக்கு விடுமுறை நாட்களில் காலை 11க்கு திரையிட உபயோகப் பட்டது.
ஏமாற்றங்கள்
99 படையப்பாவுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து வந்த படம் பாபா. மதுரையில் இப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கைச் சுற்றி அதிகாலை இரண்டு மணிக் காட்சி காண்பதற்காக
ஒரு கிமீக்கு ரசிகர் வெள்ளம். இரவு 9 மணியில் இருந்தே பட்டாசு சத்தமும், குரலோசையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இங்கயே கத்தி தீர்த்துடாதீங்கடா, படத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க என்று பில்லா காலத்து ஆட்கள் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். படம் ஆரம்பித்தது. ஏதோ நியூஸ் ரீல் போல புண்ணிய ஷேத்திரங்கள், சாமியார்கள் என போய்க் கொண்டிருந்தது. ரஜினி ஒரு டர்ன் செய்து ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லி அறிமுகமாக மொத்த கூட்டத்துக்கும் பியூஸ் போனது. அவர்கள் பிரகாசமான மீண்டும் மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.
கன்னத்தில் முத்தமிட்டால் என்று மணிரத்னம் வந்தார். ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என யாரும் அங்கே போகவில்லை.
கமர்சியல் ஹிட்டுகள்
ஏ வி எம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரம், சரண் காம்பினேஷனில் எடுத்த ஜெமினி நல்ல வசூலைக் குவித்தது. கலாபவனின் மிருக மிமிக்ரி, சேட்டுப் பொண்ணு, ஓ போட்ட பாடல் என கலவை சரியாக அமைந்து வெற்றி பெற்ற படம் இது. இதே ஆண்டு வந்த சாமுராயும், கிங்கும் விக்ரமுக்கு தோல்வியைத் தந்தன.
ரெட், ராஜா என படு தோல்விகளுக்குப் பின் அஜீத்துக்கு வாழ்வு தந்தது வில்லன். யூகி சேதுவின் கதை, கே எஸ் ஆரின் திரைக்கதை, அஜீத்தின் நடிப்பு வெற்றிக்குப் போதுமானதாய் இருந்தது.
சூர்யா
உன்னை நினைத்து, ஸ்ரீ என அடிவாங்கினார்.
விஜய்
தமிழனில் சறுக்கினாலும் யூத்தில் நிலை கொண்டார்.
அறிமுகங்கள்
இன்று பல கிராமியம் சார்ந்த, யதார்த்தக்கதை களன் கொண்ட படங்கள் வருவதற்கு அடித்தளமிட்ட படம் என்று அழகியைச் சொல்லலாம். வட மாவட்ட கதைக்களனை தமிழ் சினிமாவிற்கு வீரியமாக கொண்டுவந்த படம் இதுதான். ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் தங்கர் பச்சான் தன் சிறுகதையையே அழகியல் ததும்ப படமாக்கினார். அன்று 30 வயதான பல ஆண்களை மூக்கு சிந்த வைத்த படம்.
இன்று சக போட்டியாளர்களாக விளங்கும் சிம்புவும், தனுஷ்ஷும் நாயகர்களாக அறிமுகம் ஆனது இந்த ஆண்டில்தான். எங்க வீட்டு வேலன் என்னும் படத்தை தன் சிறு வயதிலேயே அனாயாசமாக சுமந்திருந்தாலும், மோனிஷா என் மோனலிஷா வில் ஒரு பாட்டுக்கு வாலிப தோற்றத்தில் ஆடியிருந்தாலும், நாயகன் என்னும் முத்திரையுடன் சிம்பு அறிமுகமானது இந்த ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் தான். டி ஆர் தன் மகனுக்காக தமிழ் மக்களையும், பிரகாஷ் ராஜ், சீதாவையும் கடுப்படித்தார். இந்தப் பட அறிமுகம் சார்மி பின் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தார்.
செல்வராகனுக்கும் இதை அறிமுக ஆண்டு என சொல்லலாம். ஆனால் அபிசியலாக சொல்ல முடியாது. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார். யுவனின் அருமையான பாடல்கள் துள்ளுவதோ இளமைக்கு பலம் சேர்த்தது. ஷெரின்னின் கண் பார்வையில் வயசுப் பசங்கள் அனைவரும் சுருண்டார்கள். தனுஷ் இதில் அறிமுகமான போது யார் கணித்திருக்க முடியும், அவர் ரஜினியின் மாப்பிள்ளை ஆவார், தேசிய விருது பெறுவார். படங்களில் காண்பிப்பது போல் ஒரே பாட்டில் உலகப் பிரபலம் அடைவார் என்று. உண்மையான சிண்ட்ரெல்லா ஸ்டோரியை நாம் லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதே சமயத்தில் தான் இந்தி முதல்வன் ரீமேக்கில் கையைச் சுட்டுக்கொண்ட ஏ எம் ரத்னத்திற்காக பாய்ஸ் படத்தை ஷஙகர் எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் மைய இழையும் ஒன்று தான். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததுடன் இல்லாமல் அவப் பெயரையும் பெற்றுத்தந்தது.
ஷங்கரின் உதவி இயக்குநர் பாலாஜி சக்திவேல் சாமுராய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தியன், சிட்டிசன் என முன் பிரதிகள் இருந்ததால் இது எடுபடாமல் போனது. ஷங்கரின் இன்னொரு உதவி இயக்குநரான வசந்த பாலனும் இந்த ஆண்டு ஆல்பம் மூலம் அறிமுகமானார். பின் இருவருமே முறையே காதல், வெயில் என தங்கள் குருவின் தயாரிப்பில் தங்களை நிரூபித்தார்கள்.
இன்று எஸ் பி முத்துராமன், ராஜசேகர், கே எஸ் ரவிகுமார் வரிசையில் மசாலா இயக்குநராக அறியப்படும் அருவா ஹரி இந்த ஆண்டு தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். மதுரை பேக் டிராப்பில் நடுத்தட்டு இளைஞன் வன்முறை பாதைக்கு பயணப்பட்டு பின் மீள்வதை வெற்றிகரமாக சொன்ன படம் இது.
நகைச்சுவை நடிகராக பார்ம் ஆகி விட்ட சிங்கம்புலி இயக்குநராக அறிமுகமான படம் ரெட். அஜீத், மதுரை பேக் டிராப் இருந்தும் படம் மரண அடி வாங்கியது.
பேராவூரணி எம் எல் ஏ அருண் பாண்டியன் எம் எல் ஏ ஆகக் காரணமான படம் தேவன். ரேஷன் அரிசி கடத்தலை மையமாக வைத்து தன் நூறாவது படத்தை [உண்மையிலே அவ்வளோ நடிச்சிட்டாரா?] அவரே இயக்கினார். விஜயகாந்த், கார்த்திக் துணை நின்றார்கள்.
ரோஜா கூட்டம் மூலம் ஸ்ரீகாந்த்தும், பைவ் ஸ்டார் மூலம் பிரசன்னாவும், தமிழன் மூலம் பிரியங்கா சோப்ராவும் இந்த ஆண்டு தமிழுக்கு அறிமுகமானார்கள்.
திறமையை நிரூபித்தவர்கள்
இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் ஆசிட் டெஸ்ட். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கதை இருக்கும். அதை அப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இயக்கி வெளியிட்டால் அது வெற்றிதான். ஆனால் இரண்டாம் படம்?. அதில் வெற்றி பெறுபவர்களைத்தான் கோடம்பாக்கம் அங்கீகரிக்கிறது.
தீனா படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ஏ ஆர் முருகதாஸுக்கு ரமணா பெரும் பெயரைத் தந்தது. விஜயகாந்த் அரசியலில் இறங்க முதுகெலும்பாக இருந்தது. இப்படம் வெளியான நேரத்தில் அரசுப்பணியில் இருந்த உறவினர் ஒருவரை சந்தித்த போது, “படத்தைப் பார்த்தா வாங்கவே பயமா இருக்குடா” என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒரு இம்பாக்டை கொடுத்த படம் இது.
ஆனந்தம் படம் மூலம் கால் வைத்த லிங்குசாமி வேகமெடுத்தது ரன் படத்தின் மூலம். அருமையான பாடல்கள், விவேக் காமெடி, உணர்ச்சிகளை சரியாக காட்டத் தெரிந்த நாயகன், அழகான கதாநாயகி, போதுமான வில்லன் என மக்களைக் கவர்ந்தது இந்தப் படம்.
நகைச்சுவை படங்கள்
இந்த ஆண்டில் ஏராளமான முழு நீள நகைச்சுவைப் படங்கள் வந்தன. பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விவரமான ஆளு, ஷக்கலக்க பேபி, சார்லி சாப்ளின், ஒன் டூ த்ரி, தென்காசிப் பட்டணம், சுந்தரா டிராவல்ஸ், நைனா, இதில் சார்லி சாப்ளின் இந்திக்கு நோ எண்ட்ரி என்ற பெயரில் சென்றது. பம்மலும், தந்திரமும் சன் டிவிக்கு விடுமுறை நாட்களில் காலை 11க்கு திரையிட உபயோகப் பட்டது.
ஏமாற்றங்கள்
99 படையப்பாவுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து வந்த படம் பாபா. மதுரையில் இப்படம் திரையிடப்பட்டிருந்த அரங்கைச் சுற்றி அதிகாலை இரண்டு மணிக் காட்சி காண்பதற்காக
ஒரு கிமீக்கு ரசிகர் வெள்ளம். இரவு 9 மணியில் இருந்தே பட்டாசு சத்தமும், குரலோசையும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இங்கயே கத்தி தீர்த்துடாதீங்கடா, படத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்க என்று பில்லா காலத்து ஆட்கள் அட்வைஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். படம் ஆரம்பித்தது. ஏதோ நியூஸ் ரீல் போல புண்ணிய ஷேத்திரங்கள், சாமியார்கள் என போய்க் கொண்டிருந்தது. ரஜினி ஒரு டர்ன் செய்து ப்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொல்லி அறிமுகமாக மொத்த கூட்டத்துக்கும் பியூஸ் போனது. அவர்கள் பிரகாசமான மீண்டும் மூன்றாண்டுகள் தேவைப்பட்டது.
கன்னத்தில் முத்தமிட்டால் என்று மணிரத்னம் வந்தார். ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என யாரும் அங்கே போகவில்லை.
கமர்சியல் ஹிட்டுகள்
ஏ வி எம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் விக்ரம், சரண் காம்பினேஷனில் எடுத்த ஜெமினி நல்ல வசூலைக் குவித்தது. கலாபவனின் மிருக மிமிக்ரி, சேட்டுப் பொண்ணு, ஓ போட்ட பாடல் என கலவை சரியாக அமைந்து வெற்றி பெற்ற படம் இது. இதே ஆண்டு வந்த சாமுராயும், கிங்கும் விக்ரமுக்கு தோல்வியைத் தந்தன.
ரெட், ராஜா என படு தோல்விகளுக்குப் பின் அஜீத்துக்கு வாழ்வு தந்தது வில்லன். யூகி சேதுவின் கதை, கே எஸ் ஆரின் திரைக்கதை, அஜீத்தின் நடிப்பு வெற்றிக்குப் போதுமானதாய் இருந்தது.
சூர்யா
உன்னை நினைத்து, ஸ்ரீ என அடிவாங்கினார்.
விஜய்
தமிழனில் சறுக்கினாலும் யூத்தில் நிலை கொண்டார்.
Subscribe to:
Posts (Atom)