தெருவிலோ,பள்ளியிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பட்டப் பெயர் இல்லாதவர்களைப் பார்ப்பது அபூர்வமான ஒன்று. ஆனால் தன் பதினேழு வயதுவரை பட்டப்பெயர் இல்லாமல் தன் சொந்தப் பெயராலேயே அழைக்கப்படும் பாக்கியம் பெற்றவன் பாலாஜி.
அவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.
கப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான்.
முக்கியமாக நான் அப்படி இப்படி என்ற பீலாவும் இருக்காது. இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்.
அது குஷ்பூ, கவுதமி, பானுப்பிரியா என்ற முப்பெரும் தேவியர் தமிழக இளைஞர்களின் கனவில் ஆட்சி செய்த காலம். நாங்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு காலை மதியம் கிரிக்கெட், மாலை சினிமா, இரவு அரட்டை என திரிந்த காலம். அரட்டையில் அதிகம் அடிபடுவது தெருப்பெண்களே. அதிலும் எங்கள் தெருவில் இருந்த கங்கா மரண கட்டை கேட்டகிரியில் இருந்ததால் அவளைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும்.
அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்குணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.
ஒருமுறை இம்மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது பாலாஜி சொன்ன விஷயம், பெரியாரே பெருமாள் கோவிலுக்கு போகச் சொன்னதைப் போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவன் சொன்னது இதுதான் “ நான் இந்த தெருவில லவ் பண்ணறது வாணியதாண்டா”. அதிர்ச்சிக்கு காரணம் வாணி இரண்டாம் வகுப்பு. அதற்கு அவன் சொன்ன காரணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழில இருந்து பத்து வயசு வரைக்கும் வித்தியாசம் இருந்தாத் தாண்டா நல்லா இருக்கும். அதனாலதாண்டா அந்தக் காலத்தில எல்லாம் அது மாதிரி பண்ணியிருக்காங்க. எனக்கு முப்பதாகும் போது வாணிக்கு இருபதாகும். நான் நல்லா செட்டில் ஆயிருப்பேன். லைப் சூப்பரா இருக்கும். அவன் சொன்னது லாஜிக்கலாக இருந்தாலும் எங்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
செட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். என்னடா இவன் சரியான அகராதியா இருப்பான் போலிருக்கே என்று ஒருவன் சொல்ல, ஆகா கிடைச்சதுடா பாலாஜிக்கு ஒரு பட்டப் பெயர் என்று துள்ளிக் குதித்தேன். நேரடியாக அகராதி என்று சொல்ல முடியாததால் அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கில அகராதியான லிப்கோவின் பெயரையே அவனுக்குச் சூட்டினேன்.
ரோஜா, மீனா, நக்மா முப்பெரும் தேவியராக இருந்த காலம். கல்லூரி இறுதியாண்டு நேரம். வழக்கம் போல நடந்த அரட்டையில் ஒருவன் சொன்னான். “ நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.
உடனே பாலாஜி, நான் கட்டுற பொண்ணுக்கு ஒரு கல்யாணமான அக்காவும், அண்ணனும் இருக்கணும் என்றான். அவன் சொன்ன காரணம்,
ஏற்கனவே அக்காகாரி தன் புகுந்த வீட்டிலே இப்படி கொடுமை அப்படி கொடுமைன்னு புலம்பி, ரெண்டாவது பொண்ணு புகுந்த வீட்டு பிரச்சினக்கு மனசளவில தயாரா இருப்பா.
அண்ணனுக்கு கல்யாணாமாகி இருந்து அண்ணி வீட்டில இருந்தா இன்னும் விசேஷம். முணுக்குண்ணா கண்ணக் கசக்கி, மூக்கைச் சீந்தி, பெட்டிய தூக்கிட்டு கிளம்பாம. நம்ம வீட்டிலேயே இருப்பாங்க என்று முடித்தான். எல்லோருக்கும் தலையைச் சுற்றியது.
ரம்பாவின் மவுசு குறைந்து சிம்ரன், ஜோதிகா கனவை ஆக்ரமித்த காலம். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு காலம் தள்ளிய காலம். நல்ல வசதியான வீட்டில பொண்ணக் கட்டணும் என்று ஒரு குரூப்பும், வசதியில்லாத வீட்டில பொண்ணக் கட்டினா நமக்கு அடங்கி இருப்பாங்க என்று ஒரு குரூப்பும் வாக்குவாதத்தில் ஈடு பட்டிருந்தபோது பாலாஜி வாயைத் திறந்தான்.
“பரம்பரை பணக்காரங்க நமக்கு பொண்ணு தரமாட்டாங்க. புது பணக்கார வீட்டு பொண்ணுக தான் அதிகமா ராங்கி பண்ணும். வசதி இல்லாத வீட்டு பொண்ணு அடங்கி இருக்கும்னு சொல்லுறதெல்லாம் தப்பு. பொண்டாட்டிங்கிற பதவி கிடைச்சுட்டாலே எந்தப் பொண்ணா இருந்தாலும் ஆட்டம் காண்பிப்பாங்க. இவள்ளாம் நம்மளை அதிகாரம் பண்ணுறாளேன்னு நமக்கு கடுப்புதான் அதிகமாகும்.
அப்ப நீ என்னதாண்டா சொல்ல வர்றே என்று கடுப்பாக கேட்டோம்.
வாழ்ந்து கெட்ட குடும்பத்துப் பொண்ணத் தாண்டா கட்டனும் என்றவன் அதற்க்கு சொன்ன காரணம். “ அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.
அசின்,திரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா,பாவனா என பல தேவதைகள் இருந்தாலும் யாரும் கனவில் வராத காலம். செட்டில் பாலாஜியைத் தவிர அனைவரின் குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காதுகுத்து முடிந்திருந்த காலம். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்த காலம். எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் தற்போது பாலாஜிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
என்ன சொல்றான் பாலாஜி? என்றேன் அவரிடம்.
அவர் புலம்பத் தொடங்கினார். கல்யாணம்கிறதே ஒரு காம்பிரமைஸ்தான். மாப்பிள்ளை வீட்டில மொதோ ஆரம்பிக்கும் போது, பொண்ணு ஒல்லியா,சிவப்பா,களையா,வசதியா இருக்கணும்னு ஆரம்பிப்பாங்க. அதேபோல பொண்ணு வீட்டிலயும் மாப்பிள்ளைக்கு நல்ல வேளை இருக்கணும், அக்கா தங்கச்சி இருக்கக்கூடாதுன்னு ஆரம்பிப்பாங்க.
ஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்கி வந்துருவாங்க. ஆனா உங்க பிரண்டு சரியான அகராதிப்பா. ஒவ்வொருதடவை பார்க்கும் போதும் ஒரு படி மேல ஏறிக்கிட்டே இருக்கான். என்ன பண்ணுறதன்னே தெரியல என சலித்துக் கொண்டே முடித்தார்.
அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மனசு துடித்தாலும், அலுவலக,வீட்டு வேலைகள் கழுத்தைப் பிடிப்பதால் சின்னத் திரையில் பார்த்து மனசை தேற்றிக் கொள்ளும் காலம். அடுத்த வாரம் ஊரில் என் இரண்டாவது குழந்தைக்கு காதுகுத்து. பாலாஜியை நேரில் சந்தித்து அழைக்க சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்ன சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் சொன்னபிறகு அப்டேட் செய்கிறேன்.
அவன் உயரமும் இல்லை குட்டையும் இல்லை. குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை. கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. கரு கரு சுருட்டைமுடியும் இல்லை, எதிர்காலத்தில் ஏர்போர்ட்டாக மாறப்போவதை குறிப்பால் உணார்த்தும் ஏர் நெத்தியும் இல்லை.
கப்பக்கால்,கோணக்கால், கண்ணாடி, ஊளைமூக்கு, எத்துப்பல் வேர்வை வாடை, வாய் வீச்சம் எதுவுமில்லாமல் ஒரு நார்மலான தேக அமைப்பு. அணியும் உடை கூட அடிக்கும் கலர்,டிசைன் இல்லாமல் இருக்கும். அதற்காக வெளேரெனவும் இருக்காது. படிப்பில் கூட நூறும் எடுக்க மாட்டான், நாற்பதும் எடுக்க மாட்டான். எழுபதில் நிற்பான். கிரிக்கெட்டில் கூட மிடில் ஆர்டரில் இறங்கி 25 ரன் தேத்தி விடுவான்.
முக்கியமாக நான் அப்படி இப்படி என்ற பீலாவும் இருக்காது. இதனால் அவனுக்கு என்ன பட்டப் பெயர் வைப்பது என்று குழம்பி வைக்காமலேயே விட்டு விட்டோம்.
அது குஷ்பூ, கவுதமி, பானுப்பிரியா என்ற முப்பெரும் தேவியர் தமிழக இளைஞர்களின் கனவில் ஆட்சி செய்த காலம். நாங்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு காலை மதியம் கிரிக்கெட், மாலை சினிமா, இரவு அரட்டை என திரிந்த காலம். அரட்டையில் அதிகம் அடிபடுவது தெருப்பெண்களே. அதிலும் எங்கள் தெருவில் இருந்த கங்கா மரண கட்டை கேட்டகிரியில் இருந்ததால் அவளைப் பற்றியே பெரும்பாலும் பேச்சு இருக்கும்.
அதென்ன மரண கட்டை என்கிறீர்களா? ஒரு பெண் நடந்து போகும்போது நார்மலானவர்கள் திரும்பிப் பார்த்தால் அவள் கட்டை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் மங்குணி போல, மசையைப் போல இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அழகுடன் இருந்தால் அவள் மச கட்டை, செத்து பாடையில் போகிறவன் கூட திரும்பிப் பார்த்தால் அவள் மரண கட்டை.
ஒருமுறை இம்மாதிரி பேசிக்கொண்டிருக்கும் போது பாலாஜி சொன்ன விஷயம், பெரியாரே பெருமாள் கோவிலுக்கு போகச் சொன்னதைப் போன்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவன் சொன்னது இதுதான் “ நான் இந்த தெருவில லவ் பண்ணறது வாணியதாண்டா”. அதிர்ச்சிக்கு காரணம் வாணி இரண்டாம் வகுப்பு. அதற்கு அவன் சொன்ன காரணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழில இருந்து பத்து வயசு வரைக்கும் வித்தியாசம் இருந்தாத் தாண்டா நல்லா இருக்கும். அதனாலதாண்டா அந்தக் காலத்தில எல்லாம் அது மாதிரி பண்ணியிருக்காங்க. எனக்கு முப்பதாகும் போது வாணிக்கு இருபதாகும். நான் நல்லா செட்டில் ஆயிருப்பேன். லைப் சூப்பரா இருக்கும். அவன் சொன்னது லாஜிக்கலாக இருந்தாலும் எங்களால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
செட்டில் ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றி புறணி பேசும் வழக்கத்துக்கு ஏற்ப பாலாஜி இல்லாத சமயத்தில் அவனின் லாஜிக்கை கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். என்னடா இவன் சரியான அகராதியா இருப்பான் போலிருக்கே என்று ஒருவன் சொல்ல, ஆகா கிடைச்சதுடா பாலாஜிக்கு ஒரு பட்டப் பெயர் என்று துள்ளிக் குதித்தேன். நேரடியாக அகராதி என்று சொல்ல முடியாததால் அப்போது எனக்குத் தெரிந்த ஆங்கில அகராதியான லிப்கோவின் பெயரையே அவனுக்குச் சூட்டினேன்.
ரோஜா, மீனா, நக்மா முப்பெரும் தேவியராக இருந்த காலம். கல்லூரி இறுதியாண்டு நேரம். வழக்கம் போல நடந்த அரட்டையில் ஒருவன் சொன்னான். “ நாம கட்டுற பொண்ணு வீட்டுக்கு மொதோ பொண்ணா இருக்கணும். கூடவே ஒரு அழகான தங்கச்சியும், நல்ல தம்பியும் இருக்கணும்டா”. ஏன்னா அப்போத்தான் மொதோ மாப்பிள்ளைன்னு மரியாதை இருக்கும், கொழுந்தியாளை சைட் அடிக்கலாம், மச்சினன் பஸ் ஸ்டாண்டுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு பொட்டி தூக்கிட்டு வருவான், தேட்டருக்கு டிக்கட் எடுத்து தருவான்.
உடனே பாலாஜி, நான் கட்டுற பொண்ணுக்கு ஒரு கல்யாணமான அக்காவும், அண்ணனும் இருக்கணும் என்றான். அவன் சொன்ன காரணம்,
ஏற்கனவே அக்காகாரி தன் புகுந்த வீட்டிலே இப்படி கொடுமை அப்படி கொடுமைன்னு புலம்பி, ரெண்டாவது பொண்ணு புகுந்த வீட்டு பிரச்சினக்கு மனசளவில தயாரா இருப்பா.
அண்ணனுக்கு கல்யாணாமாகி இருந்து அண்ணி வீட்டில இருந்தா இன்னும் விசேஷம். முணுக்குண்ணா கண்ணக் கசக்கி, மூக்கைச் சீந்தி, பெட்டிய தூக்கிட்டு கிளம்பாம. நம்ம வீட்டிலேயே இருப்பாங்க என்று முடித்தான். எல்லோருக்கும் தலையைச் சுற்றியது.
ரம்பாவின் மவுசு குறைந்து சிம்ரன், ஜோதிகா கனவை ஆக்ரமித்த காலம். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு காலம் தள்ளிய காலம். நல்ல வசதியான வீட்டில பொண்ணக் கட்டணும் என்று ஒரு குரூப்பும், வசதியில்லாத வீட்டில பொண்ணக் கட்டினா நமக்கு அடங்கி இருப்பாங்க என்று ஒரு குரூப்பும் வாக்குவாதத்தில் ஈடு பட்டிருந்தபோது பாலாஜி வாயைத் திறந்தான்.
“பரம்பரை பணக்காரங்க நமக்கு பொண்ணு தரமாட்டாங்க. புது பணக்கார வீட்டு பொண்ணுக தான் அதிகமா ராங்கி பண்ணும். வசதி இல்லாத வீட்டு பொண்ணு அடங்கி இருக்கும்னு சொல்லுறதெல்லாம் தப்பு. பொண்டாட்டிங்கிற பதவி கிடைச்சுட்டாலே எந்தப் பொண்ணா இருந்தாலும் ஆட்டம் காண்பிப்பாங்க. இவள்ளாம் நம்மளை அதிகாரம் பண்ணுறாளேன்னு நமக்கு கடுப்புதான் அதிகமாகும்.
அப்ப நீ என்னதாண்டா சொல்ல வர்றே என்று கடுப்பாக கேட்டோம்.
வாழ்ந்து கெட்ட குடும்பத்துப் பொண்ணத் தாண்டா கட்டனும் என்றவன் அதற்க்கு சொன்ன காரணம். “ அந்தப் பொண்ணு திட்டுனாலும் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு மனசு சமாதானம் ஆயிடும். அடிக்கடி கோபிச்சுட்டு வீட்டுக்குப் போக மாட்டாங்க. நம்ம வசதி வாய்ப்பையும், திறமையையும் கேவலமா பேச மாட்டாங்க. வாழ்க்கையை உணர்ந்து இருப்பாங்க.
அசின்,திரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா,பாவனா என பல தேவதைகள் இருந்தாலும் யாரும் கனவில் வராத காலம். செட்டில் பாலாஜியைத் தவிர அனைவரின் குழந்தைகளுக்கும் மொட்டையடித்து காதுகுத்து முடிந்திருந்த காலம். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்த காலம். எனது பிரதான எதிரிகளில் ஒருவராய் மாறியிருந்த என் கல்யாணத் தரகரை எதேச்சையாய் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் தற்போது பாலாஜிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
என்ன சொல்றான் பாலாஜி? என்றேன் அவரிடம்.
அவர் புலம்பத் தொடங்கினார். கல்யாணம்கிறதே ஒரு காம்பிரமைஸ்தான். மாப்பிள்ளை வீட்டில மொதோ ஆரம்பிக்கும் போது, பொண்ணு ஒல்லியா,சிவப்பா,களையா,வசதியா இருக்கணும்னு ஆரம்பிப்பாங்க. அதேபோல பொண்ணு வீட்டிலயும் மாப்பிள்ளைக்கு நல்ல வேளை இருக்கணும், அக்கா தங்கச்சி இருக்கக்கூடாதுன்னு ஆரம்பிப்பாங்க.
ஆனா ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே இறங்கி வந்துருவாங்க. ஆனா உங்க பிரண்டு சரியான அகராதிப்பா. ஒவ்வொருதடவை பார்க்கும் போதும் ஒரு படி மேல ஏறிக்கிட்டே இருக்கான். என்ன பண்ணுறதன்னே தெரியல என சலித்துக் கொண்டே முடித்தார்.
அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மனசு துடித்தாலும், அலுவலக,வீட்டு வேலைகள் கழுத்தைப் பிடிப்பதால் சின்னத் திரையில் பார்த்து மனசை தேற்றிக் கொள்ளும் காலம். அடுத்த வாரம் ஊரில் என் இரண்டாவது குழந்தைக்கு காதுகுத்து. பாலாஜியை நேரில் சந்தித்து அழைக்க சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்ன சொல்லப் போகிறான் என்று தெரியவில்லை. அவன் சொன்னபிறகு அப்டேட் செய்கிறேன்.