ஒரு வீடு இரு வாசல் என்னும் படத்தில் சார்லிக்கு துணை நடிகர் வேடம். அவர் நடிக்க வந்திருக்கும் காட்சி ஒரு துக்க வீட்டுக் காட்சி. இறந்தவர் கிடத்தப்பட்டிருக்க சுற்றி நின்று அழ வேண்டும்.
இயக்குநர் அழுங்கள் என்று சொல்லிவிடுவார்.
சார்லி உடனே கேட்பார்.
சார், இறந்தவர் எந்த மொழிக்காரரு?, நாங்கள்ளாம் அவருக்கு என்ன உறவு முறை வேணும்?, இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நாங்க கரெக்டா பீல் பண்ணி அழ முடியும்?
கேமராவ டாப் ஆங்கிள்ல வச்சாத்தானே எங்க பீலிங்லாம் ஆடியண்சுக்கு கன்வே ஆகும்?
எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பார்.
உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் இதே மாதிரிதான் இயக்குநர்களிடம் கதறியிருப்பார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த விதமான கேரக்டரைசேஷனும் இல்லாமல் நாயகனின் நண்பன், நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் , நாயகனின் உருப்படாத அண்ணன், மச்சினன் என பொதுப்படையான கேரக்டர்களைக் கொடுத்தே அவரை நோகடித்தது தமிழ்த்திரையுலகம்.
இதனால்தான் 40 வயதிலும் கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டிய கட்டாயம் சார்லிக்கு ஏற்பட்டது. 40 வயதுக்குமேற்பட்ட நாயகன் திருமணம் ஆகாதவனாக நடிக்கும் போது, அவனை இளமையாகக் காட்ட அவனை விட வயது கூடியவர்களை துணைக்கு வைக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
அதுபோல கார்த்திக்,முரளி,சரத்குமார்களின் இளமைக்காக இவர் நண்பனாகவே நடிக்க வேண்டி வந்தது.
சார்லி நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். தகவல் ஒலிபரப்புத் துறையின் நாடகப் பிரிவில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த சார்லி, ரஷ்யன் கல்சுரல் சென்டரின் நூலகத்தில் உறுப்பினர். தான் எடுத்துப் படித்த புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் சென்ற சார்லி, அங்கு நடந்து கொண்டிருந்த ஹுயுமர் கிளப்பின் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார். இங்கே தன் திறமையையும் காண்பிக்கலாமே என் நினைத்து அமைப்பாளர்களை அணுகிணார். வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மோனோ ஆக்டிங்கையும் மிமிக்ரியையும் அங்கே பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜன் பாலசந்தரிடம் சிபாரிசு செய்ய பொய்க்கால்
குதிரை பட வாய்ப்பு சார்லிக்கு கிடைத்தது. அதன்பின் பாலசந்தர்,பாசில்,விக்ரமன் ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார்.
சத்யராஜ் அடிக்கடி சொல்லுவார், ”நமது திறமை என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டும் வரையில் தான் தமிழ் சினிமாவில் கஷ்டப்படவேண்டும். ஒருமுறை நமது திறமை வெளியே தெரிந்துவிட்டால் பின் நமக்கேற்ற கேரக்டர்களை அவர்களே உருவாக்கித் தந்துவிடுவார்கள்” என்று.
ஆனால் இது சார்லி விஷயத்தில் மட்டும் பொய்த்துப் போனது. தன்னால் என்னவெல்லாம் முடியும் என்று முடிந்தவரை அவரும் திறமையைக் காட்டிப்பார்த்தார். ஆனால் அவருக்காக என்றுமே கேரக்டர்களை தமிழ்சினிமா உருவாக்கவில்லை. அவரை ஒரு ஆயத்த ஆடையாகவே தமிழ்சினிமா இன்றுவரை உபயோகித்து வருகிறது. அறிமுகமோ, முடிவோ தேவையில்லாத நண்பன் வேடமா, வயது 30 சமீபமா?
சார்லியை போட்டுக்கிருவமா? சரியா இருப்பாருல்ல? அவர் நம்பர் என்னா? இதுதான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது.
புதுப் புது அர்த்தங்களில் தோண்டித் துருவும் நிருபன் வேடம். கேள்வியைக் கேட்கும் விதம், பதிலில் இருந்து இன்னொரு கேள்வியைக் கேட்கும் விதம், வேடத்துக்குப் பொருத்தமாக நாலு நாள் தாடி, சோடா புட்டிக் கண்ணாடி என இரண்டு சீனில் வரும் கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கெட்டிருப்பார்.
வண்ணக் கனவுகள் வேடம்,ஜெயபாரதி இயக்கி சந்திரசேகருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த நண்பா நண்பா திரைப்படத்தில் படுக்கையில் இருக்கும் நண்பனுக்க ஆறுதல் காட்டுபவன், வெற்றிக் கொடி கட்டில் துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்த கிராமத்தான்,என்னவளே திரைப்படத்தில் தன் உடல் ஊனத்தை மறைத்து நடிக்கும் இசைக் கலைஞன்,ஜெமினியில் பாலியல் தொழில் ஏற்பாட்டாளான், அமர்க்களத்தில் குருடன்,
கோபாலா கோபாலா செட்டியார் என அவ்வப்போது வித்தியாச வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வந்தாலும் நாயகனின் நண்பன் கூட்டம் என்னும் வட்டத்தை தாண்டுவது அவருக்கு பெரும்பாடாகவே இருக்கிறது. அன்னியன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு வேறு வகை வேடம் கொடுத்தலும் அரை ரீலுக்கு மேல் அவர் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.
சார்லி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு : 1937 முதல் 1967 வரை என்ற தலைப்பில் எம் பில் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கும் வரையில் அவருக்கு ஏற்ற வேடங்களை தமிழ்சினிமா கொடுக்கட்டும்.
புதுவசந்தம் திரைப்படத்தில் அவர் பேசும் பிரபல வசனம்
“எனக்கு நிலாச் சோறு சாப்பிடமும்னு ஆசை. வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறுதான் இல்லை”
அதுபோல நல்ல ரோல்ல நடிக்க ஆசை. நடிப்பு மட்டும்தான் இருந்துச்சு, ஆனா வாய்ப்புதான் கிடைக்கலை என்று மாற்றி அவர் புலம்பிவிடாமல் இருக்க தமிழ்சினிமா ஏதாவது செய்யட்டும்.
இயக்குநர் அழுங்கள் என்று சொல்லிவிடுவார்.
சார்லி உடனே கேட்பார்.
சார், இறந்தவர் எந்த மொழிக்காரரு?, நாங்கள்ளாம் அவருக்கு என்ன உறவு முறை வேணும்?, இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நாங்க கரெக்டா பீல் பண்ணி அழ முடியும்?
கேமராவ டாப் ஆங்கிள்ல வச்சாத்தானே எங்க பீலிங்லாம் ஆடியண்சுக்கு கன்வே ஆகும்?
எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பார்.
உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் இதே மாதிரிதான் இயக்குநர்களிடம் கதறியிருப்பார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த விதமான கேரக்டரைசேஷனும் இல்லாமல் நாயகனின் நண்பன், நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் , நாயகனின் உருப்படாத அண்ணன், மச்சினன் என பொதுப்படையான கேரக்டர்களைக் கொடுத்தே அவரை நோகடித்தது தமிழ்த்திரையுலகம்.
இதனால்தான் 40 வயதிலும் கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டிய கட்டாயம் சார்லிக்கு ஏற்பட்டது. 40 வயதுக்குமேற்பட்ட நாயகன் திருமணம் ஆகாதவனாக நடிக்கும் போது, அவனை இளமையாகக் காட்ட அவனை விட வயது கூடியவர்களை துணைக்கு வைக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
அதுபோல கார்த்திக்,முரளி,சரத்குமார்களின் இளமைக்காக இவர் நண்பனாகவே நடிக்க வேண்டி வந்தது.
சார்லி நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். தகவல் ஒலிபரப்புத் துறையின் நாடகப் பிரிவில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த சார்லி, ரஷ்யன் கல்சுரல் சென்டரின் நூலகத்தில் உறுப்பினர். தான் எடுத்துப் படித்த புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் சென்ற சார்லி, அங்கு நடந்து கொண்டிருந்த ஹுயுமர் கிளப்பின் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார். இங்கே தன் திறமையையும் காண்பிக்கலாமே என் நினைத்து அமைப்பாளர்களை அணுகிணார். வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மோனோ ஆக்டிங்கையும் மிமிக்ரியையும் அங்கே பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜன் பாலசந்தரிடம் சிபாரிசு செய்ய பொய்க்கால்
குதிரை பட வாய்ப்பு சார்லிக்கு கிடைத்தது. அதன்பின் பாலசந்தர்,பாசில்,விக்ரமன் ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார்.
சத்யராஜ் அடிக்கடி சொல்லுவார், ”நமது திறமை என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டும் வரையில் தான் தமிழ் சினிமாவில் கஷ்டப்படவேண்டும். ஒருமுறை நமது திறமை வெளியே தெரிந்துவிட்டால் பின் நமக்கேற்ற கேரக்டர்களை அவர்களே உருவாக்கித் தந்துவிடுவார்கள்” என்று.
ஆனால் இது சார்லி விஷயத்தில் மட்டும் பொய்த்துப் போனது. தன்னால் என்னவெல்லாம் முடியும் என்று முடிந்தவரை அவரும் திறமையைக் காட்டிப்பார்த்தார். ஆனால் அவருக்காக என்றுமே கேரக்டர்களை தமிழ்சினிமா உருவாக்கவில்லை. அவரை ஒரு ஆயத்த ஆடையாகவே தமிழ்சினிமா இன்றுவரை உபயோகித்து வருகிறது. அறிமுகமோ, முடிவோ தேவையில்லாத நண்பன் வேடமா, வயது 30 சமீபமா?
சார்லியை போட்டுக்கிருவமா? சரியா இருப்பாருல்ல? அவர் நம்பர் என்னா? இதுதான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது.
புதுப் புது அர்த்தங்களில் தோண்டித் துருவும் நிருபன் வேடம். கேள்வியைக் கேட்கும் விதம், பதிலில் இருந்து இன்னொரு கேள்வியைக் கேட்கும் விதம், வேடத்துக்குப் பொருத்தமாக நாலு நாள் தாடி, சோடா புட்டிக் கண்ணாடி என இரண்டு சீனில் வரும் கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கெட்டிருப்பார்.
வண்ணக் கனவுகள் வேடம்,ஜெயபாரதி இயக்கி சந்திரசேகருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த நண்பா நண்பா திரைப்படத்தில் படுக்கையில் இருக்கும் நண்பனுக்க ஆறுதல் காட்டுபவன், வெற்றிக் கொடி கட்டில் துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்த கிராமத்தான்,என்னவளே திரைப்படத்தில் தன் உடல் ஊனத்தை மறைத்து நடிக்கும் இசைக் கலைஞன்,ஜெமினியில் பாலியல் தொழில் ஏற்பாட்டாளான், அமர்க்களத்தில் குருடன்,
கோபாலா கோபாலா செட்டியார் என அவ்வப்போது வித்தியாச வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வந்தாலும் நாயகனின் நண்பன் கூட்டம் என்னும் வட்டத்தை தாண்டுவது அவருக்கு பெரும்பாடாகவே இருக்கிறது. அன்னியன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு வேறு வகை வேடம் கொடுத்தலும் அரை ரீலுக்கு மேல் அவர் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.
சார்லி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு : 1937 முதல் 1967 வரை என்ற தலைப்பில் எம் பில் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கும் வரையில் அவருக்கு ஏற்ற வேடங்களை தமிழ்சினிமா கொடுக்கட்டும்.
புதுவசந்தம் திரைப்படத்தில் அவர் பேசும் பிரபல வசனம்
“எனக்கு நிலாச் சோறு சாப்பிடமும்னு ஆசை. வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறுதான் இல்லை”
அதுபோல நல்ல ரோல்ல நடிக்க ஆசை. நடிப்பு மட்டும்தான் இருந்துச்சு, ஆனா வாய்ப்புதான் கிடைக்கலை என்று மாற்றி அவர் புலம்பிவிடாமல் இருக்க தமிழ்சினிமா ஏதாவது செய்யட்டும்.