December 26, 2008

27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர அறிமுகம்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசுவார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் கும்மி. கொலைவெறியுடன் எல்லா விஷயங்களும் கும்மப்படும்.


இரவு 8.30 மணி


அவுங்கவுங்க வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு


சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வாழ் முன்னாள்,இன்னாள், வருங்கால பதிவர்கள், வாசகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறோம்.

சந்திப்புக்கு அமைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. வருபவர்கள் அனைவரும் அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர்களே.

மேலதிக விபரங்களுக்கு சந்திப்பு பற்றிய அதிஷாவின் பதிவு

22 comments:

வினையூக்கி said...

சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துகள்

புதுகை.அப்துல்லா said...

கிளம்பிட்டேன் அபுதாபில் இருந்து....வந்துக்கிட்டே இருக்கேன் :)

ஆயில்யன் said...

ஆஹா நிகழ்ச்சி நிரல் எல்லாம் பயங்கர பர்பெக்டா பிளான் பண்ணி செய்றீங்க!

இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்!

நசரேயன் said...

வாழ்த்துக்கள் வட அமெரிக்கா வலைப் பதிவர்கள் சார்பாக

சின்னப் பையன் said...

இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துகள்

Cable சங்கர் said...

உங்களை மணமானவர் லிஸ்டிலிருந்து விலக்கி கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

(புதிய வரவுக்கு வாழ்த்துக்கள்)

அத்திரி said...

//டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...((((----


அண்ணே ரொம்பநாளா ஆளைக்காணோமே....

நம்ம கட பக்கம் வந்து பாருங்க..

முரளிகண்ணன் said...

\\உங்களை மணமானவர் லிஸ்டிலிருந்து விலக்கி கொண்டதை வன்மையாக கண்டிக்கிறேன்\\

கேபிளாரே நாம போடுற பதிவில நமக்கு எப்படி விளம்பரம் கொடுக்க முடியும்?

முரளிகண்ணன் said...

அத்திரி இந்த சனி ஞாயிறு எல்லாப் பதிவுகளுக்கும் திக் விஜயம் செய்யப் போகிறேன்.

narsim said...

ஆஜர் ஆஜர் ஆஜர்..

Thamira said...

ஏய்.. இன்னாபா இது? சொல்லிட்டு பேர் போடுறதில்லையா.? இன்னா அராஜகமா இருக்குது. சின்ன கருப்பு மாமா மொய் 1000ங்கிறது மாதிரில்லா இருக்குது.. நடத்துங்கபா..

ரமேஷ் வைத்யா said...

மணமான ஆண்களின் உளைச்சல்களை// அரை மணி நேரத்தில் அலசி முடிக்கப் போகிறீர்களா..? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...

முரளிகண்ணன் said...

\\மணமான ஆண்களின் உளைச்சல்களை// அரை மணி நேரத்தில் அலசி முடிக்கப் போகிறீர்களா..? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு...\\

ரமேஷ் வைத்யா,

தங்களைப் போன்ற அனுபவசாலிகள் தீர்வோடு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எனவே அரைமணி நேரம் போதுமானதே.

anujanya said...

எல்லா பதிவர்கள் சார்பாகவும் லக்கி புத்தகம் வெளிவந்ததற்கு ஒரு பாராட்டு (டோண்டு சார் பாராட்டினால் சாலப் பொருத்தம்) செய்தால் நன்றாக இருக்கும். என்ன தான் எழுத்தில் படித்தாலும், நேரில் சக பதிவர்கள் பாராட்டினால் அதன் உற்சாகமே தனி.

ஸ்ரீ ஸ்ரீ பால்ராஜ் சுவாமிகளின் சிறப்புச் சொற்பொழிவு இருக்கிறதா? சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Anonymous said...

ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தால் அனைவரும் பகேற் வசதியாக இருக்கும். ஓ.கே. வாழ்த்துக்கள். பிறகொரு நாளில் சந்திக்கலாம்.
anbuvanam.blogspot.com

கார்க்கிபவா said...

என்னங்க இது???? நானும், ரமேஷ் வைதயாவும் வர்றோம்.. சிறுவர் சிறப்பு பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டி எதுவும் இல்லையா?

Poornima Saravana kumar said...

சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துகள்:)

அரவிந்தன் said...

என்ன முரளி,,

கிழக்கு கூட்டத்தில் சந்தித்தோமே சந்திப்பு குறித்து அப்போது சொல்லியிருக்கூடாதா.. இன்று மாலைதான் பெங்களூர் வந்து சேர்ந்தேன் :(-

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

முரளிகண்ணன் said...

கார்க்கி, நீங்க ஹைதராபாத்ல இருக்கீங்கன்னு நினைச்சேன். வாங்க வாங்க, நர்சிம் டாபிக்ல அடிச்சு ஆடுங்க

சாரி அரவிந்தன்,

ஆஹா மறந்துட்டனே :-(( , அடுத்தமுறை கட்டாயம் தெரிவித்துவிடுகிறேன்.

Anonymous said...

இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்!

இராகவன் நைஜிரியா said...

பதிவர் சந்திப்பு இனிதாக நடக்க வாழ்த்துக்கள்.

சந்திப்பு முடிந்தவுடன் விரிவாக பதிவு போடுங்கள்.. நாங்கள் படித்து பார்த்து ரசித்துக் கொள்கின்றோம்