February 25, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 3 (பாடத்திட்டமும் வேலைவாய்ப்பும்)

முந்தைய பகுதி


என் பி ஏ கமிட்டியின் எல்லைக்குள் வரும் உயர் படிப்புகள்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
மேலாண்மை
ஆர்க்கிடெக்சர்
மருந்தாளுமை [பார்மசி]
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங்
டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங்
அப்ளைடு ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ்


சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் தராசு அவர்கள் பாடத்திட்டங்கள் வேறுபடுமா? என்று வினவி இருந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் படித்த சிலபஸ்ஸே இப்போதும் இருப்பதாகக் கூறியிருந்தார்.

பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்த வரையில் பாடத்திட்டம் என்பது அவை சார்ந்திருக்கும் பல்கலைகள் வகுக்கும் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. அட்டானமஸ் தகுதி பெற்ற கல்லூரிகளும் அடிப்படையில் பல்லகலையின் பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகின்றன. நிகர் நிலை (டீம்டு) பலகலைக்கழகங்களும், தற்போது அக்கிரிடிடேசன் பெற்றிருந்தால் தான் நிகர் நிலை அந்தஸ்து வழங்கப்படும் என்று பல்கலை கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. எனவே அவற்றின் பாடத்திட்டமும் ஏ ஐ சி டி ஈ வழிகாட்டுதல் படி பல்கலைக் கழகம் வகுத்ததையே கொண்டிருக்கும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, +2 படித்து வரும் மாணவன் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணிப்பொறியியல் மட்டுமே படித்திருப்பான். அந்தத் துறையைப் பற்றிய அடிப்படைக் கல்வியை முதல் இரண்டு வருடங்கள் சிறப்பாக போதித்தால் மட்டுமே அவனால் துறையில் ஆழ்ந்த அறிவு பெற முடியும். அடிப்படைப் பாடங்கள் நூறாண்டு பழமை வாய்ந்ததே.

தற்போதைய அட்வான்ஸ்மெண்டுகளை அடுத்த இரண்டு வருடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளலாம். அடிப்படை அறிவு இருந்தால் வேலையில் சேர்ந்த பின் கூட பிக்கப் செய்து கொள்ளலாம்.

எனவே என் பி ஏ கமிட்டியானது, தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்கிறது.

ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?

தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?

புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?

போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.


இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு,
பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.

நூலகம்

பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் ரெபரன்ஸ் புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நூலகத்தில் இருக்க வேண்டும். அது போக ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கென டிபார்ட்மெண்ட் லைப்ரரியும் இருக்க வேண்டும். அதில் புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு, ஆராய்ச்சி கட்டுரைகளைத் தாங்கி வரும் சர்வதேச சஞ்சிகைகள் தேவை. அவை எவ்வளவு நூலகத்தில் உள்ளன என்பதும் ஒரு அளவுகோல். தற்போது ஆன்லைனில் எல்லாம் கிடைக்கின்றன. இதுபோக பெரிய பல்கலை, மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தப் செய்து கொண்டு அவர்கள் மூலம் எவ்வளவு புத்தகங்கள் பெறுகிறோம் என்று பார்ப்பார்கள். தற்போது ஐ ஐ டி, அண்ணா பல்கலை ஆகியவை இணையத்தில் தங்கள் பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளை வலையேற்றி வைத்துள்ளார்கள். இவற்றை கவனிக்க மல்டி மீடியா வசதி நூலகத்தில் உள்ளதா? என்றும் பார்ப்பார்கள்.


வேலைவாய்ப்பு

மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதே வேலை வாய்ப்புக்காகத்தான். எனவே மாணவர்களின் எம்ப்ளாயபிலிடிக்கு கல்லூரி என்ன செய்திருக்கிறது? என்று பார்ப்பார்கள்.

எத்தனை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன?. எந்தெந்த துறைக்கு? யாரால்? போன்றவற்றிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பயிற்சி முடிவுக்குப் பின் மாணவர்களிடம் இருந்து பீட் பேக் பெற்று தொகுத்து வைத்திருக்க வேண்டும்.

எத்தனை வளாகத்தேர்வுகள் நடந்தன?, அவற்றில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? அதிகபட்ச/குறைந்த பட்ச/ சராசரி சம்பளம் எவ்வளவு? ஆகிய விபரங்கள் கடைசி மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காப்பிகள் கூட சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

ஏனென்றால் உள்ளூர் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்து கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தனை விபரங்களும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் ஆய்வின் ஓர் அங்கமாக எம்ப்ளாயர் மீட் எனப்படும் கூட்டம் நடத்தப்படும். அதில் வேலை வாய்ப்பு அளித்தோர்களும், கமிட்டியினர் மட்டும் இருப்பார்கள். அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை, கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை விசாரித்து உறுதி செய்து கொள்வார்கள்.

தொடரும்

2 comments:

தராசு said...

மிகச் சரியான விளக்கம் முரளி.

தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்.

Vidhya Chandrasekaran said...

Hv shared an award with you:)

http://vidhyascribbles.blogspot.in/2012/03/blog-post.html