இரண்டாம் பகுதியை படிக்க இங்கே செல்லவும்
84 ஆம் ஆண்டு. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர். மதிய காட்சி இடைவேளை முடிந்ததும் கேண்டின் காரர் நான்கைந்து சோடா பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சீனுக்கு சைட் ஸ்பீக்கர் சவுண்டை குறைடான்னா ஆப்பரேட்டர் கேட்க மாட்டேங்கிறான், ஷோவுக்கு ஒன்னு ரெண்டு பொம்பளையாளுங்க மயக்கம் போட்டு விழுந்துறாங்க என்று சலித்தபடியே கடையை மூடுகிறார். எந்த படம் என்று ஞாபகம் வருகிறதா? ரங்கராஜ் என்பவர் சத்யராஜ் என்று தமிழர் வாழுமிடமெல்லாம் பின்னாளில் அறியப் பட காரனமாய் இருந்த நூறாவது நாள் என்னும் திரில்லர் படம் தான் அது.
சினிமா ஆசையால் கோவை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சிறு சிறு வேடங்களிலும், சர்வைவலுக்காக அலுவலக நிர்வாகியாகவும் பணியாற்றிய சத்யராஜ் தன் கல்லூரி நண்பர் மணிவண்ணனிடம் நல்ல பிரேக் கிடைக்க மாட்டேங்குதே என்று புலம்பிய போது, அவர் கொடுத்த வாய்ப்புதான் அந்த மொட்டைத்தலை வில்லன் வேடம். ஒரு பேட்டியில் சத்யராஜ் இப்படி சொல்லியிருந்தார் " மொட்டையை அடிச்சு, மீசையை எடுத்திட்டு அந்த வட்ட கண்ணாடியை போட்டுட்டு கண்ணாடில பார்க்கிறேன், எனக்கே பிடிக்கல. ஆனா மணிதான் கட்டாயப்படுத்தி அத செய்ய வச்சான்". அந்த கேரக்டர் என்ட்ரி, சாவது போல் நடித்து எழுவது, அதற்க்கேற்ப பிண்ணனி இசை, நளினியின் பெரிய கன்களில் தெரியும் பயம் என அந்த பட காட்சிகள் பெண்களை பயப்படுத்தின. சத்யராஜ் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று முழு திரையுலகத்திற்க்கும் தெரியவந்தது.
அதே ஆண்டு, அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் வெளியான 24 மணி நேரம் படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் கிடைத்தது. அதில் சத்யராஜ் பேசும் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்கிறங்களே" என்ற வசனமும், டயலாக் டெலிவரி மற்றும் மாடுலேஷனும் அவரை முன்வரிசை வில்லன்களில் ஒருவராக மாற்றியது. அதனால் முன்வரிசை கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் வில்லன் வேடம் தேடிவந்தது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் சுலக்ஷனாவுக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளையாக சிறு வேடத்திலும், ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் விஜயகாந்த்,நளினி நடித்த நாளை உனது நாள் என்ற திரில்லர் படத்தில் சிறு வேடத்திலும் தலையைக் காட்டிய சத்யராஜுக்கு மணிவண்ணனின் இரண்டு படங்களும் மிகப் பெரிய ஏற்றத்தை தந்தன.
1985
இந்த ஆண்டில் சத்யராஜ் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரர் படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். கமல் ரசிகர்கள் மறந்து விட நினைக்கும் மங்கம்மா சபதம் என்னும் படத்தில் கமலின் வில்ல தாத்தாவாக நடித்தார். ஜப்பானில் கல்யானராமன் படத்தில் மெயின் வில்லன் வேடம். ஆனால் இதே ஆண்டு வெளியான காக்கி சட்டை படம் சத்யராஜை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
"பொழைக்கத் தெரியாத நாட்டில பொழைக்க தெரிஞ்சவங்க .... ஸ்மக்கேர்ல்ஸ்" இந்த சாதாரண வசனத்தை தன் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், வார்த்தைகளுக்கு இடையே விடப்படும் இடைவெளி மூலமாகவும் அசாதாரணமாக்கியிருப்பார்.
வெள்ளக்காரன் நம்ம நாட்டில இருந்து எடுத்திட்டுப் போன தங்கத்தை திருப்பி எடுத்திட்டு வர்றோம். எங்களப் போயி கடத்தல்காரன்னு சொன்னா எப்படி? , தகடு தகடு, பட்ஷி பட்ஷி போன்ற வசனங்களிலும் கமலை இன்னும் குட்டையாக்கி இருப்பார்.
ஈட்டி,கீதாஞ்சலி படங்களில் வழக்கமான வில்லன். சாவி படத்தில் எதிர் நாயகன், மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான பகல் நிலவில் பெரியவர் என்ற நாசூக்கான வில்லன் வேடம், முதல் மரியாதையில் ஒரு கிராமத்து மன்மத சண்டியரின் வயதான பிம்பம் என பலவித வேடங்களில் கலக்கினார் சத்யராஜ்.
1986
முதல் வசந்தம்
குங்குமப் பொட்டு கவுண்டராக வந்து அதகளம் பண்ணியிருப்பார். வெள்ளையுடை அணிந்த பணிப்பெண்னை இரவில் கரெக்ட் பண்ணிவிட்டு பேயை கரெக்ட் பண்ணிவிட்டோமோ என்று காலையில் புலம்புவதாகட்டும், எதிரி என்றாலும் நம்ம ஆள் என்ரு சொல்லி வேலைக்காரன் திட்டக் கூடாது என்று கண்டிப்பதாகட்டும், பின் கடைசியில் நல்லதை எடுத்து சொல்வதாகட்டும் தனி ஸ்டைலில் பண்ணியிருப்பார்.
பாலைவன ரோஜாக்கள்
கருணாநிதி வசனத்தில் முதல் படம். பத்திரிக்கை ஆசிரியராக கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லட்சுமியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், பின் கொள்கைக்காக உயிரை விடும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.
மிஸ்டர் பாரத்
சத்யராஜின் இன்னொரு புகழ் பெற்ற வசனமான என்னம்மா கண்ணு பேசப்பட்ட படம். ரஜினிக்கு இணையாக பாடல் காட்சி அமைத்திருப்பார்கள். ஒரு பணக்காரரின் பாடி லாங்குவேஜை எளிதாக கொண்டு வந்திருப்பார்.
முரட்டு கரங்கள்
ஷோலே பட பாதிப்பில் வந்த படம். கப்பர் சிங் மாதிரியான கொள்ளை கூட்ட தலைவனாக சத்யராஜ். கூன் விழுந்த முதுகோடு, கண்களில் கொடூரத்துடன் கொள்ளை அடிப்பதுமாய், ஈவு இரக்கமில்லாமல் மக்களை கொல்வதுமாய் மிரட்டியிருப்பார்.
விடிஞ்சா கல்யாணம்
ஆப்பாயில் ஆறுமுகம் என்ற சிறையில் இருந்து தப்பிய கைதி, மகளை கற்பழிக்க வந்தவனை கொலை செய்த தாய், மகள், மகளை திருமணம் செய்யப் போகும் இன்ஸ்பெக்டர் இந்த பாத்திரங்களை வைத்து மணிவண்ணன் இயக்கிய திரில்லர். சத்யராஜ் ஆப்பாயில் ஆறுமுகமாய் வந்து தாயையும்,மகளையும் மிரட்டுவார், மாப்பிள்ளையிடம் சவால் விடுவார். சுருக்கமாக சொன்னால் லொள்ளு பண்ணியிருப்பார்.
விக்ரம்
கமலின் சொந்தப் படம். ஏவுகணையை கடத்தும் சர்வதேச வில்லனாக சத்யராஜ். இந்தப் பட இயக்குனர் ராஜசேகர் பாதியில் ரஜினியின் படத்தை இயக்க போய்விட்டதால் சந்தான பாரதியை வைத்து சமாளித்தார் கமல். அதனாலேயே அவருக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட இயக்க வாய்ப்பை அளித்தார். சத்யராஜின் திறமையைக் கண்டதால் அவருக்கு நாயகன் வாய்ப்பை வழங்கினார் கமல்.
மேலும் இந்த ஆண்டில் கரிமேடு கருவாயன் படத்தில் விஜயகாந்தை கைது செய்ய வரும் போலிஸ் ஆக ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகன் ஒரு ரசிகை, மந்திரப் புன்னகை, கடலோர கவிதைகள் படங்களின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.
1994- அமைதிப்படை
மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்கள். அதில் வில்ல அரசியல்வாதி அமாவாசை என்ற ராஜ ராஜ சோழன் எம் ஏ வை யாரால் மறக்க முடியும்?
மணியா வரலாறு தெரிஞ்சுக்கோனும் " சாமி இல்லன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லையப்பா, இருக்குன்னு சொன்னவன் தான் இடிச்சுருக்கான்"
நாலு ரவுண்டு அடிச்சும் ஏறாட்டி அந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும்?
ஒரு அரசியல்வாதி மகனா பெறந்துட்டு இது கூட பேசாட்டி எப்படி?
போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் மூலம் இன்னும் நினைவில் நிற்கிறார்.
வில்லனாக அறிமுகமாகி வெற்றிகரமான கதாநாயகனாக மாறிய முதல் நடிகர் ரஜினிகாந்த். இரண்டாவது சத்யராஜ். ரஜினி தன் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தோடு துணை,இணை கதாநாயக வேடங்களையும் சேர்த்தே செய்து வந்தார். வில்லன் வேடம் எனினும் ஆடு புலி ஆட்டம் தவிர எதிலும் கொடூர வில்லனாக வந்ததில்லை. சிறந்த இயக்குனர்கள் அவருக்கு நாவல்டியான வேடங்களை கொடுத்தார்கள். அதை அவர் தன் திறமை மூலம் மெருகேற்றி நடித்தார். அதனால் அவரை கதாநாயகனாக மாறுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை.
சத்யராஜின் முதல் படம் கோடுகள் இல்லாத கோலங்கள், பின் சட்டம் என் கையில், குருவிக்கூடு போன்ற படங்களில் சில்லரை வேடங்களில் நடித்து வந்தார். நூறாவது நாள் பிரேக்குக்குப் பின் அவருக்கு கிடைத்தவை ஹார்ட் கோர் வில்லன் வேடங்கள். அனாலும் பிரேக் கிடைத்து இரண்டே ஆண்டுகளில் கதாநாயக அந்தஸ்த்துக்கு உயர்ந்தார்.
இதற்க்கு சத்யராஜே ஒரு காரணத்தை சொல்வார் "அப்போது அதிக தயாரிப்பாளர்கள், குறைந்த நடிகர்கள், அதனால் எனக்கு எளிதான வாய்ப்பு கிடைத்தது என்று". அது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே?. திரையரங்குகளில் அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் வினியோகஸ்தர்கள் மூலம் எதிரொலித்து கதாநாயக வாய்ப்பை வழங்கியது. கொடூர வேடத்தில் நடித்தாலும் மக்களை கவரும் வசீகரம் சத்யராஜிடம் இருந்தது.
கால சக்கரம் சுழன்று இப்போது வில்லன் வேடத்துக்கு அழைப்புகள் வரும் நிலையில் இருக்கிறார் சத்யராஜ். சிவாஜி,தசாவதார வில்லன் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
மணிவண்ணனுக்கு சத்யராஜின் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. இவர்கள் இருவரும் கல்லூரி விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்றபோது நடந்த சம்பவம்
அதென்னப்பா பி ஏ அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்?
அது ஒன்னுமில்ல இப்ப ஒரு வீட்ட வாங்குறோம்னு வச்சுக்க, பெரிய தொகை கொடுக்கணும். ஆனா அதுக்கு அட்வான்ஸ் கம்மியா இருக்கும்ல. அதுமாதிரி இங்கிலீஷ் பெரிசு அதில கொஞ்சமா படிக்கிறது அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்.
அப்ப அதயே நான் எடுக்கிறேன்.
எடுத்து டரியலானவர் யாரென்று சொல்ல வேண்டுமா?
என்னா ஒரு வில்லத்தனம்?
iit
February 04, 2009
February 03, 2009
புறக்கணிப்பு
எப்போது இது தொடங்கியது என்று தெரியவில்லை. மூன்றாவதோ நாலாவதோ படிக்கும் போது பக்கத்தில் உள்ள அணைக்கட்டுக்கு பள்ளியில் இருந்து சுற்றுலா அழைத்து சென்றிருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக கையைப் பிடித்துக் கொண்டு வரிசையில் செல்ல வேண்டும் என்று உத்தரவு. அந்த இரண்டாவது ஆள் கிடைக்காமல் தனியே நான் சென்ற ஞாபகம் இருக்கிறது.
தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது எப்போதும் காமன் தான். போத் சைட் பேட்டிங், பீல்டிங் என்று தள்ளி விட்டு விடுவார்கள். பேட் செய்ய மூன்று நாலு பந்தும், பந்தே வராத இடத்தில் பீல்டிங் வாய்ப்பும் வழங்கப்படும்.வேறொரு தெருவோடு ஆடும் பால் பெட் மேட்சில் கூட பிளேயிங் லெவனில் இடம் கிடைத்த ஞாபகம் இல்லை. திருப்பதி லட்டாக வரும் கேட்சை பழனி பஞ்சாமிர்தமாக கையில் வழிய விடுபவனைக் கூட டீமில் சேர்த்துக் கொண்டார்கள். ஸ்கோரர் பொறுப்பு கூட எனக்கு வழங்கப்பட்டதில்லை. சாமர்த்தியமாக ரன்னை ஏற்றத் தெரிந்தவனுக்கு தானே அந்தப் பதவி.
கல்லூரியிலும் இது தொடர்ந்தது. இரண்டாம் ஆண்டு கேரளா டூரில் தனித்தனி குழுவாக சாப்பிட போனார்கள், ரூமில் தங்கினார்கள், போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எந்த ஆல்பத்திலும் என் போட்டோ இல்லை. பைனல் இயர் ப்ராஜக்ட்லும் நான் எதிர்பார்த்திருந்த குழுக்களிடமிருந்து கழட்டி விடப்பட, உப்புக்கு சப்பாணியாக ஒரு குரூப்பிடம் ஹெச் ஓ டியால் அடைக்கலம் புகவைக்கப் பட்டேன்.
வேலை தேடி மேன்ஷனில் இருந்த போது, தண்ணியடிக்க, படத்துக்கு என எதற்கும் அழைப்பில்லாமல் இருந்தது. ஒரு நாள் விரக்தியில் ஒருவனிடம் புலம்பிய போது அவன் சொன்னான் "தண்ணியடிக்கப் போன மொதோ மூணு வாந்தில ஒண்ணு உன்னோடதா இருக்கணும், தேட்டர்ல பிரச்சினைனா மொதோ சத்தம் உன்கிட்ட இருந்து வரணும், உன்கிட்ட ஏதாச்சும் இருந்தாத் தாண்டா செட்டு அமையும்"
இப்போது கூட வேலை பார்க்கும் இடத்தில், வீக்கெண்டில திடீரென ஒரு குரூப் மகாபலிபுரம் போகுது, இன்னோரு குரூப் மாயாஜால் போயிட்டு எங்கயாவது மொக்கீட்டு வருது. நான் அந்த நேரத்தில ஐபிஎல் ரிப்பீட்ட பார்த்துக் கிட்டு இருக்கேன்.
எனக்கு சிரிக்க சிரிக்க பேசத் தெரியாது, பிரச்சினைன்னா முன்னாடி நிக்கத் தெரியாது, எக்ஸ்ட்ராவா எந்த குவாலிட்டியும் இல்ல. என்னை மாதிரி செட்டு அமையாம ஒத்தப் பனையா நிக்கிறவங்களா நீங்க இருந்தா இந்த நம்பருக்கு ............... போன் பண்ணுங்க. இந்த வாரம் நாம மகாபலிபுரம் போறோம்.
தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது எப்போதும் காமன் தான். போத் சைட் பேட்டிங், பீல்டிங் என்று தள்ளி விட்டு விடுவார்கள். பேட் செய்ய மூன்று நாலு பந்தும், பந்தே வராத இடத்தில் பீல்டிங் வாய்ப்பும் வழங்கப்படும்.வேறொரு தெருவோடு ஆடும் பால் பெட் மேட்சில் கூட பிளேயிங் லெவனில் இடம் கிடைத்த ஞாபகம் இல்லை. திருப்பதி லட்டாக வரும் கேட்சை பழனி பஞ்சாமிர்தமாக கையில் வழிய விடுபவனைக் கூட டீமில் சேர்த்துக் கொண்டார்கள். ஸ்கோரர் பொறுப்பு கூட எனக்கு வழங்கப்பட்டதில்லை. சாமர்த்தியமாக ரன்னை ஏற்றத் தெரிந்தவனுக்கு தானே அந்தப் பதவி.
கல்லூரியிலும் இது தொடர்ந்தது. இரண்டாம் ஆண்டு கேரளா டூரில் தனித்தனி குழுவாக சாப்பிட போனார்கள், ரூமில் தங்கினார்கள், போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எந்த ஆல்பத்திலும் என் போட்டோ இல்லை. பைனல் இயர் ப்ராஜக்ட்லும் நான் எதிர்பார்த்திருந்த குழுக்களிடமிருந்து கழட்டி விடப்பட, உப்புக்கு சப்பாணியாக ஒரு குரூப்பிடம் ஹெச் ஓ டியால் அடைக்கலம் புகவைக்கப் பட்டேன்.
வேலை தேடி மேன்ஷனில் இருந்த போது, தண்ணியடிக்க, படத்துக்கு என எதற்கும் அழைப்பில்லாமல் இருந்தது. ஒரு நாள் விரக்தியில் ஒருவனிடம் புலம்பிய போது அவன் சொன்னான் "தண்ணியடிக்கப் போன மொதோ மூணு வாந்தில ஒண்ணு உன்னோடதா இருக்கணும், தேட்டர்ல பிரச்சினைனா மொதோ சத்தம் உன்கிட்ட இருந்து வரணும், உன்கிட்ட ஏதாச்சும் இருந்தாத் தாண்டா செட்டு அமையும்"
இப்போது கூட வேலை பார்க்கும் இடத்தில், வீக்கெண்டில திடீரென ஒரு குரூப் மகாபலிபுரம் போகுது, இன்னோரு குரூப் மாயாஜால் போயிட்டு எங்கயாவது மொக்கீட்டு வருது. நான் அந்த நேரத்தில ஐபிஎல் ரிப்பீட்ட பார்த்துக் கிட்டு இருக்கேன்.
எனக்கு சிரிக்க சிரிக்க பேசத் தெரியாது, பிரச்சினைன்னா முன்னாடி நிக்கத் தெரியாது, எக்ஸ்ட்ராவா எந்த குவாலிட்டியும் இல்ல. என்னை மாதிரி செட்டு அமையாம ஒத்தப் பனையா நிக்கிறவங்களா நீங்க இருந்தா இந்த நம்பருக்கு ............... போன் பண்ணுங்க. இந்த வாரம் நாம மகாபலிபுரம் போறோம்.
February 01, 2009
தமிழ்சினிமா எதிர் நாயகர்கள் - 2 (அசோகன்)
முதல் பகுதியை படிக்க இங்கே செல்லவும்
70களின் பிற்பகுதி வரை வந்த பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு கொடுமை செய்யும் வேலையை மட்டுமே இயக்குனர்கள் கொடுத்தார்கள். மக்கள் வில்லனைப் பார்த்து பயப்படும் போல் காட்சி அமைப்பு இருக்குமே தவிர, ரசிக்கும் படியான வில்லனிசம் குறைவாகவே இருந்தது. ரஜினிகாந்த் 16 வயதினிலே,மூன்றுமுடிச்சு படங்களில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை கொண்டுவந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கிடைத்த இணை நாயகன், கதாநாயகன் வேடங்களால் அவர் வில்லத்தனத்திற்க்கு வேலையில்லாமல் போய்விட்டது. பின் வந்த சத்யராஜ் எல்லோராலும் ரசிக்கப்படும் வில்லத்தனத்தை கொண்டுவந்தார். 24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே, காக்கி சட்டையில் தகடு தகடு என வில்லத்தனத்தில் ஒரு நாவல்டியை கொண்டு வந்தார். தற்போது கனா கண்டேன் பிரித்விராஜ் வரை இது தொடர்கிறது.
ஆனால் இம்மாதிரி இல்லாத 60,70 களில் கிடைத்த வேடங்களில் மாறுபட்ட பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மூலம் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை காட்டியவர் எஸ் ஏ அசோகன். 50 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 80கள் வரை பல வேடங்களில் நடித்தார். இவர் ஏற்ற சில முக்கிய வேடங்களைப் பார்க்கலாம்.
அன்பே வா
எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.
மூன்றெழுத்து
புதையல் ரகசியத்தை வைத்திருக்கும் மூன்றெழுத்தில் ஒரு எழுத்து இவரிடம் இருக்கும். மிகப்பெரிய குடுமியுடன், வேட்டிமீது பெல்ட் அணிந்து இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனில் பின்னியிருப்பார். இந்த வாய்ஸ்தான் எல்லா மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் தற்போது பயன்படுகிறது.
ரகசிய போலிஸ் 115
இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.
உலகம் சுற்றும் வாலிபன்
விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்.
துணிவே துணை
இந்தப் பட ஹீரோ ஜெய்ஷங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் " இரந்தவனும் சொமந்தவனும்" என்ற பாடலை பாடியிருப்பார் எஸ் ஏ அசோகன். எம்ஜியார் படங்களுக்குப் பின் அதிகமாக ஜெய்ஷங்கர் படங்களிலேயே அசோகன் வில்லனாக நடித்தார். எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்திலும் வழக்கமான வில்லன் வேடமே. ஆனால் இந்தப் படத்தின் கதை,பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு காரணமாக எல்லா வேடங்களும் மனதில் நிற்கின்றன.
அலாவுதீனும் அற்புத விளக்கும்
இந்தப் படத்தில் ஜாடியில் அடைக்கப் பட்டிருக்கும் பூதமாக கலக்கியிருப்பார். இவர் உருவத்துக்கு அந்த வேடம் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பாவித்தனமான முகத்துடன், அசட்டு சிரிப்புடன், கொஞ்சும் குரலில் பூதமாக வித்தியாசத்தை காட்டியிருப்பார்.
கங்கா, ஜம்பு டைப் கௌபாய் உடை படங்கள்
காமிரா மேன், இயக்குனர் கர்ணன் ஜெய்ஷங்கரை வைத்து இயக்கிய பல கௌபாய் படங்களில் இவர் தான் பெரும்பாலும் வில்லனாக நடித்தார். இவரது ஆகிருதி அதற்க்கு உதவியாக இருந்தது. இப்படங்களில் பல வித்தியாச மானெரிசங்களை இவர் பயன்படுத்தி இருந்தாலும் அவை அவ்வளவாக மக்களை கவரவில்லை என்றே சொல்ல்லாம்
இவர் நடித்த சில படங்கள்
1958 - மாயமனிதன்
1961- மனப்பந்தல், தாய் சொல்லை தட்டாதே
1962 - கண்னாடி மாளிகை, பாத காணிக்கை
1963 - இது சத்தியம், காஞ்சித் தலைவன்
1964 - என் கடமை, வாழ்க்கை வாழ்வதற்க்கே
1965 - காட்டு ராணி, தாழம்பூ
1966 - அன்பே வா
1968 - ரகசிய போலிஸ் 115, மூன்றெழுத்து
1973 - உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி
1976 - துணிவே துணை
1980 - பில்லா
இவரைப் போலவே வில்லனாக தன் வாழ்வை தொடங்கிய இவரது மகன் வின்சென்ட் அசோகன் (ஏய், நீ வேனுன்டா செல்லம்) தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் (சில நேரங்களில்) நடித்து வருகிறார்.
(தொடரும்)
70களின் பிற்பகுதி வரை வந்த பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு கொடுமை செய்யும் வேலையை மட்டுமே இயக்குனர்கள் கொடுத்தார்கள். மக்கள் வில்லனைப் பார்த்து பயப்படும் போல் காட்சி அமைப்பு இருக்குமே தவிர, ரசிக்கும் படியான வில்லனிசம் குறைவாகவே இருந்தது. ரஜினிகாந்த் 16 வயதினிலே,மூன்றுமுடிச்சு படங்களில் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை கொண்டுவந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கிடைத்த இணை நாயகன், கதாநாயகன் வேடங்களால் அவர் வில்லத்தனத்திற்க்கு வேலையில்லாமல் போய்விட்டது. பின் வந்த சத்யராஜ் எல்லோராலும் ரசிக்கப்படும் வில்லத்தனத்தை கொண்டுவந்தார். 24 மணி நேரத்தில் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறங்களே, காக்கி சட்டையில் தகடு தகடு என வில்லத்தனத்தில் ஒரு நாவல்டியை கொண்டு வந்தார். தற்போது கனா கண்டேன் பிரித்விராஜ் வரை இது தொடர்கிறது.
ஆனால் இம்மாதிரி இல்லாத 60,70 களில் கிடைத்த வேடங்களில் மாறுபட்ட பாடி லாங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் மூலம் ரசிக்கும்படியான வில்லத்தனத்தை காட்டியவர் எஸ் ஏ அசோகன். 50 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 80கள் வரை பல வேடங்களில் நடித்தார். இவர் ஏற்ற சில முக்கிய வேடங்களைப் பார்க்கலாம்.
அன்பே வா
எம் ஜி யார்க்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான ஈகோ மோதலில், தனக்கு பிடிக்காத அத்தானான விமானி அசோகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். ஆனால் உண்மை தெரிந்ததும் இவர் விட்டுக்கொடுத்து விட்டு, கிறுக்கத்தான் கிறுக்கத்தான் என்று சொல்வாயே என்று ஆரம்பித்து அமர்த்தலாக வசனம் பேசி விட்டு செல்வார். இந்த காட்சியில் இவரது ஸ்டைல் மிக ரசிக்கும்படியாக இருக்கும்.
மூன்றெழுத்து
புதையல் ரகசியத்தை வைத்திருக்கும் மூன்றெழுத்தில் ஒரு எழுத்து இவரிடம் இருக்கும். மிகப்பெரிய குடுமியுடன், வேட்டிமீது பெல்ட் அணிந்து இழுத்து இழுத்து பேசும் மாடுலேஷனில் பின்னியிருப்பார். இந்த வாய்ஸ்தான் எல்லா மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் தற்போது பயன்படுகிறது.
ரகசிய போலிஸ் 115
இதில் செல்வந்தரின் மகனாக இருந்து கொண்டு, சமூக விரோதியாக இருக்கும் வேடம். நடனக் காரியுடன் காதலும் உண்டு. இம்மாதிரி வேடங்களுக்கு இவர் உடல் வாகு எளிதில் பொருந்திப் போகும். அதற்கு ஏற்றார் போல குரலிலும் ஒரு கண்ணியத்தைக் கொண்டுவந்து விடுவார்.
உலகம் சுற்றும் வாலிபன்
விஞ்ஞானி பைரவனாக அசத்தியிருப்பார் இந்தப் படத்தில். எம்ஜியார் (விஞ்ஞானி முருகன்) மின்னலை துப்பாக்கி தோட்டாவில் அடைக்கும் ரகசியத்தை கண்டு பிடித்துவிட்டு, ரிலாக்ஸுக்காக காதலி மஞ்சுளா உடன் உலகம் சுற்ற கிளம்புவார். அப்போது அசோகன் " முருகன் காதலியோட உலகத்த சுத்தப் போறான், நான் காரணத்தோட அவன சுத்தப் போறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அப்போதுதான் படம் களை கட்டும்.
துணிவே துணை
இந்தப் பட ஹீரோ ஜெய்ஷங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் " இரந்தவனும் சொமந்தவனும்" என்ற பாடலை பாடியிருப்பார் எஸ் ஏ அசோகன். எம்ஜியார் படங்களுக்குப் பின் அதிகமாக ஜெய்ஷங்கர் படங்களிலேயே அசோகன் வில்லனாக நடித்தார். எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்திலும் வழக்கமான வில்லன் வேடமே. ஆனால் இந்தப் படத்தின் கதை,பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு காரணமாக எல்லா வேடங்களும் மனதில் நிற்கின்றன.
அலாவுதீனும் அற்புத விளக்கும்
இந்தப் படத்தில் ஜாடியில் அடைக்கப் பட்டிருக்கும் பூதமாக கலக்கியிருப்பார். இவர் உருவத்துக்கு அந்த வேடம் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பாவித்தனமான முகத்துடன், அசட்டு சிரிப்புடன், கொஞ்சும் குரலில் பூதமாக வித்தியாசத்தை காட்டியிருப்பார்.
கங்கா, ஜம்பு டைப் கௌபாய் உடை படங்கள்
காமிரா மேன், இயக்குனர் கர்ணன் ஜெய்ஷங்கரை வைத்து இயக்கிய பல கௌபாய் படங்களில் இவர் தான் பெரும்பாலும் வில்லனாக நடித்தார். இவரது ஆகிருதி அதற்க்கு உதவியாக இருந்தது. இப்படங்களில் பல வித்தியாச மானெரிசங்களை இவர் பயன்படுத்தி இருந்தாலும் அவை அவ்வளவாக மக்களை கவரவில்லை என்றே சொல்ல்லாம்
இவர் நடித்த சில படங்கள்
1958 - மாயமனிதன்
1961- மனப்பந்தல், தாய் சொல்லை தட்டாதே
1962 - கண்னாடி மாளிகை, பாத காணிக்கை
1963 - இது சத்தியம், காஞ்சித் தலைவன்
1964 - என் கடமை, வாழ்க்கை வாழ்வதற்க்கே
1965 - காட்டு ராணி, தாழம்பூ
1966 - அன்பே வா
1968 - ரகசிய போலிஸ் 115, மூன்றெழுத்து
1973 - உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி
1976 - துணிவே துணை
1980 - பில்லா
இவரைப் போலவே வில்லனாக தன் வாழ்வை தொடங்கிய இவரது மகன் வின்சென்ட் அசோகன் (ஏய், நீ வேனுன்டா செல்லம்) தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் (சில நேரங்களில்) நடித்து வருகிறார்.
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)