August 13, 2009

துண்டு சிகரெட்

எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது. அதற்கு எங்கள் குலதெய்வமே காரணம். படையலில் சுருட்டு இல்லாவிட்டால் சாமி ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லி அதை வாங்கிவர என்னை விரட்டி விடுவார்கள். அனைவருக்கும் தேங்காய் பழம் பிரித்துக் கொடுத்த பின் சுருட்டை மட்டும் கோடாங்கியிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.புதிதாய் வந்த கோடாங்கிக்கு சேவல் மார்க் சுருட்டு ஒத்துக்கொள்ளவில்லை. சாமி கும்பிடும் ஒரு நாளில் என்னை அழைத்து, ராஜாபாதர் கடையில வாங்கிக் கொடுப்பா, அங்கதான் நல்லாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

ராஜாபாதர் கடை என்பது ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்யேகக் கடை. பென்சன் அண்ட் ஹெட்ஜஸ், ரோத்மண்ஸ், 555 போன்ற சிகரெட் ரகங்கள்,வெத்திலை பாக்கு, சர்பத், செண்ட் பாட்டில், ஜவ்வாது,காண்டம்,  என சில அயிட்டங்களே அங்கேயிருக்கும். கடை அமைந்திருக்கும் இடமும் ஊருக்கு வெகு தள்ளி.

நான் போய் சுருட்டு கேட்டதும், ”இந்தாடா இதுதான் சர்ச்சில் குடிச்ச சுருட்டு” என்று சொல்லி கொடுத்தார்.அந்தக்கடையே அப்படித்தான். எதுவுமே சாதாரணமானதாக இருக்காது. கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.

ஒருமுறை ஒரு வாடிக்கையாளார் அவரிடம், ஏன்? இந்தக் கடையை ஊருக்குள்ள வச்சா எங்களுக்கு வசதியா இருக்குமே என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்துப் பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழமும், காயாக வாங்கி, அவரே புகை போட்டு பழுக்க வைக்கும் லால்குடி ரஸ்தாளியும் மட்டும் தான் அங்கே கொக்கியில் தொங்கும். கடலை மிட்டாய், முறுக்கு இதெல்லாம் அவர் சாப்பிட்டுப் பார்த்து அவருக்கு திருப்தி ஆனால் தான் கண்ணாடி பாட்டிலில் அடுக்குவார். விற்பனையாளர்கள் கொண்டு வரும் தேங்காய் பர்பி சரியில்லை என, அய்யம்பாளையத்தில் நன்கு முற்றிய தேங்காய் வாங்கி தெரிந்த ஆளிடம் கொடுத்து, அதில் பர்பி செய்யச்சொல்லி வாங்கி விற்பார். சிகரெட் பற்ற வைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்.

சுருட்டு வாங்க அடிக்கடி சென்ற வகையில் அந்தக் கடையின் மேல் எனக்கு ஒரு காதலே வந்துவிட்டது. மாலை வேளைகளில் பாதாம் சர்பத்தைக் குடித்துவிட்டு, வில்ஸ் பில்டரை ஊதிக் கொண்டிருப்பவர்கள் பார்க்கும் பார்வையை வைத்தே காண்டமை பக்குவமாக பாக் செய்து சில்லறையுடன் சேர்த்துக் கொடுப்பார் ராஜாபாதர். ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுபவர்களைப் பார்க்கையில் ஒரு பொறாமையே வரும்.

சர்பத் மீது நாட்டமில்லை,காண்டமை உபயோகிக்க வயதில்லை என்பதால் சிகரெட்டையாவது பிடித்துப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தே விட்டது.

நேரடியாக கடையில் வாங்கப் பயம் மேலும் பொருளாதார சிக்கல் வேறு. இம்மாதிரியானவர்களுக்கு கைகொடுப்பது ஒட்டுப்பீடி என்றும் துண்டு சிகரெட் என்றும் அழைக்கப்படம் முழுவதும் புகைக்கப்படாத சிகரெட்டுகள்.

இம்மாதிரி துண்டு சிகரெட் ஆட்களில் பலவகையினர் உண்டு. கிடைத்தது போதும் என்று சொக்கலாலோ, மங்களூர் கணேஷோ, பாசிங் ஷோ தொப்பியோ, கத்திரியோ, சார்மினாரோ எது கிடைத்தாலும் இழுப்பவர்கள்.

எச்சியா சீ சீ நாங்கள் சுத்தமாக்கும் என்று சொல்லி நோட்டு பேப்பரை பீடி போல் சுருட்டி அதைப் பத்தவைத்து இழுப்பவர்கள்.

குடிக்கிறது கூழா இருந்தாலும் கொப்புளிக்கறது பன்னீரா இருக்கணும் என்ற கொள்கையுடையவர்கள்.என்னைப்போல. இவர்களெல்லாம் பில்டர் சிகரெட்டைத்தான் எடுத்து உபயோகிப்பார்கள். ராஜாபாதர் கடை புண்ணியத்தில் எனக்கு அவ்வப்போது பாரின் சிகரெட் மிச்சங்களும் கிடைத்துக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் எங்கள் தெருவுக்கு குடிவந்தனர் ராஜேஸ் குடும்பத்தார். வந்த சில நாட்களிலேயே நன்றாக படிப்பது,தெருவில் யார் சொன்னாலும் கடைக்குப் போவது போன்ற செயல்களால் நல்ல பிள்ளை என்ற பட்டத்தை வாங்கி விட்டான் ராஜேஷ். எனக்கு எரிய ஆரம்பித்தது.அவனை தவிர்க்கத் தொடங்கினேன்.

ஒரு விடுமுறை நாளில் புதர்ப்பக்கம் ஒதுங்கியபோது, ராஜேஸையும் அங்கே பார்த்தேன். அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி. உடனே அவன் மனதுக்கு நெருக்கமானவனாக மாறிவிட்டான். அவனுக்கும் பில்டரின் மகத்துவத்தை எடுத்துரைத்து என் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்.

ஆசை தானே மனிதனை குகையில் இருந்து காஸ்மோபாலிட்டன் வரை கொண்டு வந்திருக்கிறது. எங்கள் ஆசை முழு சிகரட்டை நோக்கி எங்களை தூண்டியது. நாளும் குறிக்கப்பட்டது. காசும் சேர்க்கப்பட்டது.அந்த சுபயோக சுபதினம் ராஜேஸ் வீட்டார் ஒரு திருமணத்திற்க்கு செல்லும் ஞாயிற்றுக் கிழமை.

அந்த நாளும் வந்தது. எங்கள் உறவுக்காரர் விக்கெட் ஒன்றும் விழுந்தது. யாருக்கும் தொல்லையில்லாம ஞாயித்துக்கிழமை செத்திருக்காரு, நல்ல சாவு என்று சொல்லி வீடே கிளம்பியது. என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.

திரும்பி வந்தால் தெருவில் ஒரே பேச்சு. நம்ம ராஜேஸா இப்படி? என்று. தப்பை தப்பாகச் செய்து மாட்டிக்கொண்டான் அவன்.

என் தாய்,தமக்கைகள் எல்லோரும் இவனும் இப்படித்தான் இருப்பான். நாலடி போட்டு விசாரிங்க என்று என் தந்தையைத் தூண்டினார்கள்.ராஜேஸிடம் பலமுறை ஜாடை மாடையாக விசாரித்தார்கள்.

அவனும் காட்டிக்கொடுக்கவில்லை. என் தந்தையும் இன்றுவரை என்னிடம் அதைப் பற்றி கேட்டதில்லை.

36 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கதையா தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விஜயகாந்த் விக்ரமன் கூட்டணிக்கு அடுத்த மேட்டர் ரெடி..,

நர்சிம் said...

//வாங்கி பையில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுபவர்களைப் பார்க்கையில் ஒரு பொறாமையே வரும்.
//

கலக்கல் ஃப்ளோ தலைவரே..21வது உங்கதாத்தான் இருந்திருக்கும்.

Jerry Eshananda said...

நெஞ்சுக்குள் இன்னும் புகைகிறது துண்டு சிகரெட்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.


தலைவரே

\\21வது உங்கதாத்தான் இருந்திருக்கும்\\

அந்த 17 மேட்டர்ல எல்லோரும் தப்பிச்சுக்கிட்டோம்னு நினைக்கிறேன்

முரளிகண்ணன் said...

வாங்க ஜெரி ஈசானந்தா

யாசவி said...

cannot understand

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆஹா... பிச்சுவிடுங்க..
//ஆசை தானே மனிதனை குகையில் இருந்து காஸ்மோபாலிட்டன் வரை கொண்டு வந்திருக்கிறது//
உண்மை.
அருமையான புனைவு.

anujanya said...

அக்மார்க் முரளி புனைவு. நல்லா இருக்கு.

@ நர்சிம்

//..21வது உங்கதாத்தான் இருந்திருக்கும்.//

ஏன்யா இப்பிடி உசுப்பி விடுறீங்க? இப்பதான் கொஞ்சங் கொஞ்சமா அத மறந்து வெளிய வரோம்.

அனுஜன்யா

நாஞ்சில் நாதம் said...

17, 21

:)))

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி யாசவி.

\\cannot understand\\

சிம்பிளாத்தானே இருக்கு.

வாங்க பாலகுமாரன்.

வாங்க அனுஜன்யா. பாருங்க நர்சிம் உடவே மாட்டேங்கிறாரு.


வாங்க நாஞ்சில் நாதம்

Cable சங்கர் said...

/கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.///

சூப்பர் முரளி ஒருவரின் கேரக்டரை சொல்லி விளக்க இதைவிட வேறு எளிமையான வார்த்தைகள் கிடைக்காது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் முரளி

நையாண்டி நைனா said...

நம்ம இஞ்சின்னு ஸ்டார்ட் ஆனதே... கிங்க்சு பிள்டரிலே தான்... குப்.. குப்.. குப்...

தராசு said...

இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்.

சூப்பர் ஃப்ளோ..

Raju said...

\\அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி.\\
நாங்கல்லாம் "ஏமாந்த சோனகிரி...!"
:)

நான் எட்டாவது படிக்கும் போது, என்னைய நல்லாத்தான் வாட்ச் பண்ணியிருக்கீங்க..
ஆனா, என்கூட இருந்தவன் பேரு ராஜேஸ் இல்ல, ராஜா.
அப்பறம் தலைவரே, அந்த 17 எல்லாரையும் சுத்தி சுத்தி "பாஸ்கட்பால்" விளையாடுது போலயே..!
:)

மணிஜி said...

காக்கிவில்ஸ்..சுட்டபழம்

அறிவிலி said...

:)) எனக்கும் மலரும் நினைவுகள் வந்து விட்டது

கார்க்கிபவா said...

முரளி டைப் புனைவு.. இன்னும் கிரிமினல் மைண்டுல இருக்கு தல. அப்படியொரு கதை எதிர்பார்க்கிறோம்

அத்திரி said...

தல கலக்கல்................கணேஷ் பீடி குடிச்சிட்டு வீட்டுல அடி வாங்கினதுதான் ஞாபகம் வருகிறது

Unknown said...

//என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.//

புரியவில்லை.என்ன அர்த்தம்?

நடை நல்லா இருக்கு. முடிவு கொஞ்சம் வீக்.

முடிவு இப்படி இருக்கலாம்:

”டேய்...!அதோ இருக்குடா!.
லக்குடா!”மூன்று மணி நேரத்திற்குப் பின் அந்த துண்டு சிகரெட்டை ஆசையோடு எடுத்துப்பத்த
வைத்தார்கள்.

மூன்று மணி நேரத்திற்குப் முன், இருந்த காசுக்கு ஒரு 555 தான் வாங்க முடிந்தது.பத்த வச்சு புகு புகு என்று எரிந்து இழுக்கையில் ராஜேஸ் தொண்டை அடைத்து இரும்ப, சத்தம் கேட்டு யாரோ வர,தூக்கி போட்டு விட்டுப்போய்விட்டார்கள்.

Thamira said...

நல்ல ஃபுளோ..

அப்புறம் நீங்களா? சிகரெட்டா? சரிதான்.!

(+2 நாட்களில் ஊரில் ஒரு கடைக்காரனை மடக்கி வைத்துக்கொண்டு யாருமில்லாத நேரமாக பார்த்து விருட்டென வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடந்து போனது நியாபகம் வந்தது.)

Boston Bala said...

கலக்கல் :)

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் முரளி,

ஷங்கி said...

ராஜாபாதர் கேரக்டரைசேஷன் அற்புதம். நல்ல ஃப்ளோ! கடைசி இரண்டு பத்தி வேண்டுமா?!

புருனோ Bruno said...

//அந்த 17 எல்லாரையும் சுத்தி சுத்தி "பாஸ்கட்பால்" விளையாடுது போலயே..! //

சூப்பர்

:) :) :)

புருனோ Bruno said...

சூப்பர் கதை பிரபல(மாகப்போகும்) எழுத்தாளர் முரளி அவர்களே !!

விகடன், குமுதம் அனுப்புங்க தல

Rajan said...

ok, one thing i could not understand..., do you smoke these days?

Anonymous said...

நல்லா இருக்கு முரளி. திருட்டுதம் அடிக்கிறதுல இருக்க சுகமே தனி. ஆனா அதில ஒண்ணும் இல்லன்னு கண்டுக்கிட்ட பிறகு தானாகவே விலகிவிடுகிறது.

ஷண்முகப்ரியன் said...

“ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

குணசித்ரங்களே கதையோட்டத்துக்குச் சமமான சுவாரஸ்யத்தைத் தருவதை உங்கள் கதைகளில்தான் காண்கிறேன்,முரளி.நன்றாக இருக்கிறது.

கோபிநாத் said...

கலக்கல் அண்ணாச்சி ;)

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள்ஜி

நன்றி டிவிஆர் சார்

நன்றி நையாண்டி நைனா

நன்றி தராசு

நன்றி டக்ளஸ்

நன்றி தண்டோரா

நன்றி அறிவிலி

நன்றி கார்க்கி

நன்றி அத்திரி

முரளிகண்ணன் said...

நன்றி ரவிஷங்கர்

நன்றி ஆதி

நன்றி பாஸ்டன் பாலா

நன்றி நாடோடி இலக்கியன்

முரளிகண்ணன் said...

நன்றி சங்கா.

கதையை அதன் போக்கில் எழுதினேன். ரவிஷங்கர் மற்றும் உங்கள் கமெண்டுகள் யோசிக்க வைத்திருக்கின்றன.

வாங்க டாக்டர். முயற்சிகள் உள்ளன.
ஊக்கத்திற்க்கு நன்றி


வருகைக்கு நன்றி ராஜன். இது புனைவுதான். உண்மையில்லை.

நன்றி வடகரைவேலன் அண்ணாச்சி

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்

வாங்க கோபிநாத்

வெட்டிப்பயல் said...

சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...

//ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்து பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். சிகரெட் பத்தவைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்//

நிறைய இன்ஃபர்மேஷன் ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கீங்க :)

............

இந்த க்ளைமாக்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு :)

முரளிகண்ணன் said...

நன்றி வெட்டிப்பயல்