June 02, 2009

உரையாடல் சிறுகதைப் போட்டி தொடர்பாக தி.நகரில் ஒரு எதிர்பாராத பதிவர் சந்திப்பு

டயரிக்குறிப்புகள் எழுதி எழுதி டைரி தீர்ந்து விட்டதால் புது டைரி வாங்க டி நகர் வருகிறார்
அப்துல்லா. சாந்த சக்கு பாய் பட டிவிடி தி நகர் பிளாட்பார்மில் கிடைப்பதை அறிந்து அதை
வாங்க வருகிறார் முரளிகண்ணன். கிருஷ்ணவேணி திரையரங்கில் பகல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறார் கேபிள் சங்கர். தி நகரில் ஒரு கடையில் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப் படவில்லை எனக் கேள்விப்பபட்டு அதை தட்டிக் கேட்க வருகிறார் டாக்டர் புருனோ. எதிர்பாராமல் அனைவரும் ஒரு டீக்கடையில் சந்திக்கிறார்கள்.

பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சு, பதிவர் பைத்தியக்காரன் அறிவித்திருக்கும் உரையாடல் சிறுகதைப் போட்டியை நோக்கி திரும்புகிறது.

புருனோ : என்ன முரளி எழுதியாச்சா?

முரளி : டாக்டர் விளையாடுறீங்களா?. ஒரு பரிசு இல்ல ரெண்டுன்னா நிறைய
ஜாம்பவான்கள் கலந்துக் கிட்டாங்க, போட்டி கடுமை அதான் கிடைக்கலைன்னு
சமாளிக்கலாம். இல்லைன்னா பாலிடிக்ஸ்னு கதை உடலாம். இங்க 20 பரிசு.
இருபதுக்குள்ள கூடவா நீ இல்லன்னு எல்லாரும்
கலாய்ச்சிட்டாங்கண்ணா?

அப்துல் : ஏன்னே போட்டி அவ்வளவு கடுமையாவா போட்டியிருக்கு?

முரளி : நீங்க வேற. அந்தக் கால பதிவர் பினாத்தலார்ல இருந்து நாளைக்குத்தான்
பிளாக்கையே ஆரம்பிக்கப் போறவர் வரைக்கும் களத்துல இருக்காங்க. இப்பவே
இருபது, முப்பது கதை வந்துருச்சாம். இன்னும் இந்த மாச கடைசி வரைக்கும்
டைம் இருக்கு.

புருனோ : டி என் பி எஸ் சி எக்சாம் ரெண்டு லட்சம் பேரு எழுதுறாங்க. அதுக்கு கைடு
வருது. ஆனா இந்த போட்டிக்கு ஆதிமூலகிருஷ்ணன் கைடு போட்டுருக்காருன்னா
எவ்வளவு பேரு கலந்துக்கிருவாங்கண்ணு கணக்குப் பண்ணிக்குங்க.

அப்துல் : கேபிள், புருனோ அந்த பிகர கணக்குப் பண்ண சொல்லல.

கேபிள் : ஹி ஹி. ஹீரோயினுக்கு சூட் ஆகுமான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முரளி : யாரெல்லாம் நடுவரா இருப்பாங்கண்ணு தெரிஞ்சா நல்லாயிருக்கும்.

அப்துல் : ஏன்னே போட்டி முடியிறவரைக்கும் டெய்லி 10 பின்னூட்டம் அவங்க பதிவில
போட்டு கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறீங்களா?

புருனோ : சே சே பைத்தியக்காரன் வேற லெவல்ல்தான் யோசிப்பாரு. பிரபல எழுத்தாளார்
யாராச்சும் இருக்கும்.

கேபிள் : அப்ப அவங்களுக்கு ஏத்த மாதிரி எழுதி அனுப்பிச்சுடுவோம். யாராயிருக்கும்
டாக்டர்?

புருனோ : நாஞ்சில் நாடன்

கேபிள் : அப்போ நாகர்கோயில் ஏரியாவில ஒரு சமூகப் பிரச்சினையை டச் பண்ணுவோம்.

புருனோ : சாரு நிவேதிதா

கேபிள் : ஜெயமோகனைத் திட்டி நாலு வரி எழுதிடுவோம்.

புருனோ : ஜெயமோகன்

கேபிள் : அப்போ கதையில சாருவையும் ரெண்டு வரி திட்டி வச்சுடுவொம்.

புருனோ : எஸ் ராமகிருஷ்ணன்

கேபிள் : ஒரு பயணக்குறிப்ப புகுத்திடுவோம்.

புருனோ : ச தமிழ்செல்வன்

கேபிள் : கொஞ்சம் கரிசல கரைச்சு ஊத்திடுவோம்.

புருனோ : பா ராகவன்

கேபிள் : நாலஞ்சு கோயிஞ்சாமிய தூவிடுவோம்.

புருனோ : நாகார்ஜூனன்

முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.

அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.

முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?

அப்துல் : அதில்லண்ணே. நாம அகநாழிகை,வடகரை வேலன் மாதிரி ஆளுங்களப் பிடிச்சு
இதே மாதிரி போட்டி நடத்துறோம். முடிவு இந்தப் போட்டிக்கு அப்புறம் அறிவிக்கப்
படும்னு சொல்லுறோம். 200 பேருக்கு பரிசு. ஆளுக்கு ரூபாய் 15,000. ஒரே கண்டிசன்
உரையாடலுக்கு கதை அனுப்பிச்சவங்க இதுக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்லிடுவோம்.

புருனோ : அப்படியும் சில பேர் மசியமாட்டாங்களே.

கேபிள் : நாம் வேணா பெங்குவின் பதிப்பகத்துல, ஹார்ட் பவுண்டுல ஸ்பெசல் எடிசனா
உங்க கதையெல்லாம் வரும். அதுவும் ஆங்கில மொழிபெயர்ப்போடனு ஆபர்
கொடுப்போம். அங்க கதை போட்ட எல்லாரும் வாபஸ்
வாங்கிட்டு இங்க கதைய கொடுத்துடுவாங்க.

முரளி : சரி, இதுக்கெல்லாம் ஆகிற செலவு?

அப்துல் : இன்னும் பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே. நம்ம பதிவுலகத்தப் பத்தி
தெரியாதா?

நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.

முரளி,கேபிள், புருனோ : சூப்பர். கலக்கிடுவோம் என்று மகிழ்ந்தபடியே கலைகிறார்கள்.

47 comments:

சென்ஷி said...

:-)

ஆஹா... !!!

கே.என்.சிவராமன் said...

:-)

கலக்கல்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

na.jothi said...

அண்ணே தலைப்பை இப்படி
மாத்துங்க
உரையாடல் சிறுகதைபோட்டிக்கு
எதிர் போட்டி நடத்த பிரபல பதிவர்கள்
ரகசிய ஆலோசனை

Vidhya Chandrasekaran said...

\\முரளி : ம்ம் அமலாவையும் அனுஷ்காவையும் பாராட்டிடுவோம். கேபிள்ஜி இதென்ன
கொத்து புரோட்டாவா? கரைச்சிடுவோம், தூவிடுவோம்னு.

அப்துல் : இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணே. என்கிட்ட ஒரு மாஸ்டர் பிளான்
இருக்குண்ணே.

முரளி : என்ன, நடுவர்கிட்டபோயி இனிமே நான் பாட மாட்டேன்னு சொல்லப்போறீங்களா?\\

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க. நேத்து குசும்ம்பன். இன்னிக்கி நீங்களா. நல்லாருங்கப்பு:)

முரளிகண்ணன் said...

வாங்க சென்ஷி.

நன்றி பைத்தியக்காரன்.

ஜே, நல்ல யோசனை.

நன்றி வித்யா

வெண்பூ said...

ஹை.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. சிறுகதைப் போட்டி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சது, போட்டிக்கு வர்ற கதைகளை விட இந்த மாதிரி நையாண்டிப் பதிவுகள் கலக்குது, இதுக்கும் யாராவது போட்டி அறிவிங்கப்பா.. :)))

ஆயில்யன் said...

//நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம்.
குசும்பன், கார்க்கி மாதிரி ஆளுங்க உடனே எதிர்ப்பதிவு
போடுவாங்க. வலையுலகமே பத்தியெறியும். நாம எஸ்கேப்.//


சூட்சுமத்தை புடிச்சிட்டாங்கய்யா புடிச்சிட்டாங்க :))))))

முரளிகண்ணன் said...

வெண்பூ, இதுவும் நல்ல ஐடியாதான்.

ஆயில்யன் கவுத்தீடாதீங்க.

ஸ்ரீ.... said...

ஒரு சந்தேகம்! உண்மையாகவே உரையாடலுக்கெதிராகப் போட்டி நடத்தப் போகிறீர்களா? :)
தலைப்பில் உரையடால் என்று இருக்கிறது. திருத்தி விடுங்கள். மற்றொரு நல்ல நகைச்சுவைப் பதிவு.

ஸ்ரீ....

Suresh said...

சூப்பர் அப்பு

Suresh said...

வித்தியாசமா கலக்கிடிங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது ரெண்டாவதோ மூணாவதோ பதிவுன்னு நினைக்கறேன் - காமெடியில பின்னறீங்க முரளி.

விஜய் ஆனந்த் said...

:-)))...

நாடோடி இலக்கியன் said...

எப்படி முரளி இப்படியெல்லாம்..
பின்றீங்க போங்க.

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்ரீ, திருத்தி விடுகிறேன்.

வாங்க சுரேஷ்.


மிக்க நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர், விஜய் ஆனந்த்

நர்சிம் said...

கூட்டத்துல என்னய சேக்கலயா முரளி??????ஹும்ம்.

anujanya said...

சும்மா மும்பையின் ஒரு மூலையில் முடங்கி இருக்கும் என்னை நேத்திக்கி குசும்பன் சென்னைக்கு இழுத்திட்டு போயிட்டாரு. அது கூட பரவாயில்ல. டாக்டர் பத்தி ஒரு வரி கூட இல்லையே - இதுல ஏதாவது மேட்ச் ஃபிக்சிங் இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது.

நீங்க அந்த குறைய தீர்த்துட்டீங்க.

கேபிள் - :))))))))))

அனுஜன்யா

பி.கு.: நான் கூட எவ்வளவு ரேட் ஆனாலும், போட்டிக்கு நடுவரா ஆகிடலாம்னு முயற்சி பண்றேன். சுந்தரும், பை.காரனும் ஃபோன எடுக்கவே மாட்டேங்கறாங்க.

முரளிகண்ணன் said...

வாங்க நாடோடி இலக்கியன்.


நர்சிம்.

\\கூட்டத்துல என்னய சேக்கலயா முரளி??????ஹும்ம்\\

தலைவரே, இது கதை எழுத திணர்ற
கூட்டத்தோட மீட்டிங்.

முரளிகண்ணன் said...

அனுஜன்யா,


\\நான் கூட எவ்வளவு ரேட் ஆனாலும், போட்டிக்கு நடுவரா ஆகிடலாம்னு முயற்சி பண்றேன். சுந்தரும், பை.காரனும் ஃபோன எடுக்கவே மாட்டேங்கறாங்க\\


ஜனாதிபதி ஆவதற்க்குரிய குறைந்தபட்ச வயதை விட அதிக வயது உடையவர்கள்
தான் நடுவராக இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இன்னும் ஓட்டளிக்க உரிமை வராத
உங்களை எப்படி?

கார்க்கிபவா said...

சிறுகதை நல்லாயிருக்கு. இதையே போட்டிக்கு அனுப்பிடுங்க

முரளிகண்ணன் said...

கார்க்கி,

\\சிறுகதை நல்லாயிருக்கு. இதையே போட்டிக்கு அனுப்பிடுங்க\\

ஒத்துக்குறேன். எனக்கு காமெடி
வரலைன்னு ஒத்துக்குறேன்.

நெக்ஸ்டு சினிமா பதிவுல மீட் பண்ணுறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன முரளி !

இதல்லாம் !

இந்த கூத்துல என்னையும் சேர்த்துகோங்க

கலக்கல் !....

முரளிகண்ணன் said...

அப்படியே ஆகட்டும் ஸ்டார் ஜான்,

Anonymous said...

கலக்கல் முரளி. நல்ல சிச்சுவேசன் காமெடி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நன்றி முரளி


என் வலைப்பதிவில், வாசகர்கள் எத்தனை பேர் வாராங்க‌

என்பதை எப்படித் தெரிந்து கொள்வது !!


கொஞ்சம் சொல்லுங்க முரளி !..

ரமேஷ் வைத்யா said...

காமெடி... சூப்பரு..!

லக்கிலுக் said...

சூப்பரப்பு! :-)

முரளிகண்ணன் said...

நன்றி வடகரை வேலன்.

ஸ்டார்ஜான்,

இணையத்தில் neocounter, statcounter ena பல இலவச கவுண்டர்கள் கிடைக்கின்றன.
அங்கு உங்கள் பிளாக்கை ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் அவர்கள் தரும் html கோடை
உங்கள் பிளாக்கர் டெம்பிளெட்டில் இணைத்துக் கொண்டால்

வருகைப்பதிவு கிடைத்துவிடும்.

முரளிகண்ணன் said...

நன்றி ரமேஷ்ணா.

நன்றி லக்கிலுக்.

புருனோ Bruno said...

//ஜனாதிபதி ஆவதற்க்குரிய குறைந்தபட்ச வயதை விட அதிக வயது உடையவர்கள்
தான் நடுவராக இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
//

ஐயோ... ஐயோ... தாங்கல :)

புருனோ Bruno said...

//என் வலைப்பதிவில், வாசகர்கள் எத்தனை பேர் வாராங்க‌

என்பதை எப்படித் தெரிந்து கொள்வது !!
//

கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்துங்கள்

Thamiz Priyan said...

கலக்கல் காமெடி! ஐடியா சூப்பரா இருக்கே.. ;-))

SK said...

முரளி ஒரு முடிவா தான் எறங்க இருக்கீங்க..

பதிவு எல்லாம் அட்டகாசம்.. நட்சத்திர வார பதிவு எல்லாம் செத்து.

தலை உங்கள் ப்ளாக்ல இருக்கற மெயில் ஐடிக்கு ஒரு மெயில் எழுதி இருக்கேன்.. பார்க்கவும்..

"உழவன்" "Uzhavan" said...

ஏண்ணே.. இவ்வளவு ஐடியா குடுகிறீயே.. யாருணே நீ? :-)

Thamira said...

சினிமா பதிவுகளைவிடவும் உங்களிடம் மிகவும் பிடித்திருப்பது இந்த நகைச்சுவைப்பதிவுகள்தான் முரளி.. இறங்கி விளையாடுறீங்க.. முந்தைய பதிவுகளுக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லிக்கிறேன்.. (எல்லாம் படிச்சாச்சு, பின்னூட்டம் போடத்தான் நேரமில்லாமல் போய்விட்டது)

Thamira said...

குறிப்பாக தேவர்மகன் பதிவுக்கு.. இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது..

Cable சங்கர் said...

சூப்பர்.. முரளி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))
கலக்கல்...

எம்.எம்.அப்துல்லா said...

அன்ணே நேத்து குசும்பன் இடுகையைப் படிச்சு ஆபிஸில் சிரித்துக் கொண்டே இருந்தேன். இன்னைக்கு இந்த இடுகை.

என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது :)))

Deepa said...

//நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். நாமளே அனானியாப் போயி அதில பெட்ரோல ஊத்துவோம். //

:-))))) முடியல சாமி

thamizhparavai said...

ROTFL...

எம்.எம்.அப்துல்லா said...

//நாம நடத்துற போட்டிக்கு இவர்கள்தான் நடுவர்னு எப்பவுமே சர்ச்சையில
இருக்கிற நாலு பேர கையக் காட்டுவோம். அத நாலு பேரு எதிர்த்து பதிவு
போடுவான். //

அடப்பாவி மக்கா....இந்த இடம் வரைக்கும் நா யோசிக்கிற மாதிரியே இருக்கே!!!!

:))))))))))

கோபிநாத் said...

சூப்பரூ ;)

புதுவைப்பிரபா said...

innum yettanai peru yemmarapporangalo!

தராசு said...

சினிமாவை விட நகைச்சுவைதான் கலக்கலா வருது தலைவரே, தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

இப்படிக்கு கலாய்ப்பவர்கள் ரசிகர் சங்கம்

வெட்டிப்பயல் said...

கலக்கல்...

அப்படியே பதிவுலகத்தைத் தாண்டி நகைச்சுவையில் இறங்கவும்...

goma said...

இந்தமாதிரி நடக்கும்னு தெரிஞ்சுதான் நானும் டிநகர் பக்கம் வந்து உங்க மீட்டிங்லே இன்விசிபிளா கலந்துகிட்டேன்.எல்லோருமா ஓட்டு மொத்தமா பேசி முடிவு எடுத்ததைப் பதிவில் சொல்லவே இல்லையே !!!
அதான்
“....கோமா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டுதான் போட்டியில் நுழையணும்..”னு முடிவெடுத்துங்களே .என்னங்க சகோதரர்களா , இப்படி மறைக்கலாமா?